Saturday, 6 December 2014

Teaching Birds

பறவைகளைப் பார்த்து இயற்கையை நாம் படிக்கலாம்..  நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது, ‘காக்கா கண்ணூக்கு மை கொண்டு வா..  குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா..’  என்று சொல்லிதான் உணவு தரும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.  பறவைகளோடு நம் வாழ்வும் பிண்ணிப்பிணைந்து இருந்தது.எல்லா உயிரினங்களும் பூமியில் நல்லபடியாக வாழ்ந்தால்தான் மனிதனும் நன்றாக வாழமுடியும் என்ற ஆழ்ந்த அறிவியல் எண்ணம் நமது மூதாதையோருக்கு இருந்ததுதான் இதற்கு காரணம். அறுவடை காலங்களில் கிராமங்களில் அப்போது வீட்டின் முன்பக்கத்து முற்றத்தில் அறுவடை செய்துவந்த புதுரிசியை ஒரு துணியில் கட்டி வாய்மட்டும் பெரிதாக திறந்திருக்கும்படி தொங்கவிடுவார்கள்.  வீட்டுக்கு வரும் குருவிகளும், பிற சிறிய பறவைகளும் அந்த அரிசியை உண்டு செல்வதற்காக அவ்வாறு செய்தார்கள். இதைப் பார்த்து வளரும் சிறு குழந்தைகளும் பறவைகளை நாம் நம் சகோதர உயிரினங்களாக உரிமையுள்ள தோழர்களாக பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வளர்ந்தார்கள். 

     இயற்கையில் ஏற்படும் பேரழிவுகளை பற்றி அறியவும் பறவைகள் நமக்கு பெருமளவில் உதவுகின்றன.  உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட பல அறிவியல் அறிஞர்களும் சிறந்த பறவையாளர்களாக இருந்தார்கள்.  பரிணாமத்தின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ டார்வின் இதற்கு எடுத்துக்காட்டு.  அவர் காலபகோஸ தீவுகளில் பறவைகளைப் பற்றி ஆராய்ந்தபோதுதான் பரிணாமத்தின் கொள்கைகளை கண்டறிந்தது அறிவியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய கொள்கையாக இருந்தது டார்வினின் பரிணாம பற்றிய கோட்பாடுகள். 

    பூகம்பம் போன்ற இயற்கை செதங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறன் பறவைகளுக்கு உண்டு. பறவைகள் மீது ஈடுபாடு கொண்டு bird watching எனப்படும் இயற்கையோடு கூடிய பொழுதுபோக்கை பொழுதுபோக்காக மட்டும் மேற்கொள்ளாமல் ஆர்வமாக அத்துறையில் ஈடுபடும்போது, பூகம்பம் போன்ற பேரழிவுகளை முன்னமே அறிந்துகொள்ள முடியும் என்பதால் ஏற்பட உள்ள பெரும் அழிவையும் தடுக்கமுடியும். அது மட்டும் அல்லாமல், D.D.T போன்ற பூச்சிக்கொல்லிகளின் கேடு விளைவிக்கும் பயன்பாட்டைப் பற்றி உலகம் அறிந்துகொண்டதும் பறவைகள் மூலம்தான்..

    இதற்கு நாம் ரேச்சல் கர்சனோடு கடமைப்பட்டிருக்கிறோம்.  அமெரிக்காவில் ஒரு மலையோர நகரத்தில் இருந்து 1958ல் ஒரு வீட்டில் இருக்கும் பெண்மணி உலகப் புகழ் பெற்ற பறவையாளராக இருந்த ராபர்ட் ககேஷ்மென் மர்•பிக்கு ஒரு கடிதம் எழுதினார்.‘எங்களுடைய கிராமத்தில் கொஞ்சம் வருடங்களாக மரங்களுக்கு கிர்ருமிகொல்லிகளை தெளித்துவருகிறார்கள்.  முன்பு பலவிதமான பறவைகளை இங்கு பார்க்கக்கூடியதாக இருந்தது. குளிர்காலம் முடியும்போது எங்கு இருந்தெல்லாமோ பறவைகள் இங்கு வரும்.  ஆனால், சில வருடங்களாக டி.டி.டியை உபயோகப்படுத்த தொடங்கியபின் எங்களுடைய கிராமத்திலோ, பக்கத்து கிராமங்களிலோ பறவைகளைக் காணமுடிவது இல்லை. இங்கிருந்த பறவைகள் எங்கே போய்விட்டன என்று எங்கள் குழந்தைக்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.  பறவைகள் இனிமேல் எப்போதும் வராதா என்று குழந்தைகள் கேட்கிறார்கள்.  எனக்குத் தெரியவில்லை.  அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை’.

