Saturday 31 May 2014

Bird Man of Indian - 7

இந்தியாவின் பறவை மனிதன் - 7 

                                       - சிதம்பரம் ரவிசந்திரன்


சலீம் அலியின் படைப்புகளிலேயே மிகவும் புகழ் பெற்ற புத்தகமான ‘ The Book of Indian Birds விசிலர் எழுதிய ‘ Popular handbook of birds’ என்ற நூலின் பாணியில் எழுதப்பட்டது. 1941ல் வெளிவந்த இந்தப் புத்தகம் உடனடியாக 46000 பிரதிகள் விற்றுத் தீர்ந்ததுடன், பல இந்திய மொழிகளிலும், அயல் நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

1964ல் சலீம் அலி எழுதத்தொடங்கி 1974ல் நிறைவு செய்த பத்து தொகுதிகள் அடங்கிய, பறவைகள் பற்றி அறிவியல் உலகின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் The Hand Book of birds of india and Pakistan என்ற புத்தகத்தின் முதல் பதிப்பு இன்றும் போற்றி பாதுகாக்கப்படுகிறது. இந்த நூலின் இரண்டாம் பதிப்பு அவருடைய மறைவுக்கு மற்றவர்களால் Edit செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சலீம் அலி பல பிராந்திய பறவை ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். அவை ‘The Birds kutch’, “Indian hill birds” , ‘The birds of kerala’ , “The birds of Sikkim” , “Hand Book of Indian Birds’  போன்றவை ஆகும். இது தவிர சலீம் அலி சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் “ Commom Birds” என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்த நூல் இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நூல் ஆகும்.

இந்தப் புத்தகம் தேசீய புத்தக நிறுவனத்தால் National Book Trustடால் வெளியிட்டப்பட்டது. இது போன்ற விலை மலிவான பல நூல்களையும் எழுதி வெளியிடப்பட்டு உள்ளது.

1985ல் சலீம் அவருடைய தன் வாழ்கை வரலாறு நூலான The Fall of Sparrow நூலை எழுதினர். இந்தப் புத்தகத்திற்கு அலி இவ்வாறு பெயர் வைத்தது அவருடைய வாழ்வின் திசையையே மாற்றிவிட்ட காட்டுக்குருவி என்ற மஞ்சள் நிற தொண்டைப்பகுதியுள்ள குருவி ( Yellow Throted Sparrow ) நினைவாக இருக்கலாம்.

பாம்பே இயற்கை வரலாறு நிறுவனத்தின் நெடுநோக்கு பார்வையைப் பற்றியும் அவர் எழுதியுள்ளார்.அதில் அவர் பறவைகளை வேட்டையாடிக் கொன்ற காலம் சிறுது சிறிதாக மாறி பறவைகளையும் பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு வருவதைப் பற்றி 1986ல் அந்த நிறுவனத்தின் வெளியிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

சலீம் அலி எழுதிய எழுத்துக்கள் மற்றும் கடிதங்களின் தொகுப்பு அவருடைய கடைசி மாணவர்களில் ஒருவரான தாரா காந்தி என்பவரால் தொகுத்து 2007ல் வெளியிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அரசு சலீம் அலியை தனது நாட்டின் ‘சுற்றுச்சூழல் காவலனாக’மதித்துப் போற்றியது. Feburary 19, 1976 உலக ஐம்பது வருடகால உழைப்பாலும்,பனியாலும் இந்திய மக்களிடையே இயற்கை வளங்களைப் போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பி இந்தியாவின் எல்லையற்ற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மனப்பக்குவத்தை தோற்றுவித்துள்ளிர்கள்.

பூக்களையும், சரனாளையங்களையும் இந்தியாவின் குறுக்கும், நெடுக்கும் அமைக்க பெருமுயற்சி எடுத்துள்ளிர்கள். அரசாங்கத்தின் உயர்மட்டம் முதல் இந்தியாவின் குக்கிராமத்தின் சாதாரண பாமரன்வரை இந்த உணர்வை ஏற்படுத்தியது உங்களின் பெரும் சாதனையாகும். உங்களுடைய “The Book of Indian Birds” என்ற புத்தகமே ஒரு இயற்கை வரலாற்றுப் பெட்டகம் ஆகும். உங்கள் இந்தியாவின் நீள, அகலங்களில் எல்லாம் நன்கு அறியப்படும் ஒரு பெயர் ஆகும்.

