Wednesday 9 July 2014

Birds - Humming Bird



விசிலடிக்கும் சிறகுகள்

                - சிதம்பரம் ரவிசந்திரன்
  
          இந்தப் பறவைக்குப் பாடத்தெரியாது ஆனால் இவற்றின் பெயரே பாட்டோடு சம்பத்தப்பட்ட ஒரு வார்த்தையிலேயே அமைந்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். அவைதான் ஹம்மிங் பறவை ( Humming Bird ). இந்தப் பறவைகள் இவற்றின் சிறகுகள் ஏற்படுத்தும் விசில் போன்ற ஓசையே இவை பாடுவதைப்போலத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதனால் இதை விசில் என்றும் கூறுவதுண்டு இந்தப் பறவைகள் ஒரு திறன் மிக்க ஹெலிகாப்டரைப் போல பக்கவாட்டிலும், மேலும், கீழும், முன்னும், பின்னும் என்று எல்லா திசைகளிலும் பறக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது ஆகும். இவற்றால் நடுவானில் அசையாமல் அப்படியே நிர்கக்கூட முடியும்.

சுமார் 600 மைல் தூரம்கூட இவை தென் அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வரை கூட வலசை போக முடியும். நீண்டதுரம்  பறக்கவல்லதால் இவற்றின் கால்கள் வலுவுடையதாக இருப்பதில்லை. இதனால் இவை மரங்களின் மீது தொற்றிக்கொண்டு மட்டும் உட்காரமுடியும். இவற்றின் பல வண்ணத் தோகைகள் பல நிறங்களாலான இறகுகளால் ஏற்படுவதில்லை. இவற்றின் சிறகுகளில் உண்டாவதில்லை. இறகுகளின் மேற்பகுதியில் பிரிசம் போன்று முப்பட்டக செல்லகள் அமைந்துள்ளன. ஒளி இவற்றின்  மீது படும்போது பல வண்ணங்களில் ஒளிர்கிறது. இந்த அமைப்பால் ஆண் பறவை பெண் பறவையுடன் உறவு கொள்கின்றன. இந்த திட்டுகளை வைத்தே இந்தப் பறவைகள் தங்கள் எல்லைக்குள் ஊடுருவும் தேன் குடிக்கும் பூச்சிகளை மிரட்டி விரட்டுகின்றன.

பரப்பதிலேயே தங்கள் சக்தியின் பெரும்பாலான பகுதியை செலவழிக்கும் இந்த ஹம்மிங் பறவைகள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் இடையில் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக ஆற்றலைப் பெறுவதற்காக பழரசங்களை அருந்துவதுபோல இவை தங்கள் நின்டதுரப்பயனத்தின் இடையில் அவ்வப்போது தேன் அருந்துகின்றன .

10% முதல் 15% வரை தங்கள் நேரத்தை உணவு அருந்துவதிலும், 75% முதல் 80% வரை உணவை செரிப்பதிலும் செலவழிக்கின்றன.12% முதல் 25% தேனில்வரை சர்கரையின் அளவு இருக்கும் பூக்களில் மட்டும் இவை தேன் அருந்துகின்றன. தேன் குறைவாக இருக்கும் மலர்களை தவிர்துவிடுகின்றன. மற்றொரு சிறப்பு இவை மகரந்தசேர்க்கை செய்யும் பூக்களில் சுக்ரோசின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் பூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் பூக்களில் பிரக்டோசும், குளுகோசும் அதிகமாக இருக்கும். புரஊதாக்கதிர்களை உள்ளவாங்கிகொள்ளும் மலர்களை இந்த ஹம்மிங் பறவைகளால் மட்டுமே பார்க்கமுடியும். ஏனென்றால் இவைகளால் புரஊதாக்கதிர்களை ஒட்டிய ஒளிக்கதிர்களை பார்க்கமுடியும்.

இது பெரும்பாலான பூச்சிகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால் இப்படிப்பட்ட பூச்சிகளில் மற்ற பூச்சிகளால் தேன் எடுக்கப்படாமல் இந்தப் பறவைகள் குடிப்பதற்கு தேன் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட நிறங்கள் கொண்ட பூக்களையே இவை தேடிச்செல்கின்றன. சிகப்பு , இளம் சிகப்பு , காவி, ஆகிய நிறங்கள் உள்ள பூக்களைய்யே இவை அதிகம் தேடிச்சென்று இவை தேன் குடிக்கின்றன. இவற்றின் நாக்கின் பக்கவாட்டில் தேனைச் சேகரிக்கும் வரிப்பள்ளங்கள் காணப்படுகின்றன. அலகுகள் சுருங்கும்போது இவை தேனை உள்ளே இழுதுக்கொள்கின்றன.

