Tuesday 3 June 2014

History of Salim Ali

சலீம் அலி வரலாறு 

                                              -  சிதம்பரம் ரவிசந்திரன்


நம் வாழ்கையின் ஒவ்வொரு நாளும் தொடங்குவது பறவைகளுடைய குரலைக் கேட்டுக்கொண்டுதான் .. நம் சிறு வயதில் நம்முடைய அம்மா காலை உணவை காக்காவைக் காட்டியும் ,இரவு உணவை நிலாவைக் காட்டியும் ஊட்டிய ஒரு காலம் உண்டு .சிட்டுகுருவி சிட்டுகுருவி சேதி தெரியுமா ? என்ற திரைப்பட படலை இன்றைய நடுத்தர வயதுகாரர்கள் தங்கள் இளமைப்பருவத்தில்  கேட்காமல் இருக்க முடியாது . தமிழ் இலகியங்களில் சங்க காலம் தொடங்கி அன்னப்பறவையும், கிளியையும் ,புறாவையும் , மயிலையும் தூது விட்டு பாடல்கள் பாடிய பறவைகளோடு இணைந்து ஒரு இயற்கை வாழ்க்கை நமக்குப் படம் பிடிதுக்காட்டப்படுகிறது . 

அவ்வளவு ஏன் ? ஒரு பெண்பால் சங்க கால புலவருக்கு காக்கைப்பாடிணியார் என்று பெயரே இருக்கிறது . மயிலும், அன்னமும், காக்கையும், குருவியும்,குயிலும் ,புறாவும் ,கிளியும் ,கீச்சான் குருவியும் எல்லாம் நம் அன்றாட வாழ்வோடு பிண்ணிப் பிணைந்தே நாம் வாழ்ந்து வளர்ந்து வந்திருக்கிறோம் . மகாகவி பாரதியாரும்  ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் .. அந்தச் சிடுக்குருவியைப்போல் ‘ என்றும் , ‘காக்கை குருவி எங்கள் ஜாதி .. நீர் கடலும்,மலையும் எங்கள் கூட்டம் ‘ என்று பாடியுள்ளார் .இப்படி நம் தினசரி வாழ்க்கையுடன் நெருங்கிய பறவைகள் எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படாமல் இருக்கமாட்டீர்கள் .

ஆம் ரைட் சகோதர்களுக்கு விமானம் கண்டுபிடிக்கத் தூண்டுகோலாக அமைந்தது பறவைகள்தான் . நமது முன்னாள் குடியரசுத் தலைவருக்குக்கூட அவருடைய கல்வி நாட்களில் அவருடைய ஆசிரியர் கரும்பலகையில் வரைந்து காட்டிய ஒரு பறவையின் படம்தான் அவரை பிற்காலத்தில் ‘ இந்தியாவின் ஏவுகணைத் துறையின் தந்தை’ என்று உலகமே கண்டு வியக்கும் உயர்ந்த இடத்துக்கு இட்டுச் சென்றது . சிபி மன்னன் ஒரு பறவைக்காக தன் உடலின் சதையை அறுத்துத் தந்தான் என்ற இலக்கிய செய்தியப்போல் பறவைகள் இவர்களுடைய வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டிருகிறது என்று சொன்னால் மிகையாகாது.
  .
இதெல்லாம் சரி ஆனால் பறவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? வாழ்கையின் ஆரம்ப நாட்களில் இருந்தே வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும் , ஒரு நாள் ஒரு சிறிய பறவை தன்னிடம் வந்து தஞ்சம் புகுந்து அவருடைய வாழ்கையின் போக்கையே மாற்ற ,அதன் பின் பறவைகளைக் கொன்று வேட்டையாடி வந்த அவர் அந்தப் பறவை இனத்திற்காகவே தன் சொந்த வாழ்வை சமர்ப்பித்து கொண்டார் ..
 
உலகில் பறவைகள் என்ற பேச்செடுக்கும்போது எல்லாம் இந்தியாவின் பெயரை தூக்கி நிறுத்தி, மேல் நாட்டுக்காரர்களையும் தலை நிமர்ந்து , வியந்து பார்க்கவைத்தார் அவர் .. பெரிய பெரிய  படிப்புகளையெல்லாம் பெரிய பெரிய ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திலோ , ஹார்வேர்டு பல்கலைகழகத்திலோ இதுபோல உலகப் புகழ் பெற்ற எந்த பல்கலைகழகத்திலும் சென்று படிக்காத அவர் பறவைகளைப் பற்றிய அறிவியல் துறையில் உலகம் போற்றும் மேதாவிகளாகத் திகழ்ந்தார்.