பறவை ஆராய்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த சலீம் அலி என்ற மனிதகுலத்தின் மகத்தான உயிர்ப்பறவை 1987 ஜுன் 20ம் நாள் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பூமிக்கூட்டை நிரந்தரமாகப் பறந்துபோனது. பறவைகள் ஆராய்ச்சியில் உலகத்தின் முன்னால் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்கவைத்த அந்த மாமனிதன் “இந்தியாவின் பறவை மனிதன் “ என்று போற்றப்படுவது பொருத்தமானதே.

ஒரு சிறிய காட்டுக் குருவியின் கண்களில் வீசிய கடைசி நிமிஷ ஒளிபட்டு தன் வாழ்க்கையே அந்தப் பறவைகளின் உலகத்திற்காக ஒளி உமிழும் மெழுகாக மாற்றிக்கொண்ட அந்த மனிதனை இந்தியர்களாகிய நாம் விடிகாலையில் நம்மை எழுப்பும் காக்கை குருவிகளில் இருந்த இரவின் தனிமையில் இருக்கும்போதும் வானில் குரல் எழுப்பிச் செல்லும் ராத்திரி பறவைகள் வரை ஒவ்வொரு பறவையைப் பார்க்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு நவம்பர் 12ம் வாழ்வின் முக்கிய நாள் ஆகும். அன்றுதானே சலீம் அலி என்ற மனிதப் பறவை சிறகுகள் விரித்து வலசை வரும் பறவை போல விண்ணுலகில் இருந்து பூமிக்கு இறங்கி வந்தது.

 
                                         - பறவை பறந்து விட்டது.

Bird Man of India - 6


இந்தியாவின் பறவை மனிதன் - 6 

                           -   சிதம்பரம் ரவிசந்திரன்


1971ல் சுந்தர்லால் ஹோரா நினைவு சொற்பொழிவிலும்,1978ல் ஆசாத் நினவு சொற்பொழிவிலும் சலீம் அலி இந்தியாவில் பறவையியல் ஆய்வுகள் பற்றி விரிவாக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சலீம் அலி தன் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களையும் பறவைகள் பற்றி ஆய்வுகளில் ஈடுபாடு கொள்ள செய்தார். அவருடைய உறவினர்களான ஹுமாயுன் அப்துல் அலி மற்றும் லிக்யு ஆகியோர் பறவையியல் பிரிவில் நிபுணத்துவம் பெற்றதோடு, இயற்கை வரலாற்று நிறுவனத்தின் வளர்ச்சியிலும் பெறும்பங்காற்றினார்கள்.

சலீம் அலி பல முதுகலை மாணவர்களையும், பல முனைவர் பட்ட மாணவர்களையும் பறவையியல் பிரிவில் வழிக்காட்டியாக இருந்து சிறந்த முறையில் வழி நடத்தினார். சலீம் அலியின் வழிகாட்டுதலில் முதல் மாணவராக வெளிவந்த விஜயகுமார் அம்பேத்கார் என்ற மாணவர் முனைவர் பட்டத்திற்காக ஆராயிந்து வெளியிட்ட ஆராயிச்சி கட்டுரை சலீம் அலி முன்பொரு சமயம் பறவையியலில் ஈடுபாடு கொள்ள காரணமாக இருந்த மும்பை கடலோரத்தில் கிராமத்தில் ! அவர் கண்ட பாயா தூக்கனாங்குருவி (Baya Weaver bird ) களைப் பற்றியதாக அமைந்தது சிறப்பான ஒரு பொருத்தமாக இருந்தது .

இந்தியவில் பறவை ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைய சலீம் அலி பெருமளவில் தொண்டுகள் புரிந்தார். பறவையியல் தொடர்பாக நிதி உதவிகள் கிடைப்பதற்கு காரனகார்த்தாவாக அவர் இருந்தார். ICAR- Indian Council for Agriculture Researchல் பறவையியல் தொடர்பாக பொருளாதாரப் பிரிவு ஒன்றைத் தொடங்க காரணமாக இருந்தார்.

