Monday, 21 April 2025

பூச்சிகளின் தேசம் - கோவை சதாசிவம்

 


மனிதர்களின் தேசத்தில் பிறந்து மனிதர்களின் தேசத்தில் வாழ்ந்து மனிதர்களின் தேசத்தை எழுதி மனிதர்களின் தேசத்தை வாசித்து மனிதர்களின் தேசத்தை விமர்சித்துச் சலிப்பு ஏற்பட்ட நிலையில் 'பூச்சிகளின் தேசத்தை'க் கடந்து பூச்சிகளின் தேசத்தை அறிந்து வியந்து மனிதர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதம் ஒரு தொகுப்பைத் தந்துள்ளார் கோவை சதாசிவம். 

மனிதர்களைக் கவிதையாக்கியவர் பூச்சிகளைக் கட்டுரையாக்கியுள்ளார். பூமி என்பது அனைத்து உயிர்களும் வாழ்வதற்கானது. மனிதர் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே இயற்கையைச் சார்ந்து இயற்கையோடு இணைந்து இயற்கையாகவே வாழும் தன்மை உடையது. மனிதர் மற்றவைகளையும் வாழவிடுவதில்லை. 

'பூச்சிகளின் தேசம் ' மூலம் பூச்சிகள் குறித்து ஆய்வு செய்து பூச்சிகள் வாழ வேண்டியவை, வாழ வேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளார். 

கரையான் குறித்து எழுதும் போது கரையான் புற்றைப் பேசியுள்ளார். ( கரையான் என்பதே சரி) புற்று என்பது புல், மரத்துகள், மண், கரையான் அமிலம் ஆகியவற்றால் உருவாக்கப் படுகிறது என்றும் பாம்புகளால் கட்டப்படுவதில்லை என்றும்  மூடநம்பிக்கையை விளக்கியுள்ளார்.

Tuesday, 15 April 2025

சூழலியல் புத்தக விமர்சன போட்டி -3 ( KOVAI SADHASIVAM BOOKS)

 காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி மூன்றாவது  மாத முடிவு (20 -MARCH -2025 TO 10-APRIL-2025)

முதல் மாதம் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் புத்தகங்களை முன்வைத்து போட்டி தொடங்கி இருந்தோம்.

இரண்டாவது மாதம் Feb2025 சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் புத்தகங்கள் 

மூன்றாவது மாதம் (MARCH 2025) -கோவை சதாசிவம் புத்தகங்கள் முடிவு 

அதில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள்!

வெற்றி பெற்றவர்களுக்கு காக்கைக் கூடு சார்பாக வாழ்த்துகள்