Monday 29 April 2019

Reserved Forest-பூசிமலை குப்பம்



கோடைக் காலம், பசுமையைப் போக்கி வெண்மையைக் கொண்டு வந்துவிடுகிறது. காப்புக்காடுகள் அதில் தப்பவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து உள்ள பூசிமலைக்குப்பம்  காப்புக்காட்டுக்குக்  காலை 6 மணியளவில் சென்றபொழுது  பசுமை இல்லா காட்டை பார்க்க முடிந்தது.

Blue-faced malkoha

பச்சை வாயன் (Blue-faced malkoha):

முதலில் வரவேற்ற பறவையாகும். கூச்ச சுபாவம் உடைய இந்த பறவை மிக அருகிலிருந்தபொழுதும் சிறிதும் நகராமல் ஒரு சிறு செடியில் விளையாடிக் கொண்டிருந்தது. முதன் முதலாக ராஜபாளையத்தில் இந்த பறவையைப் பார்த்தபொழுது இலைகள் அடர்ந்த மரத்தில் நமக்கு தெரியாதவாறு இருந்தது. இருந்தாலும் அங்கேயே ஒரு மணிநேரம் அமர்ந்து  முடிந்த அளவு பார்த்துவிட்ட நகர்ந்தோம். ஆனால் அப்படியே இங்கு தலைகீழ். இங்கும் நீண்ட நேரம் அதன் அருகிலிருந்தே பார்த்து நகர்ந்தோம். 

Wednesday 10 April 2019

மயில் நமது தேசீயப் பறவை..(Indian peafowl)


    

உசிரவீரம் என்ற மலையின் கீழ் இருந்த ஆசிரமத்தில் மருத்தன் என்ற பெயர் உடைய அரசர் ஒரு சமயம் ஒரு யாகம் நடத்தினார்..  யாகத்தில் கலந்துகொள்வதற்காக ரிஷிகளும், இந்திரஉலகத்தில் இருந்து தேவர்களும் வந்துசேர்ந்தார்கள்..  யாகத்தை முறியடிப்பதற்காக இலங்கையின் அதிபதியான ராவணனும் ஆசிரமத்துக்கு வந்துசேர்ந்தான்.  

Saturday 6 April 2019

வனச் சுற்றுலா.. (Forest Tour)


     

சமீபகாலங்களாக வனங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வனவிலங்குகளால் பாதிக்கப்படுவது  பற்றிய செய்தி அடிக்கடி வெளிவருகிறது..  வனங்கள் வனவிலங்குகளுக்கு உரிய வாழிடம் ஆகும்.  ஆனால், இதை உணராத சுற்றுலா செல்லும் பலரும் வனவிலங்குகளை பாதிக்கும்வகையில் செயல்படும்போது வனவிலங்குகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மோதல் ஏற்படுகிறது.  தேசீய அளவில் ஒவ்வொருவருடமும் 15% அளவுக்கு வளர்ச்சி அடைவதாகக் குறிப்பிடப்படும் ஒரு துறை ஆகும் சுற்றுலாத்துறை..  பொதுவாக தென்னிந்தியாவில் இந்த வளர்ச்சி விகிதம் ஏறக்குறைய 10% என்று கூறப்படுகிறது. 

Monday 1 April 2019

வண்ண வண்ண நிறங்களுடன் ஒரு அற்புதப் பறவை (Flame-throated bulbul)



புல்புல்கள் பெரும்பாலும் வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படும் பறவைகள் ஆகும்.  உண்மையில் தென்னிந்தியாவில் சுலபமாகவும், பல இனங்களாகவும், இந்தப்  பகுதி வனங்களில் காணப்படும் ஒரு பறவை இனம்தான் இவை.  ஒவ்வொரு வனப்பகுதியிலும் ஒன்றிரண்டு ரக புல்புல்கள்  பல சிறப்பம்சங்களுடன் இருப்பதைக் காணமுடியும்.  அந்த வனத்தின் மொத்தப் பறவைகளிடையே இவை ஆதிக்கம் செலுத்துவதாகவும் சில பகுதிகளில் காணப்படுகின்றன. 

  பசுமை மாறாக் காடுகள் முதல் வறண்ட முள் காடுகள் வரை பலவிதமான காடுகளிலும், சில சிறப்பு பண்புகளுடன் காணப்படக்கூடிய புல்புல்கள் காணப்படுகின்றன.  நம் காட்டுப்பகுதிகளில் வாழ்ந்துவரும் எல்லோராலும் விரும்பக்கூடிய ஒரு பறவை இனமே புல்புல்கள் ஆகும்.  மணிகண்டன் என்ற செல்லப்பெயருடன் ஒரு இன புல்புல் பறவை கேரளாவில் அதிகமாகக் காணப்படுகிறது.  இது உண்மையில் ஒரு காட்டில் வாழும் பறவையே ஆகும்.  ஆனால், இந்த ரகப் புல்புல்கள் பசுமை மாறாப் பகுதிகளையும், சோலைகளையும் விட்டுவிட்டு இலையுதிரும் காடுகளிலும், நட்டு வளர்க்கப்பட்ட மரங்களைக் கொண்ட காட்டுப்பகுதிகளிலுமே இவை அதிகமாக வாழ விரும்புகின்றன. 

   
Photo-wikipidea