1980களில் சலீம் அலி இந்தியாவில் விமான தளங்களில் பறவைகள் அடிபடுவதை தடுப்பதற்காக ஒரு திட்டம் தொடங்கப்பட முக்கிய காரணமாக இருந்தார்.இந்தியப் பறவைகள் பற்றிய ஆராய்சிகள் வளர்ச்சி அடைய செய்ய சலீம் அலி பெரும்பணி ஆற்றினார். இந்தியா முழுவதும் சிதறிக் கிடந்த பரவையாளர்களை ஒருங்கிணைக்க அது பற்றி வெளியடப்படும் செய்தி இதழின் மூலம் முயற்சிகள் எடுத்தார்.

சுதந்தர இந்தியாவில் பறவைகள் பாதுகாப்பில் சலீம் அலியின் பங்கு மகத்தானது. அப்போது பிரதமர்களாக இருந்த நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் ஆதரவுடன் சலீம் அலி இந்தியாவில் பறவைகள் குறித்து ஆய்வுகளை மேம்படுத்த பணியாற்றினார். இந்திரா காந்தி அவர்களே பறவைகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டவர். 1942ல் இந்திரா காந்தி நைனிடால் சிறையில் இருக்கும்போது, டோராடுன் சிறையில் இருந்த நேரு சலீம் அலி எழுதிய ‘ இந்திய பறவைகள் ‘ (The Book of Indian Birds ) ன்ற புத்தகத்தை பரிசாக அனுப்பிவைத்தார். 

சலீம் அலி பரத்பூர் பறவைகள் சரணாலயத்தை வடிவமைப்பதிலும், அமைதிப் பள்ளத்தாக்கு தேசீயப் பூங்கா உருவாவதிலும் முத்திரைகள் பதித்தார். டூன் பள்ளிக்கு சலீம் அலி பார்வையாளராக அவ்வப்போது விஜயம் செய்வது வழக்கம்.இதனால் அவருக்கு மிக்க அரிதாக வழங்கப்படும் டூன் பள்ளியின் மாணவர் கௌரவும் வழங்கப்பட்டது. பறவைகள் பாதுகாப்பு பற்றி விழ்ப்புணர்வை அங்கிருந்த மாணவர்களிடம் ஏற்படுத்த சலீம் அலி பாடுபட்டதால் அவருக்கு இந்தப் பெருமை அளிக்கப்பட்டது.

சலீம் அலி மத நம்பிக்கைகள் அறிவியல் குறுக்கிடாக இருக்கக்கூடாது என்று கருதினார். வேடையடுதலைக் கடுமையாக எதிர்த்த சலீம் அலி அதே நேரத்தில் ஆராயிசிக்காக சில பறவைகளை நாம் தியாகம் செய்துதான் ஆகவேண்டும் என்று கருத்து கொண்டிருந்தார்.

1960களில் இந்தியாவின் தேசிய பறவையாக எந்தப் பறவையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடந்தன. சலீம் அலி ஆபத்தான நிலையில் அழிந்துகொண்டிருந்த கானமயில் (The Great Indian Bustard ) பறவையை தேசியப் பறவையாக வைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தார். ஆனால் Pea Fowl தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது.

அங்கிகாரங்களும், பட்டங்களும் தாமதமாக கிடைத்தாலும், பல பல்கலைகழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை கொடுத்து கௌவுரவித்தது. 1953ல் ‘ஜாய் கோபிந்தா லா கோல்டு மெடல் எசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கள் என்ற அமைப்பால் வழங்கப்பட்டது. இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் சார்பில் 1970ல் சுந்தர்லால் ஹோரா நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது. கௌரவ டாக்டர் பட்டங்கள் அலிகார் பல்கலைகழகம் (1958), டெல்லி பல்கலைகழகம்(1973), ஆந்திரா பல்கலைகழகம் (1978) ஆகிய பல்கலைகழகங்களால் வழங்கி பெருமை படுத்தப்பட்டார்.