    இப்படி பறவைகள் மூலமாக டி.டி.டியைப் பற்றியும் அதன் தீயவிளைவ்வுகளையும் பற்றி உலகம் தெரிந்துகொண்டது.  இயற்கைக்கு ஏற்படும் தீராத தீமையைக் குறித்து இதனால் அறிய்யமுடிந்தது. 
    அமெரிகர்கள் வசந்தகாலம் வருவதை ராபின் என்ற பறவைகளின் வருகையின் மூலம்தான்.  இனிமையாக பாடும் திறன் பெற்ற பறவைகள் ஆகும் அவை.  ராபின் பறவைகள் பாடத்தொடங்கிவ்விட்டால் குளிர்காலம் முடிந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்.  1954ல் குளிர்காலத்தின் முடிவில், ஊர் சுற்றும் பறவைகளான ராபின் பறவைகள் எப்போதும்போல லேன்ட்சிங்க் என்ற இடத்தில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் இருந்த மரங்கள் ம்னீது வந்து அமர்ந்துகொள்ள முயன்றன.  ஆனனால் அங்கு இருந்த மரங்களில் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளால் அவற்றின் உயிர் பறிபோனது.  இறந்து விழும் பறவைகளூம், இறந்துகொண்டிருக்கும் பறவைகளுமாக பார்ப்பவர்களின் இட்தயத்தை செகிழவைத்தது.  வந்த  பறவைகள் எல்லாம் சிறிதுநேரத்தில் இறந்துவிழுந்தன.  இதைக் கண்ட நிபுணர்கள் பறவைகலுக்கு ஏற்படும் சாதாரனமான ஏதோ ஒரு நோயால்தான் ராபின்கள் இறந்துவிழுந்தன என்று முதலில் கருதினார்கள்.  ஆனால், முழுமையான ஆராய்ச்சிகளின் முடிவில், பறவைகள் பூச்சிக்கொல்லிகளால்தான் மரணம் அடைந்தன என்பது தெரியவந்தது.  பூச்சிகொல்லி,மருந்தைக் கொண்ட மண்ணை உடகொண்ட மண்புழுக்களை உண்டதால்தான் அவை இறந்தன என்று தெரியவந்தது.    இல்லினாய் இயற்கை வரலாற்று பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர்..ராய் பெர்கர் இதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.  1958ல் பெர்கர் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.  மண்புழுக்களின் செரிமான உறுப்புகளில் டி.டி.டியின் அள்வு அதிகமாக இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.  விஷத்தை உண்ட மண்புழுக்கள் இறந்துபோயின.  மிச்சம் இருந்தவை ராபின் பறவைகளுக்கு உணவாகி அவைகளும் இறப்பதற்கு காரணமாயின. 

    ரேய்ச்சல் கர்சன் ‘மௌனமான வசந்தம்’ என்ற தன்னுடைய புத்தகத்தில் பூச்சிக்கொல்லிகளால் உருவாகு சீர்கேடுகளைப் பர்றி எழுதினார்.  இதனால் அமெரிக்கா உட்பட பல மேற்கித்திய நாடுகள் டி.டி.டியை தடை செய்தன.  உலகம் முழுவது பூச்சிக்கொல்லிகளால் உண்டாகும் தீமைகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வு தோன்றவும் ரேய்ச்சல் கர்சன் காரனமாக இருந்தார்.  ஒரு சாதாரண் வீட்டுப்பெண்மணிக்கு பறவைகளைப் பற்றிய சந்தேகங்களால் கேடு வளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி தெரிந்துகொள்ள வழ வகுத்தது.  இதன் மூலம் பறவை ஆரராய்ச்சி இயற்கையை பற்றி அறிய எந்த வகையில் உதவுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். 

    நம்மை சுuற்றியுள்ள இடங்களில் நாம் வழக்கமாக பார்க்கும் பறவைகளில் ஏதாவது பார்க்கமுடியாமல் போனால் நாம் இருக்கும் இடத்தின் சுற்றுச்சூழலுக்கு ஏதோ சீர்கேடு உண்டாகி உள்லது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.  அதுபோலவே  சாதாரணமாக நாம் பார்க்கமுடியாட்த ஏதாவது புதிiய பறவைகளை நாம் காணநேர்ந்தாலும் அதுவும் நமது சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே குறிப்பதாகும். 

