Tuesday 14 April 2020

Therthangal Bird Sanctuary



“L” வடிவில் தேர்த்தங்கல் சரணாலயம் அமைந்துள்ளது. நாம் சென்று சேரும் இடம் இரண்டு கோடு சந்திக்கும் இடத்தில், ஒரு மத்தியபொழுது அந்த  சந்திப்பில் சென்று இறங்கினோம். சரணாலயம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளதால் நீர்ப் பறவைகள்-கரையோர பறவைகள் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தது.

நண்பர் மாசிலாமணியுடன் தேர்தங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றிவந்ததில் வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் இங்கு வந்தபிறகு அப்படித் தெரியவில்லை. நீர் சூழ்ந்த பகுதியில் பறவைகள் கொண்டாடமாக உள்ளது.

சத்தம் எழுப்பாத நத்தைகொத்தி நாரைகள் ஒரு மரத்தில் குவியலாக அமர்ந்து இருந்தது. பறவைகள் எப்பொழுதும்  தங்கள் இருப்பிடங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொள்கின்றன. இங்கேயும் அப்படியே பிரித்து எல்லைக்கோடுகளை அமைத்து இருந்தது. அனைத்து பறவைகளுக்கும் இந்த நீரில்தான் உணவு என்றாலும் ஒன்றுக்கு ஒன்று சண்டை இடுவதில்லை.