1967ல் சலீம் அலி The Gold Medal of British Ornithalogist விருது பெற்ற முதல் வெளிநாட்டுக் குடிமகன் ஆவார். அதே வருடம் அவர் ஜெ.பால் கெட்டி வன உயரினங்கள் பாதுகாப்புக்கான பரிசுதொகையப் பெற்றார். இவ்வாறு கிடைத்த 100000 டாலார் பரிசை சலீம் அலி இயற்கை பாதுகாப்பு நிதியம் ஒன்றை அமைத்து வன உயிரினங்கள் மற்றும் பறவைகள் பாதுகாப்புக்காக அளித்தார்.

1969ல் ஜான்.சி.பிலிஸ அமைப்பால் வழங்கப்படும் சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு unionக்கான நினைவு மெடலை பெற்றார்.1973ல் சோவியத் union அசொசியேசன் of Medical science அமைப்பு அவருக்கு பாவ்லாவ் நினைவு மெடல் வழங்கி கௌரவித்தது. அதே வருடம் ‘ ஆர்டர் of தி கோல்டன் ஆர்க் ‘ என்ற விருது வங்கி நெதர்லாந்து அரசால் பெருமைப்படுத்தப்பட்டார். இந்த விருது நெதர்லாந்து  அரசியாக அப்போது இருந்த இளவரசர் பெர்னார்டு அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்திய அரசு சலீம் அலியை 1958ல் பத்ம பூஷன் விருது வழங்கியும், 1976ல் பத்ம விபுஷன் வழங்கியும் அலங்கரித்தது. 1985ல் ராஜ்யசபா உறுப்பினராக நியாமிக்கப்பட்டார்.

இந்திய அரசாங்கம் அவருடைய மறைவுக்குப் பின் கோவையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தை (Salim Ali Centre for Ornithology and natural history ) wiruviyathu. பாண்டிச்சேரி பல்கலைகழகம் சலீம் அலி சுற்றுசூழல் மற்றும் சூழல் அறிவியல் பள்ளி (Salim Ali School of ecology and environmental sciences ) நிறுவியுள்ளது. கோவா அரசு சலீம் அலியின் பெயரில் பறவைகள் சரணாலயம் அமைத்துள்ளது. கேரளாவில் வேம்பநாடு பகுதியில் உள்ள தட்டக்காடு பறவைகள் சரணாலயம், அவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது.

பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனம் மும்பையில் அமைந்துள்ள பகுதிக்கு சலீம் அலி சவுக் என்று பெயரிடப்பட்டுள்ளது.கிட்டி தொங்கலாங்யா என்பவர் பாம்பே இயற்கை வரலாறு நிறுவனத்தில் இருந்த ஒரு அபூர்வமான வௌவாலுடைய மாதிரியைக் கண்டறிந்தார். அதற்குள் அவர் Latidens Salim Ali என்ற பெயரிட்டார். இந்த அபூர்வ வௌவால் இனம் அவ்வகை ஜீன் இனத்திலேயே (Genus latidens ) தற்போது உலகில் இருக்கும் ஒரே மாதிரி வடிவம் ஆகும்.

மறங்க்கொத்திகளில் ஒரு துணை இனத்திற்கு 1972ல் சலீம் அலியின்  நினைவாக Dinopium Benghalense Tehminae என்று விசிலராலும், கின்னோர் என்ற பறவை ஆர்வலராலும் பெயரிடப்பட்டது.சலீம் அலி பாம்பே இயற்கை வரலாறு நிறுவனத்தின் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை பறவைகள் பற்றி அறிவை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியதோடு,விழிப்புணர்வையும் உண்டாகியது.அவர் எழுதிய பல படைப்புகள் இன்னும் அச்சிடப்படாமலேயே உள்ளன.

1930ல் அவர் எழுதிய ‘Stopping by the Woods on a Sunday Morning என்ற கட்டுரை 1984ல் அவருடைய பிறந்தநாளன்று ‘ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் மறுபடியும் வெளியிடப்பட்டது. 


