Showing posts with label உயிர் இதழ். Show all posts
Showing posts with label உயிர் இதழ். Show all posts

Friday, 24 August 2018

உயிர் இதழ் அறிமுகம் - சூழியலாளர் நக்கீரன்

உயிர் இதழ் வெளியீடு 

உயிர் இதழ் தொடர்ந்து தனது அறிமுகத்தை பரவலாக்கி கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று சூழியல் எழுத்தாளர் திரு.நக்கீரன், உயிர் இதழை புத்ககக் கண்காட்சியில் வெளியிட்டார் இதழை மேடையில் பெற்றுக்கொண்டேன்.

வெள்ளிக்கிழமை மாலைபொழுது, புத்தகக்கண்காட்சியில் சூழியலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். பேச்சாளர்களாக திரு.நக்கீரன், திரு.நரசிம்மன், திரு.முருகவேல், திரு பகத்சிங் இவர்களுடன் திரு.சண்முகானந்தம், திரு.வள்ளியப்பன், திரு.வினோத்குமார் மற்றும் அடியேனும். என் அழைப்பை ஏற்று வந்திருந்த திரு.மாசிலாமணி, திரு.அரவிந்த்  இன்னும் நிறைய பேர்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது.

Saturday, 30 June 2018

ஏ.சண்முகானந்தம்- Wild Life Photographer


வன விலங்குகளை படம் எடுப்பது என்பது ஒரு கலை. இந்த துறையில் எந்த அளவுக்கு ஒருவர் சாதிக்க முடியும். என்ன வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் முழுநேரமாக இதில் ஈடுபடலாமா? தமிழகத்தில் காட்டுயிர் ஒளிப்படக்கலை(Wild Life Photography) பற்றி இந்த துறையில் மிகுந்த அனுபவமும், நிறைய புத்தகங்களை எழுதியவரும், வனவிலங்குக்கு என்று உயிர் என்ற பத்திரிக்கை நடத்தி வருபவர் திரு.ஏ.சண்முகானந்தம் அவரிடம் வைல்ட் லைப் போட்டோகிராபி பற்றிய நேர்காணலில் அவர் கூறியதாவது.

1990ஆம் ஆண்டு கேமரா பற்றிய ஓர் ஆண்டு பயிற்சியை முடித்து திருமண விழாக்களில் படங்கள் எடுத்து தொடங்கிய என் பயணம், பிறகு எங்கள் வீட்டை சுற்றி இருந்த நீர் நிலைகளில் காணப்படும் பறவைகள், பூச்சிகளை படம் எடுக்க தொடங்கினேன். நாளடைவில் திருமண விழாக்களில் இருந்து விலகி வனவிலங்குகளை போட்டோ எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து  விலங்குகள், பறவைகள், பூச்சிக்கள் எடுபதற்க்கு பல்வேறு காடுகளில் பயணம் செல்ல தொடங்கினேன்.

நான் தொடங்கிய தொன்னூறாம் ஆண்டுகளில் இப்போது இருபதுபோல், டிஜிட்டல் முறையில் படம் எடுக்கும் தொழில்நுட்பம் வரவில்லை. அதனால் பிலிம் ரோல் கொண்டே படங்களை எடுத்து வந்தேன். ஒவ்வொரு படமும் எடுத்து அவற்றை கழுவி பிரிண்ட் செய்து பார்த்தபிறகே அதன் தன்மை தெரியும். சரியாக இல்லையென்றால் மீண்டும் படங்களை எடுக்க முடியாது அதனால் முதல் முறையிலேயே அதிக கவனத்துடன் படங்களை எடுக்கவேண்டும். அதற்கு என்னுடையை ஒருவருட பயிற்சியும், அதனை தொடர்ந்து புகைப்படகளை வல்லுனர்களுடன் ஏற்பட்ட நட்பும், அவர்கள் கொடுத்த குறிப்புகளும் பயன்பட்டன.

Saturday, 5 May 2018

உயிர் இதழ்- அறிமுகக் கூட்டம்


உள்ளே நுழைந்த உடன், திரு.சண்முகானந்தம் சார் கைகொடுத்து வரவேற்றார். வலது புறத்தில்  திரு.தியடோர் பாஸ்கரன் சார் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவருக்கு வணக்கம் சொன்னவுடன் எழுந்து நின்று கைகொடுத்து வணக்கம் சொல்லி அமர்ந்தது, ஆச்சரியமாக இருந்தது. அவர் அருகில் அமர சொன்னவுடன் சிறிது நேரம் பொதுவான தலைப்புகளை பேசிவிட்டு அடுத்து இருந்த  அறையில் உயிர் இதழ் அறிமுக கூட்டம் தொடங்கியது.

சண்முகானந்தம் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார், இது உயிர் இதழின் முதல் அறிமுகக் கூட்டம். இதுவரை இரண்டு இதழ்கள் வந்துள்ளன. உங்களின் இதழ் பற்றிய கருத்துகள் குறிப்பாக நிறைகளை விட, குறைகள் மேலும் இதழை செழுமைபடுத்தும் என்று கூறி   தியடோர் பாஸ்கரன் சாரை பேச அழைத்தார்.