Monday 27 May 2019

Bird Watching-Interview The Hindu



இந்து தமிழ் நாளிதழில் சிறுவர்கள் தங்கள் விடுமுறையை பயன் உள்ள வகையில் கழிப்பதற்கு பறவை நோக்குதல் மிக சிறந்த முறையாகும்.

பறவை நோக்குதல் பற்றி இந்து தமிழ் நாளிதழுக்கு கொடுத்த சிறு பேட்டி 





Monday 20 May 2019

அந்த ஏழு நாட்கள்.....


தோட்டத்தில் 

கூகை(Barn Owl) இரவு பத்து மணியளவில் வீட்டு மாடியில் வந்து அமர்ந்ததுதான்  வீட்டு அருகில் எனக்கு முதல்  தரிசனம் ஆகும். பலமுறை வெளிநாட்டுப் பறவை என்றே பத்திரிக்கையில் படித்ததால் அவை வேறு நினைவுக்கு வந்து சென்றது.  பல வருடங்கள் முன்பு புள்ளி ஆந்தை, வீட்டிற்கு முன்பு இருக்கும் மின்கம்பியில் வந்து அமர்வதைப் பார்த்து உள்ளேன். வீட்டில் உள்ளவர்கள் சில நாட்கள் முன்பு கூகை வீட்டு முன் சுவரில் எட்டு மணியளவில் வந்து அமர்ந்து சில நிமிடங்கள் நகரவே இல்லை என்று தெரிவித்தார்கள். இப்பொழுதும்  வீட்டு அருகில் ஊர்வலம் சென்றவர்கள் வெடி வெடித்தார்கள் அதற்குக் கூட அசையாமல் மாடியில் அப்படியே இருந்தது. கிண்டி சிறுவர் பூங்காவில் இருக்கும் கூகை அமைதியே உருவாக இருக்கும். ஆனால் இங்குச் சுறுசுறுப்பாக இருப்பதற்கு அதன் வாழிடத்தில் இருப்பது அதிமுக்கிய காரணமாகும்.