Sunday 1 February 2015

BirD Watching - I



வீட்டில் இருக்கும் குட்டிஸ்களுக்கு ஒரு போட்டி என்று ஆரம்பித்தேன், மூன்று குட்டிஸ்கள் ரெடியாக வந்து என்ன போட்டி என்று நின்றார்கள். தினமும் உண்டியலில் ஒரு ரூபாய் அல்லது கிடைக்கும் காசுகளை போட்டு கொண்டு வருகிறார்கள் அதனால் போட்டியை அதை வைத்தே ஆரம்பித்தேன்.

இன்றைய நாள் முழுவதும் எவ்வளவு பறவையை நீங்கள் பார்த்து எழுதுகிறிர்களோ ஒவ்வொரு பறவைக்கும் ஒரு ரூபாய் என்றும், அதனால் யார் அதிகம் பார்கிறிர்கள் என்று தான் போட்டி. இதில் சில நிபன்தனைகள் உண்டு என்று சொல்ல ஆரம்பித்தேன்.

1. காகத்தை பத்து முறை பார்த்தாலும் ஒரு முறை தான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.அதே போல் தான் மற்ற பறவைகளுக்கும்.

2. பெயர் தெரியாத பறவை என்றால் என்னிடம் வந்த கேட்கலாம். அல்லது அதன் கலர்,  அலகு எப்படி இருக்கிறது என்று குறித்து வைத்து கொள்ளுங்கள்.

3. ஒரு பறவையில் ஆண் மற்றும் பெண் பறவைகளை பார்த்தால் அவை தனி தனியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

போய் பாருங்கள் என்றவுடன் ஒரு காகம் கண்ணில் பட்டது அதை குறித்து கொண்டார்கள். அன்றைய பொழுதுவரை வீட்டு தோட்டத்திலும், வீட்டை சுற்றியும், வீட்டு பக்கத்தில் இருக்கும் சின்ன பெட்டி கடைக்கு போகும் பொழுதும் பறவைகளை பார்த்து கொண்டே சென்றார்கள்.

இது அந்த குட்டிஸ்களுக்கும் புது விதமான அனுபவமாக இருந்தது. வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இவ்வளவு பறவைகள் நம் வீட்டுக்கு வருகிறதா என்று அவர்களே சொல்லி கொண்டார்கள்.

குட்டிஸ்கள் பார்த்த பறவைகள் உடனக்குடன் நானும் அவற்றை பார்த்து பறவைகளின் தமிழ் பெயர் மற்றும் ஆங்கில பெயர் என்று இரண்டையும் சொல்லி கொண்டே வந்தேன். வீட்டை சுற்றி பார்த்த பறவைகள்

1. அண்டங்காக்கை- Indian Jungle Crow

2.காகம்- House crow

3.உழவாரக் குருவி- Swift

4. கரிச்சான் -Black Drongo

5.கிளி- Parrot  (Male & female)

6.தவுட்டு குருவி -Yellow-Billed-Babbler

7.தேன்சிட்டு-Sun Bird (male & female)

8. மணிப்புறா-Spotted dove

9.மீன்கொத்தி- KingFisher
 
10.வல்லுறு-Shikra

11.கழுகு-Eagle 

12.மைனா- Myna
 
ஒரே நாளில் வீட்டை சுற்றி இவ்வளவு பறவைகள் வருகிறது என்பதே வீட்டில் இருப்பவர்களுக்கும், குட்டிஸ்கள் குறிப்பு எடுத்து காண்பித்த போதுதான் தெரிந்ததே அது வரை அவர்களை பொருத்து கிளி , தவுட்டு குருவி , காகம் இவைகள்தான் அவர்கள் கண்ணில் தென்பட்டதாகவும், ஆச்சரியமாக இருந்ததாக தெரிவித்தார்கள்.ஒவ்வொரு பறவையும் நானும் பார்த்தால் அதை உறுதிபடுத்தினேன்.

பறவை அவதானித்தால் பெரியவர்களுக்கும் சேர்த்தே என்பதும், நீங்களும் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் சொல்லி முடித்தேன் இனி இந்த பறவைகள் பற்றி சிறு குறிப்பு 

காகத்தை சுலபமாக பார்க்க முடியும் என்பதால் அடுத்து பறவை என்று பார்க்க சொன்னேன். அண்டங்காக்கை பறந்து வந்து தென்னை கிளையில் அமர்ந்ததை பார்த்து சொன்னார்கள்.

மின்னல் வந்து ஒரு தென்ன மரத்தை தாக்கியதால் அது பட்டு போய்விட்டது அதனால் அவை கிளைகள் இல்லாமல் நின்றிருந்தது, அதில் ஆண் மற்றும் பெண் பச்சை கிளிகள் அமர்ந்து விளையாடி கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
தேன்சிட்டு இங்கும் அங்கும் பறந்து கொண்டிருந்ததை குட்டிஸ்களுக்கு கூப்பிட்டு காண்பித்தேன்.