‘நேரமாகிவிட்டது’ என்று கோழி கூவி அறிவிக்கும்போது , காகங்களும் , குரு விகளும் அதற்கு பக்க வாத்தியம் வாசிக்க ஆரம்பிக்கும் . உலகத்தில் உள்ள உயிரினங்களில்  வெப்ப இத் வகையைச் சேர்ந்த பிராணிகள்தான் பறவைகள் .இறகுகளால் மூடப்பட்ட உடலமைப்பைக் கொண்ட ,முட்டியிட்டு ஆடை காத்து குஞ்சு பொரிக்கும் வகையைச் சேர்ந்த , இலேசான உடல் அமைப்பையும் ,விதம் விதமான குரல் எழுப்பும் திறனையும் பெற்ற பறவைகளுடைய இடம் விலங்க்குகளுலகதில் அவைகளை போலவே வித்தியாசமானது ஆகும் .

உலகத்தில் இருபத்திலேய மிகச் சிறிய பறவை மனிதனுடைய பெருவிரல் அளவே உள்ள வானம்பாடி என்றால் , மிக பெரியது நெருப்புகோழி ஆகும் .ஒரு பெண் குதிரையின் அளவுக்கு பெரியது நெருப்புகோழி ஆகும் .ஆயிரக்கனக்கான கிலோமீட்டர் தூரம் பறக்கும் பறவைகள் வாழும் பூமியில் தரையில் இருந்து ஒரு சென்டிமீட்டர் தூரம் கூட மேலெழும்பி பறக்க முடியாத பென்குவின் பறவைகளும் இருக்கத்தான் செய்கின்றன .அற்புதமாக ஒரு பொறியியல் வல்லுநரைப்போல் கனகச்சிதமாகக் கூடு கட்டும் தூக்கணாங்குருவிகளும் உண்டு .அடுத்தவருடைய கூட்டில் தான் இட்ட முட்டைகளை போட்டுவிட்டுப் போகும் குயில்களும் உண்டு. பறவைகள் உலகத்தில் எல்லா விதிகளும் உண்டு .பெண் பறவைகளுக்குத் துணையாக இட்ட முட்டைகளை தாங்களும் அடை காக்கும் ஆண் பறவைகள் உள்ள அவர்களின் உலகில்தான் எந்தவித முனேற்பாடும், தயாரிப்பும் இல்லாமல் தரையில் முட்டையிடும் பறவைகளும் இருக்கிறது .

இறைச்சியை மட்டும் உண்டு ராஜா போல் வாழும் கழுகு ஒரு பக்கம், கிடைப்பதை எல்லாம் தின்னும் காகம் ஒரு பக்கம் .ஒரு தோட்டத்தில் மட்டும் தங்கள் வாழ்வு முழுவதையும் வாழ்ந்து கழிக்கும் பறவைகள் இருப்பதுபோல் , தவறாமல் எப்போதும் வலசைபோகும் பறவைகளும் இருக்கின்றன .சுற்றி சுற்றி வரும் கோழிகள், கட்டிய கூட்டை எளிதில் கைவிடாத கிளிகள் , பருந்துகள் என்று இந்தப் பறவைகளின் உலகம் பறந்து விரிந்தது .

வியாழக்கிழமை ஆனவுடன் பெருமாள் கோயில் வாசலுக்குச் சென்று அங்கு மாலை சரியாக ஐந்து மணிக்கு வானத்தில் வட்டமடிக்கும் கருடனை பார்த்து கை எடுத்து வணங்கும் பண்பாடுடைய நம் சமுதாயத்தில் பறவைகள் என்றும் வாழ்வோடு மட்டுமல்ல பாரம்பரியத்துடன் , பழகவழக்கங்ளுடன் நெருங்கிய உறவு உள்ளது . நம் தெய்வங்களுக்குக்கூட பறவைகள் ஒரு அடையாளச் சின்னமாக உள்ளது என்பது எந்த வியப்பையும் தருவதில்லை காமாட்சிக்கும், மீனாட்சிக்கும், கையில் கிளி , முருகனுக்கு சேவல் , விஷ்ணுவுக்கு கருடன் என்று புராணகாலத்தில் இருந்தே பறவைகள் நம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருகிறது . இதிகாசங்களிலும் கூட பறவைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன . 

ராமாயணத்தில் ஜடாயு முதல் அருணகிரிநாதர் கூடு  விட்டு கூடு பாயும் வித்தையில் தானே கிளியாக ஆனார் என்பதால்தான் இன்றும் திருவண்ணமலையில் அருனாசலேஸவர் கோயிலில் கிளிக் கோபுரம் என்று கோபுரமே உள்ளது .இந்த பண்பாட்டு நம்பிக்கைகளுடைய அடிப்படையில்தான் இன்றும் பெரும்பாலான வீடுகளில் காகத்திற்கு காலையில் சோறு இட்டவுடன் நாம் உணவு உட்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது . ‘ காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ‘ உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா ?’, ‘ ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரையும் காத்திருக்குமாம் கொக்கு ‘. எச்சில் கையாலும் காக்கா விரட்டமாட்டான் ...’. ‘கூரை மேல் ஏறி நின்று கூவினாலும் கோழி சேவலாகுமா ?’ போன்ற எத்தனை எத்தனை பழமொழிகள் ! இப்படி இலக்கியத்தோடும் , அன்றாட வாழ்வோடும் நம்மோடும் சொந்தக்காரர்களாக வாழும் பறவைகளின் நட்பும் தவிர்க்கமுடியாது 
.
இவ்வாறு பறவைகள் உலகம் அவைகள் அளந்து பறந்து திரியும் வானம் போல பரந்தது.

