Saturday 30 June 2018

ஏ.சண்முகானந்தம்- Wild Life Photographer


வன விலங்குகளை படம் எடுப்பது என்பது ஒரு கலை. இந்த துறையில் எந்த அளவுக்கு ஒருவர் சாதிக்க முடியும். என்ன வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் முழுநேரமாக இதில் ஈடுபடலாமா? தமிழகத்தில் காட்டுயிர் ஒளிப்படக்கலை(Wild Life Photography) பற்றி இந்த துறையில் மிகுந்த அனுபவமும், நிறைய புத்தகங்களை எழுதியவரும், வனவிலங்குக்கு என்று உயிர் என்ற பத்திரிக்கை நடத்தி வருபவர் திரு.ஏ.சண்முகானந்தம் அவரிடம் வைல்ட் லைப் போட்டோகிராபி பற்றிய நேர்காணலில் அவர் கூறியதாவது.

1990ஆம் ஆண்டு கேமரா பற்றிய ஓர் ஆண்டு பயிற்சியை முடித்து திருமண விழாக்களில் படங்கள் எடுத்து தொடங்கிய என் பயணம், பிறகு எங்கள் வீட்டை சுற்றி இருந்த நீர் நிலைகளில் காணப்படும் பறவைகள், பூச்சிகளை படம் எடுக்க தொடங்கினேன். நாளடைவில் திருமண விழாக்களில் இருந்து விலகி வனவிலங்குகளை போட்டோ எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து  விலங்குகள், பறவைகள், பூச்சிக்கள் எடுபதற்க்கு பல்வேறு காடுகளில் பயணம் செல்ல தொடங்கினேன்.

நான் தொடங்கிய தொன்னூறாம் ஆண்டுகளில் இப்போது இருபதுபோல், டிஜிட்டல் முறையில் படம் எடுக்கும் தொழில்நுட்பம் வரவில்லை. அதனால் பிலிம் ரோல் கொண்டே படங்களை எடுத்து வந்தேன். ஒவ்வொரு படமும் எடுத்து அவற்றை கழுவி பிரிண்ட் செய்து பார்த்தபிறகே அதன் தன்மை தெரியும். சரியாக இல்லையென்றால் மீண்டும் படங்களை எடுக்க முடியாது அதனால் முதல் முறையிலேயே அதிக கவனத்துடன் படங்களை எடுக்கவேண்டும். அதற்கு என்னுடையை ஒருவருட பயிற்சியும், அதனை தொடர்ந்து புகைப்படகளை வல்லுனர்களுடன் ஏற்பட்ட நட்பும், அவர்கள் கொடுத்த குறிப்புகளும் பயன்பட்டன.


திரு.ஜீ.உ.கரன் என்ற புகைப்பட கலைஞசரின் உதவியால் போடோகிராப்பி சொசைட்டி ஆப் மெட்ராஸ் (PSM- Photography Society of Madras) என்ற ஆசியாவில் பழமைவாய்ந்த சங்கத்தில்  உறுப்பினராக சேர்ந்தேன். இதில் சேர்ந்த பிறகு புகைப்படகலை பார்வை எனக்கு மாறியது. எப்படி பலவிதமான ஒளியில் படங்களில் எடுப்பது என்று கற்றுகொண்டேன்.

இந்த சங்கத்தில் உள்ள மனிதர்களின் அறிமுகம் மற்றும் அவர்களின் படங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொள்ள உதவின. மாதம் ஒரு கூட்டம் நடைபெறும். அதில் புகைப்படக்கலை பற்றிய  நுணுக்கங்கள் பற்றி பேசுவார்கள், மாநில அளவிலும், இந்தியா முழுவதும் நடைபெறும் புகைப்படக்கலை கண்காட்சியில் பங்கு பெற்று, பரிசு பெற்ற படங்களை காட்சிப்படுத்துவார்கள். அவற்றில் கலந்து  நிறைய புகைப்படக் கலை அறிவை வளர்த்துகொண்டேன்.

இன்று பலர் வைல்ட் லைப் போட்டோகிராபியின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் இவற்றில் நிறைய நிலைகள் உண்டு. சிலர் ஆர்வத்தில் படம் எடுக்க வருவார்கள், சிலர் விலை உயர்ந்த கேமரா கொண்டு பொழுதுபோக்குக்கு படம் எடுப்பார்கள், இன்னும் சிலர் முழுநேரமாக வைல்ட் லைப் போட்டோகிராபியில் ஈடுபடுவார்கள்.