    அதிகம் வெப்பம் உள்ல பகுதிகளில் வாழ்ந்தும் கூடு கட்டி, முட்டைய்யிட்டு, குšசு பொரித்து செல்லும் பறவைகளான பவழக்காலிகள் தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படும் பறவைகள் ஆகும்.  ஆனால், இவை கேரளாவில் காணப்பட்டதில் இருந்து அங்கு வெப்பநிலை அதிகமாகி வருகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.  இதன் மூலம் கேரளாவின் காலநிலை தமிழ்நாட்டைப் போல வெப்பமடைந்து வருகிறது என்பதியே எடுத்துச்சொல்கிறது அல்லவா?  மேற்குமலைத்தொடரில் காணப்படும் பறவைகல் அழிந்துபோனால் பின் அவைகளை வேறெங்கும் உலகில் காணமுடியாது.  ஏனென்றால் அவை இந்தப் பகுதிக்கு மட்டுமே உரியவையாகும்.  ஆனால் சமீபகாலமாக இங்குள்ள பறவைகளும் பிற இடங்களில் உள்ல பறவைகளைப்போல அழிந்துகொண்டு வருகின்nறன.  காரணம் காடுகள் அழிக்கப்படுவதும், வயல்களாக்கப்படுவதும், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடும் போல பல.  நம்முடைய காணப்படும் பலவகை  காடுகளில் பலவகை பறவைகள் காணப்படுகின்றன. இவைகளுக்கு ஏற்படும் அழிவு அவைகளுக்கு மட்டுமல்லாமல் மனிதனுக்கும், இயற்கைக்கும் நாசத்தையே ஏற்படுத்தும். 

    பறவை ஆய்வுகள் மூலம் நம் பூமியில் உண்டாகும் மாற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் முடியும்.   ஒருமுறை சீனாவில் கூட்டமாக வந்து வயல்களில் அமரும் தூக்கனாங்குருவிகளை சீனர்கள் முழுமையாக அந்தக் குருவிகளை அழித்துவிட்டார்கள். இதனால் தூக்கனாங்குருவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்ததுடன், வயல்களில் இருந்த பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. புழுக்களும், பூச்சிகளும் நெல்மணிகளை அழிக்கத்தொடங்கின. அப்போதுதான் சீனர்களுக்கு புரிந்தது.  

தூக்கனாங்குருவிகள் நெல் விளைந்துவரும் காலங்களில் குறைந்த அளவு நெல்மணிகளை தின்றாலும், மற்ர நேரங்களில் அவை வயல்களில் நெல்லை பாதிக்கும் பூச்சிகளைத் தின்று பயிரை காப்பாற்றிக்கொண்டுவந்தன என்பது.  பறவைகள் பூச்சிக்கட்டுப்பாட்டில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. 

    ஒரு காலத்தில் மௌரீஷியசில் வாழ்ந்துவந்த டோடோ பறவைகள் இன்று பூமியில்l இல்லை.  புறாக்களின் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும் இவை.  12கிலோ முதல் 25கிலோ வரை எடை கொண்டவையாக இருந்தன இந்தப் பறவைகள்.  புறாக்கள் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் இவற்றுக்கு பறாக்கத்தெரியாது.15ம்நூற்றாண்டில் மௌரீஷியஸ தீவில் சென்று இறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்த ‘டோடோ’ பறவைகளை வேட்டையாடிக் கொன்றே முழுவதுமாக அழித்துவிட்டனர்.  ஒரு நூற்றாண்டிற்குள் ‘டோடோ’ பறவைகளின் இனமே அழிந்துபோனது. 