பறவைகளைப் பற்றி பேசும்போது.ஒரு மனிதரை நம்மால் நினைக்காமல் இருக்க முடியாது . யார் அவர் ?

PART-2

நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்த இந்தியாவின் பறவை மனிதன் உலக புகழ் பெற்ற பறவை ஆரய்சியாளாரான டாகடர் .சலீம் அலி தான் அந்த மனிதர் .

நவம்பர் ம் நாளில் மும்பையில் கேத்வாடியில்தான் அந்த பறவை மனிதரின் பிறப்பு நிகழ்ந்தது .தந்தை மொய்சுதின் ,ஜீனத் என்பதுதான் தாய் பெயர் . நான்கு சகோதர்களும் , நான்கு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் வளர 

விதி சலீமைஅனுமதிக்கவில்லை . அவருக்கு ஒரு வயது இருக்கும்போது தந்தையும் , மூன்று வயதாக இருக்கும்போது தாயும்  மறைந்தார்கள் . மாமாவான அம்ருதின் தய்ப்ஜியுடந்தான் அதன் பின் சலீம்முடைய பிற்கால வாழ்கை . விதி சில சமயங்களில் சில மந்திர செயல்களை செய்வது உண்டு ,சலிம்முடைய வாழ்விலும் அவ்வாறே நடந்தது .காரணம் மாமாவுக்கு குழந்தைகள் யாரும் இல்லாமல் இருந்தது .சலீம் உட்பட ஒன்பது சகோதர் சகோதரிகளை தன் சொந்தக் குழந்தைகளைப் போல மாமாவும் ,மாமியும் வளர்த்தார்கள் .மாமா ஒரு வேட்டையாடும் தொழில் புரிபவராக இருந்தார்.

நவாப்களுக்காகவும், ராஜாக்களுக்காகவும் அவர் அடர்ந்த காடுகளில்
வேட்டையாடினார்.மூத்த சகோதரனான ஹமித் வேலை பார்த்த காட்டுப்பகுதியில் சலீம்  அவ்வபோது சென்று வந்தார். இயற்கை ஆராய்ச்சிக்கும், பறவை ஆராய்ச்சிக்கும் ஆரம்பம் இந்த பயணங்களில் நிகழ்ந்தது என்றாலும் சலீமை பறவைகள் உலகின் பக்கம் திருப்பிவிட்டது வீட்டில் சமையல்காரனாக இருந்த நாணுதான். அவர் பழைய சாமான்களை வைத்து ஒரு கிளிக்கூடு கட்டித் தந்தார் . அதில் சலீம், தமையனுடைய மகனும் சேர்ந்து பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்படிதான் சலீம் அலி பறவைகளை பற்றி ஆராய்ச்சியில் வீட்டில் முத்தல் பாடம் படிக்கத் தொடங்கினார் .

சிறுவனாக இருந்த சலீமை பறவை ஆய்வாளராக மாற்றியது மற்றொரு கதையும் இருபதாக சொல்ல்வதுண்டு . இன்றைய மும்பையில் நெரிசல் மிகுந்த செம்பூர் அன்று வனப்பகுதியாக இருந்தது வசந்தகால விடுமுறையின்போது மாமா குடும்பத்துடன் அங்கே செல்லவார் . ஆடு, மாடுகளுக்காக வைக்கோல் கட்டுகளை உயரத்தில் வைத்து இருப்பார்கள். அது ஒரு அற்புதம் நிறைந்த காட்சியாக இருந்தது சிறுவன் சலீமுக்கு. அதைவிட அதிசயம் சூரியன் அஸ்தமித்து மாலையாகும்போது, அந்தக் கூடுகளில் வந்து தங்கி இன்னிசை பாடும் குருவிகள். துப்பாக்கி சுடுவதில் திறமைசாலியான சலீம் குருவிகளை எப்போது பார்த்தாலும் துப்பாக்கிக்குண்டுகளுக்கு இரையாக்கி வந்தார். அதில் ஒரு குருவி சுட்டவுடன் நேராக வந்து அவர் கால்களைத் தொட்டு உயிருக்காகக் கெஞ்சிவது போல இருந்தது அவருக்கு. அது மிகவும் வித்தியாசமானதாகப் பட்டது சலீமுக்கு. தொண்டையில் ஒரு மஞ்சள் பட்டை சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மாமாவிடம் போனார் சலீம்.