பொதுவாக இவற்றின் அலகுகள் நீண்டு நேராக இருக்கும். ஆனால் சில சிற்றினங்களில் அலகுகள் தேன் இருக்கும் பூக்களுக்கு ஏற்ப வளைந்தோ, அரிவாள் போன்ற அமைப்பிலோ, மேல் நோக்கியோ, சில வகை மீன் பற்கள் போன்று முட்கள் போன்ற அமைப்புடன் அவற்றின் நீண்ட அலகுகளில் அமைந்ததாகவோ காணப்படுகிறது. அலகின் இருபாகங்களும் இறுக்கமாக மூடிக்கொள்ளும் அமைப்பு உடையவை. தேனை எடுக்கும்பொழுது மட்டும் லேசாக அலகைத் திறந்து நாக்கை பூவின் உள்ளே நுழைத்து தேனை உறிஞ்சுகின்றன.
          இவை ஒவ்வொரு நாளும் தங்களுடைய உடல் எடைப்போல இரண்டு மடங்கு தேனைக் குடிக்கின்றன. தேன் மட்டும் குடித்தால் போதுமான அளவுக்கு ஊட்டசத்து கிடைக்காது என்பதால் புரதம், வைட்டமின்கள் போன்ற பிற சத்துகளைப் பெறுவதற்காக சிறிய பூச்சிகளில் , சிலந்திகள் போன்றவற்றையும் உண்கின்றன.

பெண்பறவை ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகளை இடுகிறது. கூடுகளை பென்பரவைகளே கட்டுகின்றன. மரக்கிளைகள் பிரியும் இடங்களிலோ, இலைகளின் மேலேயோ கிண்ண வடிவத்தில் கூடுகளைக் கட்டுகின்றன. மரத்தில் இருக்கும் சிலந்திகள் வலையை கூடு கட்டப் பயன்படுத்துவதால் முட்டையில் இருக்கும் குஞ்சு பொரிந்து வெளியே வந்து பெரிதாக வளர வளர கூடு விரிந்துகொடுக்கிறது.

மத்தியதரைக்கடலில் இருக்கும் ட்ரினிடாடு & டொபாகோவை ஹம்மிங் பறவைகளின் நாடு என்று கூறுவார்கள். அந்த நாட்டின் ரானுவச்சினத்தில், ஒரு சென்ட் நாணயத்திலும், அவர்களின் தேசிய விமானசேவை நிறுவனமான கரீபியன் எர்லைன்சிலும் ஹம்மிங் பறவைகள் இடம்பெற்றுள்ளன. பல உலக நாடுகள் ஹம்மிங் பரவைக்களுக்காக தபால்த்தளைகளையும் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
 

Thursday 3 July 2014

Birds - Pigeon

 





நிறைய பறக்கும் உயிரிணம் இருந்தாலும், மனிதன் புறாவை சேவல் , கோழியை போல் சுதந்தரமாக வளர்த்தான் . கிளி, லவ் பார்ட்ஸ் போன்ற பறக்கும் உயிரினங்களை கம்பி போட்ட கூண்டில் வளர்த்த மனிதன் புறாவை அவன் சுற்றி திரிவதுபோல் சுற்றவிட்டான்.

எங்கு சென்றாலும் தன் இருபிடத்திற்கே திரும்பி வரும் என்பதாலேயே புறாவை சுதந்திரமாகவும் ,பந்தயத்திலும் பயன்படுத்த ஆரம்பித்தான்.

 இன்று தகவல் பரிமாறுவதற்கு நிறைய வழிகள் உள்ளது ஆனால் ராஜாக்கள் புறாவையே தகவல் சொல்லுவதற்கு பயன்படுத்தினார்கள் என்று எல்லோருக்குமே தெரியும். பதக்கம் பெற்ற புறாக்களும் வரலாற்றில் உண்டு இம்சை அரசன் புலிகேசி படத்தில் வடிவேல், தூது வந்த புறாவை சூப்பு வைத்து குடித்துவிடுவதால் அதனால் போர் வருவதை இங்கு நினைவுக்கு வருகிறது.

வரலாற்றில் மிக மோசமான புறா அழிப்பு

19ம்போதாவது நூற்றாண்டில், வட அமெரிக்காவில் 250 கோடி Passenger Pigeon கள் இருந்தன. ஒரே நேரத்தில் பத்து இலட்சம் Passenger Pigeon மேல பறந்து போகும்போது ஒரு மணி நேரத்திற்கு சூரிய ஒளியை மறைத்து இருட்டாகிவிடும். உள்ளுரில் ஏற்ப்பட்ட சண்டையால் இந்த வகை புறாக்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டது.கடைசி புறா 1914ஆம் ஆண்டு சுட்டு சாகடிக்கப்பட்டது.

நீரை உறிஞ்சு குடிக்கும் ஒரே பறவையினம் புறாதான். இவை மட்டும்தான் மனிதன் நீரை குடிப்பதுபோல் உறிஞ்சு குடிக்கும்.எல்லா பக்கமும் தன் தலையை திருப்பி பார்க்கும் திறனும் புறாக்களுக்கு உண்டு.