    1930ல் டாக்டர்.ச்லீமலியும், அவரது மனைவிய்யும் சேர்ந்து கேரளாவிற்கு வந்து திருவிதாங்கூரிலும், கொச்சியிலும் உள்ள காடுகளின் வழியாக பயணம் மேற்கொண்டனர்.  அந்த மாநிலத்தில் பறவிகளின் கணக்கெடுப்பு முதலாவதாக ச்லீமலிதான் ஆரம்பித்தார்.  மறையூர், சாலக்குடி, குமிலி, சென்ங்கோட்டை, அச்சன்கோவில் போன்ற இடங்களின் வழியாக சென்ற அந்த பயணத்தில் தான் கண்ட பறவைகளைப் பற்றி குறிப்புகள் எழுதிவைத்தார்.  மூனாறுக்குப் போககும்வழியில் ஔய்வெடுப்பதற்காக அவர் தம்க்கியிருந்த இடம்தான் தட்டைக்காடு.  அந்த இடத்தில்l மட்டும் அவர் 160வகை பறவைகளைக் கண்டறிந்தார்.  அந்த இடம் இப்போது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  சலீமலி பயணித்த அதே வழியாக சில வருடங்கள் கழித்து பறவை ஆராய்ச்சிக்காக ஆய்வாளர்கள் பயணித்ட்தார்கள்.  முப்பதுகளில் இருந்த காலநிலையும், இன்றுள்ள இயற்கையின் நிலைமை பற்றி அறிந்துகொள்ளவும் இந்தப் பயணம் அவர்களுக்கு உதவியது.  சலீமலி பார்த்த பலவகையான பறவைகளை இப்போது நடத்திய பறவை ஆராய்ச்சிகளின்போது காணவில்லை.  ஆனால் புதியவகை பறவை இனங்களை அவர்கள் கண்டார்கள். 

    இட்தில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் காகங்கள் பல இடங்களிலும் காணப்பட்டன.  மனிதவாசனை காட்டில் தென்படுகிறது என்பதே இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தியாகும்.  மனிதர்கள் உள்ள இடங்களில்தான் காகங்களும் கூட்டமாகக் காணப்படும்.  அத்தோடு, வனவிலங்குகள் பலவும் இந்த இடங்களில் இருந்து அழிந்துuபோய்விட்டன என்பது தெரியவந்தது. 

    பறவைகள் பற்றிய ஆய்வுகள் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலையையும் தாண்டி, இயற்கையைப் பற்றி அறிய ஒரு வாசல் திறக்கும் திறவுகோலாகவும் கருதவேண்டும்.  அதனால் பறவைகள் பற்றிய பாடங்கள் நமது பள்ளிகளில் ஆரம்பவகுப்புகளில் இருந்து பாடத்திட்டதில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.  அப்போதுதான் சிறந்த இயற்கை ஆய்வாளர்கள் நமக்குக் கிடைப்பார்கள்.

    நமது தலைமுறையிலேயே காணாமல் போய்க்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகளூம், புறாக்களும், மைனாக்களும் இதுபோல இன்னும் பல பறவைகளும் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் காணக்கிடைக்கும். 
-                                                                                                     -சிதம்பரம் ரவிசந்திரன்


Thursday, 13 November 2014

MAGAZINE- KAADU




தமிழில் வன விலங்கு, பறவைகள் குறித்து தனியாக வார, மத இதழ் வருவது இல்லை அதை எல்லாம் யார் படிக்க போகிறார்கள் என்ற காரணமாக கூட இருக்கலாம் ஆங்கிலத்தில் Sanctuary Asia, Cub Sanctuary Asia, National Geography போன்ற அருமையான மாத மற்றும் இரு மாத இதழ்கள் வருகிறது ஆனால் தமிழில்?

உயிர்மையில் தியடோர் பாஸ்கரன் எழுதும் கட்டுரைகள் தான் தொடர்ச்சியாக வரும் காட்டுயிர் பற்றிய செய்திகள். தனி மாத இதழ் என்று இதுவரை இல்லை என்ற குறையையை போக்கும் விதமாக தடாகம் பதிப்பகம் புதிதாக காடு என்று இரு மாத இதழை வெளியிட்டிருக்கிறது.

முதல் இதழ் :

எறும்புகளை வைத்து காட்டை உருவாகிய மனிதனை பற்றி கட்டுரை அருமையாகவும் பிரமிக்கதக்கதாகவும் இருக்கிறது.

தியடோர்டர் பாஸ்கரன்- நதி எங்க போனது? என்று கட்டுரையும்

அலையாத்தி காடுகளை பற்றி நேர்காணலும் 

தமிழகப் பழங்குடிகள் அறிமுகம் 

இன்னும் நிறைய கட்டுரைகளும் வண்ண புகைப்படங்களும் உள்ளதால் காடு உண்மையில் காட்டுயிர் பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கும்.