தனக்கு தெரியாததால் நேச்சுரல் ஹிஸ்ட்டரி சொசைட்டிக்குப் போகுமாறு மாமா சலிமைத் தூண்டினார். பிரிட்டிஷ்காரர்கள் தான் அன்று natural history society என்ற அந்த சங்கத்தை நடத்தி வந்தது. தயங்கித் தயங்கி அங்கு சென்ற சலீமை அங்கு கண்ட காட்சிகள் அசரவைத்தது. ஒன்றிரண்டு இல்லை. ஆயிரக்கணக்கில் பறவைகள் உயிரற்ற வடிவத்தில் சிறுவன் சலீம் பார்த்தார். ஆச்சரியப்பட்டார். சங்கத்தின் பொறுப்பில் இருந்த பெர்லார்ட் துரை அங்கு இருந்த எல்லா பறவைகளையும் சலீமுக்கு சுற்றி காட்டினார். கட்டை விரல் மட்டுமே அளவுள்ள Sun Bird முதல் ஒரு மனிதன் அளவுக்கு இருக்கும் கொக்குகள் வரை பாலிஷ் செய்து மெருகேற்றி வைத்திருந்த ஏராளமான பறவை    மாதிரிகளை சலீம் வியப்புடன் கண் கொட்டாமல் பார்த்தார்.
 
 
Part-3

மனிதனுக்கு சொந்தப்பெயரும்,குடும்பப்பெயரும் இருபதுபோல ஒவ்வொரு பறவைக்கும்,விலங்குக்கும் இரண்டு பெயர் இருக்கிறது. இந்தியாவில் நாட்டுக் காகம் என்றும், காட்டுக்காகம் என்றும் வேறுபட்ட இனங்கள் இருப்பதை பெர்லார்ட் சலீமுக்கு சொல்லிகொடுத்தார். பெர்லார்டை ஒரு தோழராக பார்த்த சலீம் அலி தானும் ஒரு பறவை ஆராய்ச்சியாளனாக ஆகவேண்டும் என்று இலட்சியத்தை மனதிற்குள் விதைதுக்கொண்டார். 

1914ல் சலீம் பர்மாவுக்கு போனார். சகோதரர் அக்தரும்,அவருடைய குடும்பமும் ரங்ககூனில் வசித்து வந்தார்கள். பர்மா வாசம் சந்தோஷமாக இருந்தபோதிலும் பறவை ஆராய்ச்சி அத்தனை திருப்தியாக சலீம்முக்கு இருக்கவில்லை. புத்தகங்களோ,பைனாக்குலரோ இல்லாமல் பறவைகளை பார்த்தார். பார்வை குறைவு உள்ள ஒருவர் கண்ணாடி அணியாமல் எழுத்துகளைப் பார்ப்பதுபோல் இருந்தது அது. பிற பறவை ஆராய்ச்சியாளர்களுடைய தொடர்பும்,Bombay Natural History societyயுடன் இருந்த தொடர்பு மட்டும்தான் சலீம் அலிக்கு உற்ற துணையாக இருந்தது .

பர்மா  செல்வத்திற்கு முன்பு 1913ல்  வகுப்புகளுக்கு சரிவர செல்ல முடியாமல் போனாலும்,பாம்பே பல்கலைகழகும் நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் ஒரு மாதிரியாக தேறினார்.1917ல் மாமா இறந்ததனால் சலீம் பம்பாய்க்கு திரும்பினார். தாதர் கல்லூரியில் அவர் வணிகவியல் படிக்கத் தொடங்கினார். செயின்ட் சேவியர் கல்லூரியிலும் அவர் விலங்கியல் பிரிவில் படிக்கத் தொடங்கினார். தாதர் கல்லூரியின் வணிகவியல் பாடங்கள் சலீமை நெருகிக்கொண்டிருந்தாலும், சலீம் விலங்கியல் படிபதற்காக சேவியர் கல்லூரிக்கு பரந்து கொண்டீருந்தார்.

காலைபோழுதுகள் தாதர் கலூரியில் வணிகவியல் படிப்பை முடித்து, மதியவேலைகள் சலீம் சேவியர் கலூரிக்கு விலங்கியல் படிபதற்காக பாய்ந்து சென்று கொண்டிருந்தார். சேவியர் கலூரியில் விலங்கியல் துரையின் தலைவராக இருந்த பிளாட்டருடைய பறவைகள் பற்றிய எல்லா நிபுணத்துவத்தையும் சலிமுக்கு அவர் ஒரு கார்பன் காப்பி எடுப்பதை போல பகிர்ந்தளித்தார். 

உறுதியான குறிக்கோள் எந்தத் தடைகளையும் தாண்டிச் செல்லும் என்று சொல்ல்வதுண்டு அல்லவா? அது சலீமுடைய விஷயத்தில் உண்மையானது. கடிதத்தால் வலிக்காத பறவைகள் போல இனிமையான பறவைப் பற்றிய பாடங்களை அவர் இதயத்தில் நிறைதுகொண்டார். பரவைகளூடைய குடும்பம் விவரங்கள், உடல் அமைப்புகள், வாழ்க்கை முறைகள், வெளித்தோற்றங்கள், சிறப்பியல்புகள் என்று எல்லாவற்றையும் கற்கத்தொடங்ககிய சலீம் ஒரு முழு பரவையாளராக மாறத்தொடங்கினார்.

