Sunday 5 April 2015

Nest of Birds

வீட்டின் கூரையில் குருவிகள் கூடு கட்டி பார்த்து வளர்ந்த நாம், இப்பொழுது குருவிகளை தேடிக்கொண்டிருக்கிறோம் அப்போ அதன் கூட்டை எங்கே பார்ப்பது.  

வீட்டின் கரண்ட் பாக்ஸ்ஸில் கூடு கட்டி இருந்ததை பார்த்த பொழுது இப்படி தான் இருக்குமா கூடு என்று ஆச்சரியமாகவும் ஏன் கூறையில் கட்டுவதில்லை என்ற கேள்வியும் எழுந்தது. பல காரணங்களால் குருவிகள் குறைந்தது, மாடி வீடு வந்ததால் கூடுகளும் மறைந்தது.

ரொம்ப அருமையாக மெத் மெத் என்று இருந்தது எங்க வீட்டில் இருந்த கூடு. அதன் படத்தை பார்த்தல் தெரியும். எனக்கு என்னவோ அணில் கட்டியது போல் இருக்கிறது
ஏன்னென்றால் வீட்டில் அணில் தான் அதிகம் 

குருவிகள் முட்டை இடுவதற்க்காகவே கூடு கட்டுகிறது. முட்டை இட்டு குஞ்சு பொறித்து, குட்டி தானாக வெளியே சென்று இறை தேடும் வரை கூட்டில் இருக்கிறது அதன் பிறகு அந்த கூட்டிற்கு வேலையில்லை, வருவதுமில்லை..
ஒரே மாதிரி கோடுகள் எப்படி எல்லா வரிகுதிரைக்கும் இருக்காதோ அதேபோல் ஒவ்வொரு பறவையின் கூடும் வித்தியாசமாகவே இருக்கும் Bald Eagle என்ற Eagleதான் மிக பெரிய கூடு கட்டும் பறவை ஆகும். ஏறக்குறைய ஒன்பது அடி வரை இதன் கூடு அமைந்திருக்கும்.

மனிதன் ஓர் இடத்தில நிலையாக வாழ ஆரம்பித்தபொழுதுதான் அவன் வீடு பற்றியே சிந்திக்க ஆரம்பித்தான் ஆனால் பறவைகள் குறிப்பாக குயிலை தவிர மற்ற பறவைகள் கூடு கட்டுவது அதன் உடம்பிலேயே ஊறிய ஒன்று. மனிதன் மட்டுமே நீச்சல் கற்றுகொள்ளவேண்டும் ஆனால் விலங்குகள் அப்படி இல்லை எல்லா விலங்குகளுக்கும் நீச்சல் தெரியும் ஒட்டகத்தை தவிர.

தூக்கனாங்குருவி கட்டிய கூட்டை ஒரு முறை நேரில் பாருங்கள் அவ்வளவு அருமையாக மிக நேர்த்தியாக இருப்பதை காணலாம். மனிதனை தவிர எந்த பறவையும் தன் குட்டிகளுக்கு கூடு கட்டி தருவதில்லை, மரங்களையும் பிடித்து தருவதில்லை அதனாலேயே அதன் உலகத்தில் அண்ணன் தம்பிக்கு “இடம்” சம்பந்தமாக சண்டை என்பதே இல்லை.

எங்கோ ஓர் இடத்தில் படித்தது இங்கு நினைவுக்கு வருகிறது வலசை வரும் பறவைகள் இங்கு கூடு கட்டி குஞ்சு பொறிக்க வருவதில்லை அதன் தாய் நாட்டில் அளவுக்கு அதிகமாக இருக்கும் குளிர் காரணமாக உணவு கிடைக்காது அதனால் இந்தியாவுக்கு வந்து செல்கிறது இங்கு கூடு கட்டும் பறவைகள் இங்கயே இருக்கும் பறவைகள் தான்.

வலசை பறவைகளில், சில வேறுபாடுகள் உண்டு வெளி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருபவை மற்றும் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவை.இதில் வெளிநாட்டு பறவைகள் கூடு கட்டுவதில்லை.வட மாநில பறவைகள் தான் கூடு கட்டி குஞ்சு பொறிப்பவை.

நிலத்தில் வாழ்பவை ,நீரில் வாழ்பவை, நில மற்றும் நீரில் வாழும் உயிரினங்கள் என்று பல தரப்பட்டு உயிரினங்கள் இருப்பது போல். பறவைகளில் நீர்வாழ் பறவைகள் என்ற இனம் உண்டு. நம் வீட்டு தோட்டத்தில் பார்க்கும் சிட்டு குருவி,காகம்,பச்சை கிளி இவைகள் எல்லாம் நீர்வாழ் பறவைகள் கிடையாது. பூநாரை ,அரிவாள் மூக்கன் ,கரண்டி வாயன், செங்கல் நாரை ,கூழைகடா,வக்கா,கொக்கு,உன்னி கொக்கு ,பெரிய கொக்கு,பட்டதலை வாத்து....என்று நிறைய நீர்வாழ் பறவைகள் உண்டு. இந்த பறவைகளை, நாம் நம் வீட்டு தோட்டத்தில் பார்க்க முடியாது.பறவை சரணாலயங்களுக்கு வரும் பறவைகள் எல்லா இந்த பறவைகள்தான். இவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் வரை தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்டது.

கூடு கட்டுவதற்கு என்று ஒவ்வொரு பறவைகளும் ஒவ்வொரு முறைகளை கையாளுகிறது. ஆண் தூக்கனாங்குருவி கூடு கட்டி பெண்ணை வரவேற்கும். குயில்- காக்கை கூட்டில் முட்டை போடும்.புறா- கோவில் கோபுரம், இடிந்த மண்டபம் என்று தன் வாழ்க்கையை நடத்தும்.இருவாச்சி பறவை-பெண் பறவை பாதுகாப்பான ஒரு பொந்தில் அமர்ந்து அவற்றை சுற்றி சுவர் எழுப்பி ஆண் வெளியும் பெண் உள்ளேயும் அமர்ந்து மிக பாதுகாப்பாக இருக்கும் ஏதிரிகள் ஒன்றும் செய்யமுடியாது.

செம்பூத்து கட்டும் கூடு மிக மிக பாதுகாப்பகா இருக்கும் அடர்த்தியான முட்புதாரில், எதிரிகள் எளிதில் வரமுடியாத இடத்தில தான் கூட்டை கட்டும்.அதே போல் மீன் கொத்தி பறவை தன்னுடைய கூட்டை அமைக்க மிகுந்த மெனக்கெட்டு யாரலும் அணுக முடியாத அளவுக்கே கூடு இருக்கும்.
 

                                                                                                   -செழியன்

No comments:

Post a Comment