                                  -  பறவை அடுத்து பகுதியுடன் பறந்து போகும் 


Bird Man of India - 5



இந்தியாவின் பறவை மனிதன் -5

                           - சிதம்பரம் ரவிசந்திரன்



சில மாதங்கள் சலீம் நீலகிரியில் உள்ள கோத்தகிரியில் தங்கினார். கோத்தகிரியில் தங்கியிருந்த K.M. ஆனந்தன் என்பவருடைய அழைப்பின் பேரில் சலீம் அங்கு சென்றார். ஆனந்தன் முதல் உலகப் போரின்போது ராணுவத்தில் மருத்துவராக மொசபடோமியாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அதற்குப் பிறகு அவருக்கு லாங்வுட்ஷோலாவில் வசித்து வந்த திருமதி kin loch மற்றும் அவருடைய மருமகன் R.C.Morris ஆகியவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. சலீம் அலி பறவைகள் பற்றிய ஆய்வுகளை நடத்த அப்போது இந்தியாவில் பல பாகங்களிலும் சிதறியிருந்த சிறு சிறு சமஸ்தானங்களுடைய உதவியை நாடினார். இதற்கு அந்தந்த குறுநில மன்னர்களுடைய ஆதரவும்,நிதி உதவியும் பெறுவது அவசியம் என்பதை அவர் உணர்ந்தார்.
Front Cover

இயற்கையைப் பற்றி ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த அரசர்களிடம் பறவைகள் மீதும் ஈடுபாடு ஏற்படும்படி செய்தார் சலீம் அலி. அதற்கு பலனும் கிடைத்தது. ஆச்சிரியப்படும் வகையில் ஹைதராபாத் நிஜாம் சலீம் அலிக்கு பச்சைக்கொடி காட்டினார். மூன்று மாத கல ஆய்வுகளுக்காக நிஜாம் சலீம் அலிக்கு ரூபாய் 3000 கொடுத்தார். அன்றைய காலகட்டத்தில் அது ஒரு பெரிய தொகையாகும். இந்த அருமையான வாய்ப்பைப் பெற்ற மகிழ்ச்சியில் சலீம் அலி தன்னுடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு காளை மாட்டு வண்டியில் பயணத்தைத் தொடங்கினார். பறவைகளுடைய வடிவம், அடை காக்கும் விதம், வாழிடம் போன்ற எல்லா அம்சங்களையும் பற்றிய அவருடைய ஆய்வு பறவைகள் குறித்து ஆராய்ச்சியில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தது.

இதுவே பின்னாளில் ‘ ஹைதராபாத் சர்வே’ என்ற பெயரில் புகழ் பெற்றது. வெற்றிகரமாக நிறைவு பெற்ற இந்த ஆய்வுகளுக்குப் பிறகு திருவிதாங்கூர், கொச்சி, போபால், இந்தூர், குவாலியர், தார், மைசூர், பஹவல்பூர், குஜராத், பெஸட்டர் ஆகிய இடங்களுக்கும் சிறப்பு விருந்தினராகச் சென்று சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்சிகளை நடத்தினார். இந்த ஆய்வுகளில் அவருக்கு பண உதவியும், ஆதரவும் நல்கியவர் Hugh Whistler என்பவர் ஆவார்.

விசிலர் அவர்களே ஒரு சிறந்த பறவையில் நிபுணராக இருந்தார். இவர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட ஆழ்ந்த நட்புக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. விசிலர் எழுதி இதழொன்றில் வெளியிட்ட பறவைகள் பற்றிய கட்டுரை ஒன்றில் விசிலர் Greater Racket Tailed Drongo என்ற பறவையைப் பற்றி தவறாக ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்.இதை படித்த சலீம் அலி இந்தக் தவறை சுட்டிக்காட்டி அந்த இதழுடைய ஆசிரியருக்கு கடிதம் எழுதினார். முதலில் விசிலர் முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு இந்தியன் தான் கண்டறிந்ததைப் பற்றிக் குறை சொல்லி தன் புலமையை குற்றம் சொன்னதில் எரிச்சல் அடைந்தார். 