எப்படி இலக்கியத்திற்கு நிறைய பத்திரிகைகள் இருக்கிறதோ அதே போல் விலங்கு, பறவை, சுற்று சூழல் பற்றி தனியாக பத்திரிகைகள் வந்தால் தான் மக்கள் மத்தியில்  விழிப்புணர்வு ஏற்ப்படும். அதன் தொடக்கம் காடு 

காடு பத்திரிக்கை கிடக்கும் முகவரி :

தடாகம்
NO:112,  திருவள்ளுவர் சாலை
திருவான்மியூர்  சென்னை-41
PH- 044-43100442/  8939967179
Mail- kaadu@thadagam.com 

விலை -60 .00 ரூபாய் 

[முகமது அலி காட்டுயிர் என்ற பத்திரிக்கையை நடத்தி வருகிறார். அதை பற்றி ஒரு கட்டுரையில் பார்ப்போம்]


Monday, 3 November 2014

காட்டுக்கு ஒரு காவல்காரன்

     
    காட்டில் எங்கேயாவது தீப்பிடித்துக் கொண்டால் ஓடிச்சென்று அதை அணைக்கும் ஒரு உயிரினம் இருக்கிறது.  பிரபல எழுத்தாளர் சாவி ஒரு முறை தன்னுடைய நகைச்சுவையில் இப்படி கூறியிருந்தார். 

    - காட்டில வாழற புலி, சிங்கம், யானை எல்லாம் மிருகம்தானே?  ஆனா இவைகளை எல்லாம் மிருகம்னு கூப்பிடாம காண்டாமிருகம்னு கூப்பிடறோம்.  வெறும் காண்டான்னுதானே கூப்பிடணும்..? 
   மொத்தமான தோலோடு அதிசயமான உருவத்தோடு இருக்கும் கான்டாமிருகம்தான் காட்டில் தீயை அணைக்கும் அந்த மிருகம். 
   
அறிவியல்பூர்வமாக சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவைப்போல மியான்மாரிலும் காண்டாமிருகத்தைப் பற்றிய இந்த நம்பிக்கை மக்களிடையே நிலவிவருகிறது.  உலகில் தரையில் வாழும் நில உயிரினங்களில் யானையை விட்டால் அடுத்து உருவத்தில் பெரியதாக இருப்பது இந்த விலங்குதான்.  ஆச்சரியமான உடல மைப்பு கொண்டது இது.  இதன் தோலுடைய தடிமன் மட்டும் ஒன்றரை இஞ்ச்சுகள் ஆகும்.  படைவீரர்கள் அணிந்துகொள்ளும் ராணுவௌடைபோல இருக்கும் இதன் மேல்தோலைப் பற்றி வடைந்தியாவில் ஒரு கதை இருக்கிறது.

    மகாபாரதக் காலம்.  குருஷேத்திர யுத்தகளம்.  யுத்தம் நடந்துகொண்டிருந்தது.  காலாட்படையில் பெருமம் எண்ணிக்கையில் வீரர்கள் அழிந்துவிட்டார்கள்.  இந்த நிலையில் யானை மேல் இருப்பவர்கள் மேல் அம்புகள் எய்யப்பட்டால் என்ன ஆகும்?  அப்போது ஒரு யோசனை தோன்றியது.  படைத்தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து விவாதம் புரிந்தனர்.  கடைசியில் யானைக்குப் பதிலாக காண்டாமிருகங்களைக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார்கள்  காண்டாமிருகங்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டுவந்தார்கள்.  அவற்றுக்கு படைவீரர்கள் போட்டுக்கொள்வது போல ராணுவௌடைகளை போட்டுவிட்டார்கள்.  அப்போதுதான் கிருஷ்ணர் அங்கு வந்தார்.  காண்டாமிருகங்களின் கூட்டம் கிருஷ்ணருக்கு முன்னால் கொண்டுவந்து ஆஜர் செய்யப்பட்டது.  அவற்றைப் பார்த்ததும் கிருஷ்ணருக்கு கோபம் வந்தது. 
                                                                                                                              
