Saturday 5 May 2018

உயிர் இதழ்- அறிமுகக் கூட்டம்


உள்ளே நுழைந்த உடன், திரு.சண்முகானந்தம் சார் கைகொடுத்து வரவேற்றார். வலது புறத்தில்  திரு.தியடோர் பாஸ்கரன் சார் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவருக்கு வணக்கம் சொன்னவுடன் எழுந்து நின்று கைகொடுத்து வணக்கம் சொல்லி அமர்ந்தது, ஆச்சரியமாக இருந்தது. அவர் அருகில் அமர சொன்னவுடன் சிறிது நேரம் பொதுவான தலைப்புகளை பேசிவிட்டு அடுத்து இருந்த  அறையில் உயிர் இதழ் அறிமுக கூட்டம் தொடங்கியது.

சண்முகானந்தம் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார், இது உயிர் இதழின் முதல் அறிமுகக் கூட்டம். இதுவரை இரண்டு இதழ்கள் வந்துள்ளன. உங்களின் இதழ் பற்றிய கருத்துகள் குறிப்பாக நிறைகளை விட, குறைகள் மேலும் இதழை செழுமைபடுத்தும் என்று கூறி   தியடோர் பாஸ்கரன் சாரை பேச அழைத்தார்.