1918 டிசம்பரில் இயற்கையை நேசிப்பவரும், சாதாரண குடும்ப வாழ்வை வாழ விரும்பும் பெண்மணியான தெஹினாவை சலீம் திருமணம் செய்துகொண்டார். இயற்கையையும், பறவைகளையும் நேசிக்கும் தெஹமி சலீமுக்கு நல்ல துணையாக வாழ்ந்தார். குடும்பத்தை நடத்த வேலை ஏதாவது வேண்டுமே? சலீம் வேலை தேடத் தொடங்கினார். Zoological survey of india இந்திய விலங்கியல் கழகத்தில் ஒரு பரவையாளார் வேலை காலியாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு சலீம் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ஆணால் முறையான பல்கலைகழக பட்டம் எதுவும் அவருக்கு இல்லாததால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. ஆணால் விதி சலீமுக்கு சாதகமாக இருந்தது. பிரின்ஸ் வேல்ஸ மியூசியத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இயற்கை வரலாற்றுப் பிரிவில் Bombay Natural History Societyயின் உறுபினராக இருந்த j.k ஸ்டான்போர்ட் சேகரித்து அனுப்பிய specimenகளை ஆராயும் பனி சலீமுக்கு கிடைத்தது.

Part -4

சலீம் அலிக்கு மோட்டார் சைக்கிள் என்றால் கொள்ளை பிரியம் இருந்தது. சைக்கிள் சுவிடன் நாட்டுக்கு ஒரு பறவையியல் போயிருந்தபோதுகூட தான் ஒரு BMW மோட்டார் சைக்கிளை சொந்தமாக வைதிருக்க முடியவில்லையே என்று தன் மனைவியிடம் கூறி வருந்தப்பட்டிருக்கிறார் .

பறவைகளைப் பற்றிய தான் படித்ததை அங்கு வரும் குழந்தைகளுக்கு சொல்லவதில் சலீம் இன்பம் அடைந்தார்.ஆனாலும் வெகு நாட்களாக அவருக்கு தான் இன்னும் முழுமியாடையவில்லை என்று மனக்குறை இருந்துகொண்டே இருந்தது. இரண்டு ஆண்டுகளே prince of Whales India மியூசியத்தில் வேலை பார்த்த சலீம் அலி சோர்வு அடைந்தார்.தனது பதவியைத் துறந்தார்.

பறவையில் பற்றி முறையாக கற்க வேண்டும் என்ற உந்துதல் அவரை பெர்லின் பல்கலைகழகத்திற்கு அழைத்துச்சென்றது. Prince of Whales India மியூசியத்தில் சலீம் ஆராயிந்து வந்த ஸ்டான்போர்ட் என்ற ஜெர்மானியருடய சேகரிப்புகள் மூலம் அவருடைய நட்பு சலீமிற்கு கிடைத்தது. அவர் மூலம் சலீம் அலி பெர்லின் சென்றார். அங்கு பறவைகளை பகுத்தறிந்து தரம் பிரிக்கும் டாக்சானமி மாணவராக சலீம் சேர்ந்தார்.
பெர்லினில் இருந்தபோது சலீம் அங்கு இருந்த இந்தியர்களை சந்திக்க நேர்ந்தது. இந்திய விடுதலை பற்றிய உணர்வை வெளிநாடுகளில் வாழ்ந்த இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவரான செண்பகராமன் பிள்ளையும் சலீம் அலி சந்தித்தார். இந்த சென்பகாராமன் பிள்ளைதான் நேதாஜியின் படைபிரிவில் கப்பற்படையின் கேப்டனாக இருந்தார் என்பதும், முதல் உலக போரின் போது எம்ட்டன் என்ற உலகப்புகழ் பெற்ற ஜெர்மனியின் நீர்மூழ்கிக்கப்லின் துணைக் கேப்டனாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

Stresemann Stanford. மனிதாபிமானியும், அறிஞருமாக இருந்த Stresemann, இந்தோநேஷியாவில் பறவைகளைப் பற்றி கற்றுவந்த பெர்னார்டு ரெஷ், உலகப் புகழ்பெற்ற உயிரியல் அறிஞசர் ஏனஸ மேயர், ஆஸ்கார் ஆழ்ந்த ஹைன்த்போன்றோர் சலீம் அலியுடைய நண்பர்களும், வழிகாட்டிகளாகவும், ஆசான்களாகவும் ஆயினர். துர்நாற்றம் வீசும் பரிசோதனைக்கூட்டங்களில் இருந்து டாக்சானமியில் ஆழ்ந்த அறிவு பெற்றார். சிறிய தவறுகளுக்கும் மிகப் மோசமான தண்டனைகள் கிடைக்கும் என்ற பகுத்தறிவு ஒன்றும் இல்லாத எந்த வசதியும் இல்லாத ஏழைக்குடும்பப் பின்னணியில் இருந்து வந்த சலீம் அலிக்கு பெர்லின் தந்த அனுபவங்கள் மறக்க முடியாததாக அமைந்தது.