ஏறக்குறைய எல்லா கண்டத்திலும் புறாக்கள் உண்டு ஆர்டிக், அண்டார்டிகா, மற்றும் சகாரா பாலைவனம் தவிர்த்து. புறாக்களை வீட்டில் வளர்க்க கூடாது என்ற ஐதிகம் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு.புறாக்களை மருத்துவத்திற்க்கும் பயன்படுத்துகிறார்கள் இலக்குவம் அடித்தவர்களுக்கு புறா சூப்பு கொடுப்பது உண்டு, அதனால் பயனுண்டா இல்லையா என்று தெரியாமலே புறாக்கள் சாகடிக்கப்பட்டு வருகிறது. இதற்க்காகவே இன்றும் நிறை பேர் புறாக்களை வளர்த்து வருகிறார்கள்.

இந்தியாவின் கலாச்சரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் என்று இருப்பது போல் புறாக்களும் தனது ஆயுள்முழுவதும் ஓர துணையுடன் இருக்கும். 

பதக்கம் பெற்ற புறா:

முதல் உலகப் போரின்பொழுது பிரெஞ்ச் நாட்டில் இருந்த ஒரு புறா தன் நாட்டு போர் வீரர்களை தகவல் பரிமாற்றுவதன் மூலம் காப்பாற்றியது. அந்த புறாவிற்கு பிரெஞ்ச் நாட்டு அரசு “ Croix de Guerre “ என்ற மெடலை அதனுடைய Heroic Service க்கு  அளித்தது. புறாவின் பெயர்தானே முக்கியம்.,“Cher Ami” (Dear Friend)  அதாவது அன்புள்ள நண்பன் என்று பெயர்.

அடுத்த ஹீரோ :

இரண்டாம் உலகப் போரின்பொழுது ஏறக்குறைய தகவல் பரிமாற்றங்கள் முற்றிலும் இத்தாலியில் குறைந்து போனது. பிரிட்டிஷ் படைகள் இத்தாலிக்குள் இறங்கிவிட்டன அப்பொழுதுதான் நமது ஹீரோ களத்தில் இறங்கினார் 20 miles 20பது  நிமிடத்தில் பறந்து சென்று தகவலை அளித்தது. அதனால் நமது ஹீரோவுக்கு “ Dickin “  என்று மெடலை அதனுடைய தைரியத்திற்கு பரிசளிக்கப்பட்டது. நமது ஹீரோ பெயர் – G.I. Joe “ .

புறா வியாபாரம் :

நாம் புறா வளர்த்தல் அது அபசகுனம் என்று நினைத்து கொண்டுஇருக்கிறோம் ஆனால் புறா இன்று மிக பெரிய வியாபாரமாக வளர்ந்து இருக்கிறது. ஒரு பந்தய புறா சமிபத்தில் 132,517.00 $  அதாவது இந்திய மதிப்பில் 7,68,57366 மதிப்பில் விற்றது. இதற்க்கு முன்பு ஒரு பந்தய புறா 73800.00 $ அதாவது 42,80,400. ரூபாய்க்கு விற்றதுதான் சாதனையாக இருந்தது.

புறாக்களை நாம் மற்ற பறவையை போல் மரத்தில் பார்க்க முடியாது அவை எப்பொழுதுமே பெரிய மதில் சுவர், கோவில் கோபுரத்தில், பாழடைந்த மண்டபத்தில், பெரிய பெரிய கட்டிடத்தில் தான் பார்க்க முடியும். கோயில் புறா என்றே ஒரு இனம் இருக்கிறது அவை பார்பதற்க்கு ஒரே மாதிரி இருக்கும். பெரும்பாலும் கோயில் புறாக்களை நாம் வீட்டில் வளர்க்க முடியாது. 

புறாக்களுக்கு மிக பெரிய எதிரியே மனிதன்தான். மனிதனாலே பல கோடி புறாக்கள் அழிக்கப்பட்டுள்ளது. இயற்கையான புறா எதிரி யார் என்றால் ராஜாளி. ஆனால் ராஜாளியை விட மனிதன் தான் அதிக அளவில் புறாக்களை அழிதுள்ளான்.

மிக பெரிய புறா பந்தயம்:

 

60000 புறாக்களை பிரெஞ்சுல் உள்ள Nantes என்ற இடத்தில் இருந்து விடப்பட்டது அவை தெற்க்கு இங்கிலாந்து நோக்கி செல்லவேண்டும் மொத்த புறாக்களில் ஒரு சில புறா மட்டுமே தெற்க்கு இங்கிலாந்துக்கு சென்றடைந்தது.

புறாக்களை விரும்பிய பிரபலங்கள் :
இங்கலாந்து ராணி குயின் எலிசபத்(Queen Elizabeth of England ) , மைக் டைசன்(Mike Tyson), Maurizzo Gucci, the internationally renowned fashion designer இவர் ஒரு புறாவை வாங்க 10000$ (இந்திய மதிப்பில் இப்பொழுது 6,00000 ருபாய்) செலவு செய்துள்ளார்.

6000 அடிக்கு மேல் புறாகளால் பறக்க முடியும் அதன் சராசரி பறக்கும் வேகம் 77.6 mph ஆகும். இதுவரை அதிகபட்சம் வேகம் 92.5 mphஆக பதிவு செயப்பட்டுள்ளது. புறாக்கள் மூன்றில் இருந்து ஐந்து வயது வரை வாழும்