   - இந்த அனுசரணை இல்லாத மரமண்டைக்களையா கொண்டுவந்துள்ளீர்கள்?  இதுகளை உடனே காட்டுக்குள் விரட்டிவிடுங்கள்.. 
   கிருஷ்ணருடைய கட்டளையைக் கேட்டபிறகு போட்டிருந்த கவசௌடைகள் எதையும் கழற்றாமல் அந்த மிருகங்களை அப்படியே மறுபடியும் காட்டிற்குள் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள் படைத்தலைவர்கள்.  காலங்கள் கடந்துபோனபின்னாலும், இந்த உடையிலேயே காண்டாமிருகங்கள்  வாழ்கின்றன. 
       **
   உலகில் மிக அதிகமாக இன அழிவிற்கு ஆட்படும் காண்டாமிருகங்களின் இரண்டு இனங்கள் இந்தோனேஷியாவில் உள்ளன.  இதனால்தான் அதிபர் சுசிலோ பாம்பாங் யுத்தோயானோ இவற்றை அழிவில் இருந்து காக்க உறுதி எடுத்துக்கொண்டார்.  பல லட்சக்கணக்கான வருடங்கள் பரிணாம வரலாறு உடைய இவற்றை ‘ உயிர் வாழும் படிமம்’ (living fossil) ன்றே அழைக்கப்படுகிறது.  பல்வேறு நாடுகளில் உள்ள வேறுபாடுகளுக்கு ஏற்ப காண்டாமிருகங்கள் வகைபடுத்தப்பட்டுள்ளன.  ஒரு கொம்பு உள்ல, இரட்டைக்கொம்புகள் உள்ள காண்டாமிருகங்கள் இருக்கின்றன. 

ஆப்பிரிக்காவிலும், சுமத்ராவிலும் இருக்கும் காண்டாமிருகங்களுக்கு இரண்டு கொம்புகள் இருக்கின்றன.  இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும் உள்ள காண்டாமிருகங்களுக்கு ஒரே ஒரு கொம்பு மட்டும்தான் உள்ளது.  உலகில் மிகவும் சிறிய காண்டாமிருகங்கள் இருப்பது சுமத்ராவில்தான்.  இவற்றின் எடை ஏறக்குறைய 1000கி.கி ஆகும்.  இவற்றுக்கு சிறிய கொம்புகள் இருக்கின்றன.  சுமத்ராவில் இருக்கும் பெண் காண்டாமிருகங்களுக்கு கொம்புகள் உள்ள இடத்தில் இரண்டு பெரிய வீக்கங்கள் காணப்படுகின்றன.  பொன்னிறமும், மரநிறமும் (golden brown) கலந்த நிறமுடைய இவை.  இந்த சுமத்ரா ரைனசோர்கள் எனப்படும் காண்டாமிருகங்கள் உட்பட உலகில் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது ஐந்து இனங்கள் ஆகும்.  அவை ஆப்பிரிக்க வெள்ளை ரைனசோர்... (African white rhinosers), இன்ட்டியன் ரைனசோர்ஸ (Indian rhinosers), ஜாவா ரைனசோர்ஸ ( Javan rhinosers) போறவை இவற்றில் அடங்கும்.  வெள்ளை ரைனசோர்ஸ என்று கேட்கும்போது அவை வெள்ளை காண்டாமிருகங்கள் என்று சிலர் நினைக்கலாம்.  வெள்ளைநிறத்துக்கும், இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.  ஆப்பிரிக்க நாட்டவர்களான இந்த காண்டாமிருகங்கள் வட, தென் பகுதி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  உலகில் இன்று 15,000தென்பகுதி காண்டாமிருகங்கள் இருப்பதாக கணக்குக்கள் கூறுகின்றன.  உலகில் இருப்பதில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருப்பவையும் ஆப்பிரிக்காவில் இருக்கும் காண்டாமிருகங்களே ஆகும்.  அவை நான்கே நான்கு மட்டுமே எண்ணிக்கையில் உள்ள வடபகுதி காண்டாமிருகங்களே உலகின் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் காண்டடாமிருகங்கள் ஆகும். 