பறவைகள் பற்றிய அறிவியல் பிரிவில் மிக முக்கிய பாடங்களான பறவைகளுக்கு வளையம் இடுதல், பட்டை கட்டுதல் Bird Ring , Bird Banding ஆகிய இரண்டையும் சலீம் அலி கற்றுக்கொண்டிருந்தது ஜெர்மனியில் இருந்துதான்.பறவைகள் எங்கல்லாம் பறந்துபோகிறது என்பதைப் பற்றியறிய இந்தச் செயல் பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய அளவில் பயன்படும். பறவைகளைப் பிடித்து அவைகளுடைய காலில் உலோகத்திலோ அல்லது பிளாஸ்ட்டிக்காளோ ஆன வளையத்தை போடும் முறைக்கு Bird Ringing என்று பெயர்.

வளையம் காலில்  மாட்டப்பட்ட தேதியும், முகவரியும் வலயத்திற்குள் எழுதபட்டிருக்கும். பறவையை யாராவது பிடித்தால் வளையத்தைத் திருப்பி அனுப்பவேண்டும் என்பதே சர்வதேச சட்டம் ஆகும்.சட்டம் இருந்தாலும், அதைப் பின்பற்றுபரும், கடைபிடிப்பவரும் இருக்கவேண்டும் அல்லவா? ஜெர்மானியர்கள் இதற்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்தார்கள். வடகடலில் எலிகோ சதுப்புநில பகுதிக்கு பறவைகள் வந்து தங்குவதற்கேற்றவாறு ஒரு சரணாலயமாக மாற்றினார்கள். 

அடர்ந்த செடிகளையும் ,மரங்களையும்  வளர்த்து,குளங்களை உருவாக்கி,அந்தப் பகுதியை பறவையியல் பகுதியாக மாறினார்கள். அங்கு வரும் பறவைகளைப் பிடித்து கன்னாடிகூடுகளுக்குள் அடைத்து வைத்து அவற்றின் கால்களில் வளையங்களைப் போட்டு பறக்கவிட்டு விடுவார்கள். இதோடு முதல் கட்டம் நிறைவு பெறும். அந்தப் பறவையை யாராவது பிடித்து வளையத்தை மட்டும் திருப்பி அனுப்பும்போதுதான் அடுத்த கட்டம் ஆரம்பமாகும். வலையங்கள் இட்டு பாதுகாக்கும் பணி ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்கும் அதே சமயம் பறவைகளை பொறி வைத்து சாகடிக்கும் செயலும் மற்றறொரு புறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

1930ல் பெர்லினில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய சலீம் Prince of Whales மியூசியத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக விரிவுரையாளர் பதவி எடுக்கப்பட்டுவிட்டதால் மும்பையில் கடலோர கிராமமான kihim வசிக்கத் தொடங்கினார். கடலோர கிராம வாசம், இந்தியப் பறவைகள் பற்றிய ஆய்வில் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை உலகிற்குத் தந்தது எனலாம். அந்த கடலோர்ரக் கிராம வாசம் சலீம் அலிக்கு தூக்கணாங்குருவியைப் (Weaver bird ) பற்றி விரிவான ஆய்வுகளுக்கு  வழிவகுத்துக் கொடுத்தது.

இந்த ஆராய்ச்சிகள் தொடங்கியதே ஒரு சுவாரசியமான விஷயமாக இருந்தது. குத்து செடிகள் மண்டிக் கிடந்த ஒரு பகுதியின் வழியாக நடந்கும்போது, ஒரு தூக்கணாங்குருவியை அலி பார்த்தார். அந்த குருவி அவரிடம் ஏற்படுத்திய ஆர்வம் அதன் பிறகு ஏராளமான அந்தக் குருவிகளைப் பற்றி ஆய்வுகளில் ஈடுப்பட வைத்தது.

தூக்கணாங்குருவிகல் கூடு கட்டுவதை பார்த்து பிரம்மித்துப் போனார் சலீம் அலி. பெண் குருவி ,ஆண் குருவியை அதனுடைய வடிவ அழகை கொண்டு ஒரு போதும் தேர்ந்தெடுபதில்லை. கூடு கட்டும் சாமார்த்தியம்தான் கணவனாக வரபோகும் குருவிக்கு தேவையான தகுதி. கூடு, பெண் குருவிக்கு பிடித்தால் பெண் குருவி அதைக் கட்டிய ஆணை தன்னுடைய துணையாகக் கொள்ள விருப்பம் என்று தெரிவிக்கும்.

இதில் இன்னொரு அதிசயம் என்ன என்றால் ஆண் குருவிக்கு ஒரு பெண்டாட்டி போதாது நாலைந்தாவது வேண்டும். இதனால் மனைவி கிடைத்தபின்னும், அடுத்த கூடு கட்டுவதில் ஆண் குருவி எப்போதும் பிசியாகவே இருக்கும். தூக்கணாங்குருவிகளுடைய வாழ்கை முறைகள், உணவு முறைகள், இணை சேரும் விதம் இவைகளை பற்றி எல்லாம் kihimல் சலீம் வசித்தபோது கண்டறிந்தார். அவருடைய பிரபல நூலான . ‘The Book of Indian Birds’ இந்தியப் பறவைகளைப் பற்றிய புத்தகம் என்ற நூலை எழுத ஆரம்பித்ததும் இந்த சமயத்தில்தான் .