பிறகு தான் சேகரித்து வைதிருந்த அந்தப் பறவையின் specimenனை மாதிரியை சோதிதப் பார்த்தபோதுதான் விசிலருக்கு சலீம் சொன்னது சரி என்றும், தான் எழுதியது தவறு என்றும் தெரியவந்தது. உடனே விசிலர் தன் தவறுக்கு வருந்தி சலீமுடன் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். இதில் விசிலர் சலிமுடைய நெருங்கிய நண்பராக மாறினார்.

இதற்குப் பிறகு விசிலர் சலீம் அலிக்கு மற்றொரு சிறந்த பறவையியல் ஆய்வாளரான Richard Meinertzhagen என்பவரை அறிமுகப்படுத்தினார். இருவரும் ஆப்கானிஸ்தானில் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவார்கள்.
Front Cover

கேரளாவில் சலீம் அலி வந்தபோது திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் சலீம் அலிக்கு பறவை ஆய்வுக்கு ரூபாய் நாற்பத்தைந்து ஆயிரம் வெகுமதியாக தந்தது. தென்னிந்தியவின் அழகொழுகும் மலைத்தொடர் சலீம்  மனதைக் கவர்ந்தது.தன் சுயசரிதை நூலில் சலீம் அலி இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பெரியாறு நதிக்கரையில் தட்டக்காடு பகுதியின் இயற்கை வனப்பு அவர் மனதைக் கொள்ளை கொண்டது. அவருடைய பெயராலேயே வழங்கப்படுகிறது. கேரளாவில் அவருடைய பறவைகள் ஆய்வுகள் மக்களிடையே செல்வாக்கு பெற்றதாக இருந்தது. மக்கள் அவரைப் பார்ப்பதற்காக இன்று இந்த அளவுக்கு புகழ் பெற்றிருப்பதற்கு சலீம் அலியின் முயற்சிகளால்தான்.

1939ல் சலீம் அலிக்கு உற்ற துணையாக இருந்துவந்த அவருடைய மனைவி தெஹ்மினா ஒரு சிறு அறுவை சிகிச்சைக்குப்பின் மரணம் அடைந்தார். இந்தப் பிரிவு சலீம் அலியை மிகவும் பாதித்து. இதற்குப் பிறகு சலீம் அவருடைய சகோதரி காமூ குடும்பத்தாருடன் வசிக்க ஆரம்பித்தார்.

சலீம் அலி மனைவி இறந்த பிறகு தன் முழுநேரத்தையும் பறவை ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார். மலைக்காடை (Mountain Quail ) என்ற பறவையைப் பற்றி ஆய்வுகளில் சலீம் அலியால் முழுமையாக வெற்றி காண முடியவில்லை. இன்று வரியும் அந்தப் பரவையைப் பற்றி அதிக விவரங்கள் அறியப்படவில்லை.
சலீம் பறவைகளைப் படம் பிடிப்பதில் ஆர்வம் ஏற்ப்பட்டது. ஜிப்சன் என்ற பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருந்த Loke Wantho என்பவருடன் இணைந்து பறவைகள் படம் எடுப்பதில் ஈடுப்பட்டார். சலீம் அலிக்கு பறவைகளை அவற்றின் இயற்கையான சூழ்நிலையிலேயே ஆராய்வதில் ஆர்வம் ஏற்ப்பட்டது. Lokeடன் சேர்ந்து சலீம் பறவைகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். 

Loak பறவைகள் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர் என்பதோடு, சலீம் அலிக்கு பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனதில் செயல்பட நிதி உதவியும் செய்தார். மொகலாயர்கள் ஆட்சிகாலத்தில் இயற்கை வரலாறு பற்றியும், இந்தியாவின் இயற்கை வரலாறு பற்றியும் சலீம் ஆர்வம் காட்டினார். இன் இந்த விஷயங்களைப் பற்றி பல கட்டுரைகளை ஆராய்தறிந்து எழுதினார். 

1947ல் நிறுவனத்தின் வெளியிட்டுக்கு ஆசிரியராக சலீம் அலி பொறுப்பேற்றார். அதன் பின்னர் நிறுவனத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். அவ்வப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த பண்டிட் நேருவுக்கு பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனத்திற்காக நிதயுதவி கோரி கடிதம் எழுதினர்.


                                        -பறவை வரும்