    வெள்ளை இனத்தில் உட்படாத காண்டாமிருகங்களை கறுப்பு காண்டாமிருகங்கள் (black rhinosers) என்று அழைக்கிறார்கள்.  தென் மத்தியப் பகுதி, தென்மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்க, மேற்கு ஆப்பிரிக்க காண்டாமிருகங்களின் உட்பிரிவுகளும் உள்ளன.  வெள்ளை காண்டாமிருகங்களைவிட கொஞ்சம் பெரிய அளவில் இவைகளின் உடலமைப்பு இருக்கும்.  இரண்டு கொம்புகள் உடைய இந்த காண்டாமிருகங்களுக்கு அகலம் இல்லாத கூர்மையான வாய்ப்பகுதி உள்ளது. 
   இந்தியன் காண்டாமிருகங்களின் நாடு அஸஸாம் என்று சொல்லலாம்.  குஜராத், வங்காளம், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களிலும் காண்டாமிருகங்கள் இருந்தாலும் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளது அஸஸாமில்தான்..  அஸஸாமுடைய மாநில விலங்கும் காண்டாமிருகமே ஆகும்.  அணை நாடுகளான நேபாள், பாகிஸதான், மியன்மார், சீனா ஆகிய நாடுகளிலும் இந்த இந்திய வகை காண்டாமிருகங்கள் வாழ்கின்றன.
 
   அழிக்கப்பட்டு வரும் மழைக்காடுகளில் ஆபத்தான நிலையில் வாழ்பவைதான் ஜாவா இன காண்டாமிருகங்கள் ஆகும்.  உலகில் மொத்தம் 60ஜாவா இன காண்டடாமிருகங்கள் இன்று வாழ்கின்றன.  முன்பு இந்தோனேஷியாவிலும், வியட்நாமில்லும் வாழ்ந்துவந்த இவை இப்போது இந்தோனேஷியாவில் மட்டுமே வாழ்கின்றன. 

    காண்டாமிருகங்களுடைய வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது அது புராதனகாலங்கள் பழமை வாய்ந்தது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.  ஒரு காலத்தில் ஏராளமாக வாழ்ந்துவந்த காண்டாமிருகங்கள் வெகுவாகக் குறைந்து இன்று உள்ள ஐந்து இஅங்களில் மூன்று வகைகள் ஆசியாவிலும், இரண்டு வகை ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றன.  ஒருவகையில் பார்த்தால் படைத்தவனிiன் தவறுதானோ என்று நினைக்கும் வகையில் எந்த அழகும் இல்லாமல் ஆச்சரியப்படவைக்கும் தோற்றத்துடன் படைக்கப்பட்டவைகள்தானா இந்த காண்டாமிருகங்கள் என்று நமக்கு சந்தேகம் ஏற்படும்.  தடிமனான கால்கள், மூன்று விரல்கள், மடங்கியும், சுருங்கியும் காணப்படும் பிளவுகள் கொண்டதுபோல தோற்றம்  தடித்த தோல், கொம்பில் இருந்து இறங்கி வந்த குன்றுகளோ என்று நினைக்கத்தோன்றும் மூக்கு என்று இப்படி ஒரு தோற்றம் கொண்ட பரிதாபமான காட்சி தரும் விலங்குகள்தான் இந்த காண்டாமிருகங்கள்.   தோலில் இருந்து வெளிப்படும் தசைகள் ஒன்றுசேர்ந்து உருவானதே கொம்புகள்.  ஒருதடவை இழந்தாலும் கொம்பு மீண்டும் மீண்டும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

    முழுமையான வளர்ச்சி அடைந்த ஒரு காண்டாமிருகத்துடைய எடை ஏறக்குறைய 1700கிலோ ஆகும்.   ரு பெண் காண்டாமிருகத்துடைய எடை ஆணுடைய எடையைவிட பெரிதாக ஒன்றும் குறைவாக இருப்பதில்லை..  அதன் எடை 1600கிலோ ஆகும்.  சராசரி 4மீட்டர்கள் நீளமும், 2மீட்டர் அகலமும் கொண்டவைகள் இந்திய காண்டாமிருகங்கள் ஆகும்.  கொம்புக்கு மட்டும் 1/2மீ உயரம்.  கறுப்பு நிறைந்த சசாம்பல் நிறம், காதுகளிலும், வாலிலும் ரோமங்கள், சிறிய முழைகள் என்பன போன்றவை மற்ற விலங்குகளில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன.  இவ்வளவு பெரிய உருவம் கொண்ட இவை உணவாக சாப்பிடுவது எது தெரியுமா?  ஆச்சரியப்படவேண்டாம்.  புல்தான்.  சாணம் போடுவதற்காக பின்புறமாக நடக்கும் சுபாவம் இவற்றுக்கு உண்டு.  வேட்டைக்காரகள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  இவற்றை சுட்டுக்கொல்வது முக்கியமாக இந்த சந்தர்ப்பங்களில்தான்..  கர்ப்பகாலம் ஒன்றரை வருடங்கள் ஆக்கும்.  ஏறக்குறைய 70வருடங்கள் இவற்றின் ஆயுட்காலம் ஆகும். 