PART-5

சில மாதங்கள் சலீம் நீலகிரியில் உள்ள கோத்தகிரியில் தங்கினார். கோத்தகிரியில் தங்கியிருந்த K.M. ஆனந்தன் என்பவருடைய அழைப்பின் பேரில் சலீம் அங்கு சென்றார். ஆனந்தன் முதல் உலகப் போரின்போது ராணுவத்தில் மருத்துவராக மொசபடோமியாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அதற்குப் பிறகு அவருக்கு லாங்வுட்ஷோலாவில் வசித்து வந்த திருமதி kin loch மற்றும் அவருடைய மருமகன் R.C.Morris ஆகியவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. சலீம் அலி பறவைகள் பற்றிய ஆய்வுகளை நடத்த அப்போது இந்தியாவில் பல பாகங்களிலும் சிதறியிருந்த சிறு சிறு சமஸ்தானங்களுடைய உதவியை நாடினார். இதற்கு அந்தந்த குறுநில மன்னர்களுடைய ஆதரவும்,நிதி உதவியும் பெறுவது அவசியம் என்பதை அவர் உணர்ந்தார்.

இயற்கையைப் பற்றி ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த அரசர்களிடம் பறவைகள் மீதும் ஈடுபாடு ஏற்படும்படி செய்தார் சலீம் அலி. அதற்கு பலனும் கிடைத்தது. ஆச்சிரியப்படும் வகையில் ஹைதராபாத் நிஜாம் சலீம் அலிக்கு பச்சைக்கொடி காட்டினார். மூன்று மாத கல ஆய்வுகளுக்காக நிஜாம் சலீம் அலிக்கு ரூபாய் 3000 கொடுத்தார். அன்றைய காலகட்டத்தில் அது ஒரு பெரிய தொகையாகும். இந்த அருமையான வாய்ப்பைப் பெற்ற மகிழ்ச்சியில் சலீம் அலி தன்னுடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு காளை மாட்டு வண்டியில் பயணத்தைத் தொடங்கினார். பறவைகளுடைய வடிவம், அடை காக்கும் விதம், வாழிடம் போன்ற எல்லா அம்சங்களையும் பற்றிய அவருடைய ஆய்வு பறவைகள் குறித்து ஆராய்ச்சியில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தது.

இதுவே பின்னாளில் ‘ ஹைதராபாத் சர்வே’ என்ற பெயரில் புகழ் பெற்றது. வெற்றிகரமாக நிறைவு பெற்ற இந்த ஆய்வுகளுக்குப் பிறகு திருவிதாங்கூர், கொச்சி, போபால், இந்தூர், குவாலியர், தார், மைசூர், பஹவல்பூர், குஜராத், பெஸட்டர் ஆகிய இடங்களுக்கும் சிறப்பு விருந்தினராகச் சென்று சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்சிகளை நடத்தினார். இந்த ஆய்வுகளில் அவருக்கு பண உதவியும், ஆதரவும் நல்கியவர் Hugh Whistler என்பவர் ஆவார்.

விசிலர் அவர்களே ஒரு சிறந்த பறவையில் நிபுணராக இருந்தார். இவர்கள் இவருக்கும் இடையே ஏற்பட்ட ஆழ்ந்த நட்புக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. விசிலர் எழுதி இதழொன்றில் வெளியிட்ட பறவைகள் பற்றிய கட்டுரை ஒன்றில் விசிலர் Greater Racket Tailed Drongo என்ற பறவையைப் பற்றி தவறாக ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்.இதை படித்த சலீம் அலி இந்தக் தவறை சுட்டிக்காட்டி அந்த இதழுடைய ஆசிரியருக்கு கடிதம் எழுதினார். முதலில் விசிலர் முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு இந்தியன் தான் கண்டறிந்ததைப் பற்றிக் குறை சொல்லி தன் புலமையை குற்றம் சொன்னதில் எரிச்சல் அடைந்தார். 

பிறகு தான் சேகரித்து வைதிருந்த அந்தப் பறவையின் specimenனை மாதிரியை சோதிதப் பார்த்தபோதுதான் விசிலருக்கு சலீம் சொன்னது சரி என்றும், தான் எழுதியது தவறு என்றும் தெரியவந்தது. உடனே விசிலர் தன் தவறுக்கு வருந்தி சலீமுடன் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். இதில் விசிலர் சலிமுடைய நெருங்கிய நண்பராக மாறினார்.