வன விலங்குகளைப் படம் எடுப்பது, மனிதர்களை நிற்க வைத்து எடுப்பது போல் எளிதான வேலை அல்ல. காரணம் எந்த விலங்கும் நின்று நமக்கு போஸ் தராது. அதனால்  பொறுமை மிகத் தேவை. நமக்கும் ஏற்ற படம் எடுக்க பல நாட்கள் கூட ஆகலாம். குறிப்பாக நாம் எடுக்கும் விலங்கு, பறவை, பூச்சிகள் ஆகியவற்றின் பெயர், தகவல்களை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதற்காக வாசிப்பு மிக அவசியம். எடுக்கும் படம் நேர்த்தியாக வருவதற்கு என்னுடைய வாசிப்பு பழக்கம் உதவியாக இருக்கிறது. ஒளிப்படம் தொடர்பான புத்தகங்கள், எடுக்கப் போகும் படங்கள் பற்றிய படித்தல் மிகத் தேவை.

வைல்ட் லைப் போட்டோகிராபிக்காகவே ஒரு சங்கத்தை தொடங்கி நடத்திவந்தோம். “கூழைக்கடா இயற்கை புகைப்படசங்கம்” என்ற பெயரில் முழுக்க முழுக்க வைல்ட் லைப் போட்டோகிராபி பற்றிய பேசுக்கள், நுணுக்கங்கள், எப்படி போட்டியில் கலந்துகொள்வது? என்பது போன்று  செயல்படுத்திக் கொண்டிருந்தோம். மெடிஸ்கேன் தலைவர் டாக்டர் சுரேஷ் இயற்கை புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

மெடிஸ்கேன் தளத்திலேயே, மாதம் ஒரு கூட்டம் நடத்த அனுமதி தந்தார். பிறகு அவரேயே சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றக்கொள்ள சொன்னோம். அவரின் ஒத்துழைப்பில் இயற்கை புகைப்பட சங்கம் மிக நன்றாகவே நடந்தது.

அதன் தொடர்ச்சியாக வைல்ட் லைப் போட்டோகிராபிகென்றே “உயிர்” என்ற காட்டுயிர் இதழை நடத்த தொடங்கினோம். இந்த இதழில் முழுக்க முழுக்க காட்டுயிர் பற்றிய தகவல்கள், படங்கள் இடம் பெறுகின்றன. இதில் நீங்கள் எடுத்த படங்கள் அனுப்பி இடம்பெற செய்யலாம். தமிழகத்தில் வைல்ட் லைப் போட்டோகிராபி பற்றிய எந்த வித வளர்ச்சியும் இல்லாததால் இதில் ஈடுபடுபவர்கள் ஒரு கட்டத்தில் அதனை விட்டு விலகிவிடுகிறார்கள். அப்படி விலகாமல் அவர்களை ஒருகிணைத்து, அவர்களுக்கு ஒரு பாலம் செயல்பட அனைத்துவித முயிற்சிகளும் செய்துவருகிறோம். போட்டோகிராபி கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆசை இருபவர்களுக்கு பயிற்சி கொடுக்க தயாராக இருக்கிறேன்.. 


ஒருவர் முழுநேரமாக வைல்ட் லைப் போட்டோகிராபியில் ஈடுபடலாமா? அதன் மூலம் வாழ்கையை நடத்தமுடியுமா என்றால்? ஈடுபடலாம்,  நிறைய வாய்புகளும் உண்டு. அதனை சரியாக செயல்படுத்தி நீங்கள் வெற்றியடையலாம். நீங்கள் எடுக்கும் படங்களை மாநிலம், நாடுதழுவிய போட்டிகள் நடைபெறும் அதில் கலந்துகொண்டு உங்கள் புகைப்படங்கள் வெற்றிபெறலாம். மற்றும் டிஸ்கவரி, அனிமல் பிளானெட், நேஷனல் ஜியோகிராபி போன்ற சேனலில் பணி கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

நான் எடுத்த படங்களை கொண்டு கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக பகலில் நடமாடும் உயிரனங்கள் போல் இரவிலும் நிறைய உயிரிணங்கள் உயிர்வாழ்கிறது. அதனை வைத்து ஒருபுத்தகம் வெளியிட்டு உள்ளோம்.

“தமிழகத்தின் இரவாடிகள்” என்ற புத்தகம் மூலம் இரவில் நடமாடும் சிறு உயிரிணங்கள் முதல் பெரிய உயிரிணங்கள் வரை புகைப்படங்களை எடுத்து, கட்டுரைகள் எழுதி வெளியிட்டதில் அவை வாசகர்களிடம். நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனை தொடர்ந்து தமிகத்தில் இருக்கும் பறவை சரணாலயங்களை நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து, “தமிழகத்தின் பறவை காபிடங்கள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் இருக்கும் அணைத்து பறவை சரணாலயங்களை பற்றி வெளிவதிருக்கும் முதல் புத்தகமாகும். இதுபோல் ஆனந்த விகடன் பத்திரிக்கை வருடம்தோறும் வழக்கும் விருதை எனக்கு வழங்கியது. 

வளர்தொழில் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை 

-செழியன்.ஜா 
lapwing2010@gmail.com

No comments:

Post a Comment