    தற்காலங்களில் காண்டாமிருகங்கள் நிரந்தரமாக வேட்டையாடப்படுகின்றன.  மூடநம்பிக்கைகளின் விளைநில்லமாக விளங்கும் உலகத்தில் கண்மூடித்தனமான கட்டுக்கதைகள் காண்டாமிருகங்களின் அழிவிற்குக் காரணமாகின்றன.  அற்புதமான சுவை உள்லது காண்டாமிருக்கங்களுடைய இறைச்சி என்றும், அதைச் சாப்பிட்டால் வலிமை பெற்று அற்புதமான சக்தியைப் பெறலாம் என்றும் நம்பும் மக்கள் உலகத்தில் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.  இது மட்டுமில்லை.  இன்னமும் நிறைய மூடநம்பிக்கைகள் காண்டாமிருகங்களை அழிப்பதற்கென்றே பூமியில் நிலவிவ்பருகின்றன.  எப்போதும் இளமையாக இருக்க, மரணத்தை வெல்வதற்கு, இறந்தபிறகு சொர்க்கத்திற்குப் போக என்று இப்படி ஒரு சாதுவான விலங்கைக் கொல்வதற்காக இட்டுக்கட்டி விடப்பட்ட கதைகள் ஏராளம்..  ஏராளம்..  காண்டாமிருகங்களுடைய கொம்பையும் இந்த மனித வடிவில் உலவும் காட்டுமிராண்டிகள் சும்மா விடுவதில்லை.  கொம்பால் செய்யப்பட்ட கோப்பையில் விஷத்தை ஊற்றிவைத்தால் அது நுரைந்த்துப் பொங்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.  கொம்புடைய ஒரு பகுதி கையில் இருந்தால் எந்த விஷத்தையும் முறிக்கும் சக்தி படைத்தது அது என்ற மூடநம்பிக்கையும் உண்டு.  கர்ப்பிணியுடைய படுக்கைக்குப் பக்கத்தில் கொம்பை வைத்திருந்தால் பிரசவம் சுலபமாக முடியும் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.  கொம்பைப் பொடித்து அதை திரவம் ஒன்றில் கலந்து குடித்தால் இழந்த இளமை மறுபடியும் கிடைக்கும் என்பது போன்ற பற்பல மூடநம்பிக்களுடைய பட்டிய்யல் நீண்டுகொண்டே போகிறது. 

   சொந்த லாபத்தை மட்டும் கணக்குப் போட்டு காசுக்கும், பணத்துக்கும் அலையும் மனிதன்தான் காண்டாமிருகங்களுடைய இன அழிவுக்கு ககாரணம் ஆகும்.  இந்திய காண்டாமிருகங்கள் தவிர மற்ற இனங்கள் எல்லாம் அழியக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளவை ஆகும்.  மனிதனுடைய கருணையால் மட்டுமே இனி காண்டாமிருகங்கள் உயிரோடு வாழமுடியும்.  இவற்றின் இஅன அழிவைத் தடுப்பதற்காக உலக வனௌயிரிகள் நிதியம் (WWF) போன்ற உலக அமைப்புகள் கடும் முயற்சி செய்துவருகின்றன.  இந்த நடவடிக்கைகளில் நாமும் பங்கு கொள்வோம்.  ஒரு பாவமும் செய்யாத காண்டாமிருகங்கள் போன்ற விலங்குகளைக் காப்பாற்றாவிட்டால் மற்ற உயிரினங்கள் எதுவும்  வ்வந்து உலகின் மிக அறிவு படைத்த உயிரினமாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் மனிதனை அழிக்கப் புறப்பட்டு வரவேண்டாம்.  மனிதனே மனிதனை அழிப்பான்.  அந்த நிலை வராமல் உலகக் குடும்பத்தில் ஒரு அங்கமாக விளங்கும் இவை போன்ற விலங்குகளைக் காப்பாற்ற நம்மால் முயன்றது அணைத்தையும் செய்வோம். அதற்கான செயல்பாடுகளில் நம்மை இப்போதில் இருந்தே ஈடுபடுத்திக் கொள்வோம்.



                                         
                                                                                                         -சிதம்பரம் ரவிசந்திரன்