மதிய நேரத்தில் மிக உயரத்தில் கழுகு பறந்து கொண்டிருந்ததை பெட்டி கடைக்கு சென்று வந்த ஒரு குட்டிஸ் வந்து சொன்னதை அனைவரும் சென்று பார்த்தோம்.
உழவாரக் குருவி நிற்காமல் பறந்து கொண்டிருந்ததை குட்டிஸ்களுக்கு அது என்ன என்ற தெரியவில்லை எங்கயாவது அவை அமர்ந்தால் குறிப்பு எடுக்கலாம் ஆனால் தொடர்ச்சியாக பறந்து கொண்டே இருந்ததால் அவர்களுக்கு தெரியவில்லை அதனால் அவர்களை கூப்பிட்டு விளக்கி சொன்னேன் 

அதிகமாக பார்க்க முடிந்தது தவுட்டுகுருவிகள் தான், தொடர்ச்சியாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததை மாலை வரை குட்டிஸ்கள் பார்த்து கொண்டே இருந்தார்கள்.
நாள் முழுவதும் ஒரே ஒரு சிட்டு குருவியை கூட பார்க்க முடியவில்லை என்பதுதான் முக்கியமாக இங்கே பதிவுசெய்ய வேண்டும் அவை ஏன் இங்கு இல்லை  ,அவை எங்கே என்று குட்டிஸ்களும் கேள்வி கேட்டு கொண்டே இருந்தார்கள்.

சென்னையில் வீட்டு பக்கத்தில் நிறைய சிட்டு குருவி வருவதை நிறை முறை நான் பார்த்து இருக்கிறேன் ஆனால் ஊர் பக்கத்தில் ஏன் அவை குறைந்து விட்டது.   பொதுவாக அவை அதிகம் இல்லை என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு என்பதே உண்மை. அதை பற்றி சிட்டு என்றே புத்தகம் உள்ளது, அதில் சிட்டு குருவிகள் பற்றி அனைத்து செய்திகளும் இருக்கிறது.

மாலையில் ஒரே ஒரு கரிச்சான் மட்டும் அங்கும் இங்கும் பறந்து, கம்பிரமாக, மின் கம்பிகளில் அமர்ந்து சுற்றி பார்த்து கொண்டு இருந்ததை அரை மணி நேரம் பார்த்தோம். கரிச்சான்-இவற்றை சூழியல் எழுத்தாளர் மா.கிருஷ்ணன் நீண்ட வால் கொண்ட கருங்குருவி என்று குறுப்பிடுகிறார். இரட்டை வால் குருவி என்று இன்னொரு பெயரும் உண்டு இந்த பெயரில் மோகன் நடித்த ஒரு தமிழ் படமும் வந்து, ஜேசுதாஸ் பாடிய ராஜ ராஜ சோழன் நான் என்ற பாட்டு இன்றும் அனைவராலும் கேட்க்கப்படுகிறது.

ஒரே ஒரு வல்லுறு மட்டும் எதிர் வீட்டு மாடியில் அமர்ந்து இருந்ததை குட்டிஸ்களுக்கு காண்பித்து அவை என்ன செய்யும் என்று விளக்கி சொன்னேன்.

கொஞ்ச துரத்தில் இருந்த ஒரு மின் கம்பத்தில் அமரந்திருந்த மீன் கொத்தி பறவையை பார்த்து அவை என்ன பறவை என்று கேட்டார்கள். நான் அவற்றின் கலர் மற்றும் அலகு காண்பித்து இவைதான் மீன்கொத்தி பறவை இவற்றின் முதுகு நீல கலர் மற்றும் அவற்றின் அலகு நீண்டு இருந்ததை காண்பித்து வயல்களில் இருக்கும் தவளை மற்றும் மீன் இவற்றை உணவாக உண்ணும் என்றும் பக்கத்திலே வயல்வெளி இருத்தால் இங்கு நிறை மீன்கொத்தி பறவை இருக்கும் என்று கூறினேன்.  

தவுட்டு குருவி போல் நிறைய மைனாகளையும் வீட்டை சுற்றி பார்க்க முடிந்தது.கரிச்சான் மற்றும் மைனா இவைகளை நாம் அதிகமாக வயல்வெளியில் மேயும் மாடுகளை சுற்றி பார்க்க முடியும். இந்த முறை நடந்த IAS தேர்வில் கிராமத்து வயல்வெளியில் மேயும் மாடுகளின் மேல் அமர்ந்து, உண்ணிகளை சாப்பிடும் பறவை எவை என்ற கேள்வி கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இரவில், ஆந்தை தெரிகிறதா என்று பார்க்க சொன்னேன் குட்டிஸ்களும் அடிக்கடி சென்று பார்த்தார்கள் ஆனால் ஆந்தையை பார்க்க முடியவில்லை ,அவை எங்கு உட்காரும், ஏன் இரவில் மட்டும் வருகிறது என்ற கேளிவிகளுக்கு பதில் சொல்லி முடித்தேன்.
மறுநாள் முதல் குட்டிஸ்களே பறவைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெயர்களும் தெரிந்து விட்டதால் அவார்களே பறவைகளை பார்த்து, பெயர் சொல்லி  கொண்டிருந்ததை அடிக்கடி கேட்க முடிந்தது.

யார் எல்லாம் பறவைகள் பார்க்கலாம் ?

கண்பார்வை யாருக்கெல்லாம் தெரியுமோ அவர்கள் எல்லோரும் பார்க்கலாம் .........

சென்னையில் இருப்பவர்கள் வேடந்தாங்கல் சென்று பார்பதற்க்கு முடியவில்லை என்றால் வேளச்சேரி அடுத்து இருக்கும் பள்ளிகரணை சதுப்பு நிலத்தில் நிறைய பறவைகள் இருப்பதை, பார்த்து ரசிக்கலாம்.

பள்ளிகரணை சதுப்பு நிலத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு நிறைய செய்திகள் இருக்கிறது அதனால் அடுத்து பள்ளிகரணை பற்றி எழுத வேண்டும்.

போங்கள், போங்கள் போய் பறவைகளை பார்த்து இரசியுங்கள்...................................,,,,,,,,,

                                                     செழியன் 



No comments:

Post a Comment