இதற்குப் பிறகு விசிலர் சலீம் அலிக்கு மற்றொரு சிறந்த பறவையியல் ஆய்வாளரான Richard Meinertzhagen என்பவரை அறிமுகப்படுத்தினார். இருவரும் ஆப்கானிஸ்தானில் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவார்கள்.
கேரளாவில் சலீம் அலி வந்தபோது திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் சலீம் அலிக்கு பறவை ஆய்வுக்கு ரூபாய் நாற்பத்தைந்து ஆயிரம் வெகுமதியாக தந்தது. தென்னிந்தியவின் அழகொழுகும் மலைத்தொடர் சலீம்  மனதைக் கவர்ந்தது.தன் சுயசரிதை நூலில் சலீம் அலி இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பெரியாறு நதிக்கரையில் தட்டக்காடு பகுதியின் இயற்கை வனப்பு அவர் மனதைக் கொள்ளை கொண்டது. அவருடைய பெயராலேயே வழங்கப்படுகிறது. கேரளாவில் அவருடைய பறவைகள் ஆய்வுகள் மக்களிடையே செல்வாக்கு பெற்றதாக இருந்தது. மக்கள் அவரைப் பார்ப்பதற்காக இன்று இந்த அளவுக்கு புகழ் பெற்றிருப்பதற்கு சலீம் அலியின் முயற்சிகளால்தான்.

1939ல் சலீம் அலிக்கு உற்ற துணையாக இருந்துவந்த அவருடைய மனைவி தெஹ்மினா ஒரு சிறு அறுவை சிகிச்சைக்குப்பின் மரணம் அடைந்தார். இந்தப் பிரிவு சலீம் அலியை மிகவும் பாதித்து. இதற்குப் பிறகு சலீம் அவருடைய சகோதரி காமூ குடும்பத்தாருடன் வசிக்க ஆரம்பித்தார்.

சலீம் அலி மனைவி இறந்த பிறகு தன் முழுநேரத்தையும் பறவை ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார். மலைக்காடை (Mountain Quail ) என்ற பறவையைப் பற்றி ஆய்வுகளில் சலீம் அலியால் முழுமையாக வெற்றி காண முடியவில்லை. இன்று வரியும் அந்தப் பரவையைப் பற்றி அதிக விவரங்கள் அறியப்படவில்லை.
சலீம் பறவைகளைப் படம் பிடிப்பதில் ஆர்வம் ஏற்ப்பட்டது. ஜிப்சன் என்ற பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் தொழிலதிபராக இருந்த Loke Wantho என்பவருடன் இணைந்து பறவைகள் படம் எடுப்பதில் ஈடுப்பட்டார். சலீம் அலிக்கு பறவைகளை அவற்றின் இயற்கையான சூழ்நிலையிலேயே ஆராய்வதில் ஆர்வம் ஏற்ப்பட்டது. Lokeடன் சேர்ந்து சலீம் பறவைகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். 

Loak பறவைகள் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர் என்பதோடு, சலீம் அலிக்கு பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனதில் செயல்பட நிதி உதவியும் செய்தார். மொகலாயர்கள் ஆட்சிகாலத்தில் இயற்கை வரலாறு பற்றியும், இந்தியாவின் இயற்கை வரலாறு பற்றியும் சலீம் ஆர்வம் காட்டினார். இன் இந்த விஷயங்களைப் பற்றி பல கட்டுரைகளை ஆராய்தறிந்து எழுதினார். 

1947ல் நிறுவனத்தின் வெளியிட்டுக்கு ஆசிரியராக சலீம் அலி பொறுப்பேற்றார். அதன் பின்னர் நிறுவனத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். அவ்வப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த பண்டிட் நேருவுக்கு பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனத்திற்காக நிதயுதவி கோரி கடிதம் எழுதினர்.

PART-6

1971ல் சுந்தர்லால் ஹோரா நினைவு சொற்பொழிவிலும்,1978ல் ஆசாத் நினவு சொற்பொழிவிலும் சலீம் அலி இந்தியாவில் பறவையியல் ஆய்வுகள் பற்றி விரிவாக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சலீம் அலி தன் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களையும் பறவைகள் பற்றி ஆய்வுகளில் ஈடுபாடு கொள்ள செய்தார். அவருடைய உறவினர்களான ஹுமாயுன் அப்துல் அலி மற்றும் லிக்யு ஆகியோர் பறவையியல் பிரிவில் நிபுணத்துவம் பெற்றதோடு, இயற்கை வரலாற்று நிறுவனத்தின் வளர்ச்சியிலும் பெறும்பங்காற்றினார்கள்.

சலீம் அலி பல முதுகலை மாணவர்களையும், பல முனைவர் பட்ட மாணவர்களையும் பறவையியல் பிரிவில் வழிக்காட்டியாக இருந்து சிறந்த முறையில் வழி நடத்தினார். சலீம் அலியின் வழிகாட்டுதலில் முதல் மாணவராக வெளிவந்த விஜயகுமார் அம்பேத்கார் என்ற மாணவர் முனைவர் பட்டத்திற்காக ஆராயிந்து வெளியிட்ட ஆராயிச்சி கட்டுரை சலீம் அலி முன்பொரு சமயம் பறவையியலில் ஈடுபாடு கொள்ள காரணமாக இருந்த மும்பை கடலோரத்தில் கிராமத்தில் ! அவர் கண்ட பாயா தூக்கனாங்குருவி (Baya Weaver bird ) களைப் பற்றியதாக அமைந்தது சிறப்பான ஒரு பொருத்தமாக இருந்தது .

இந்தியவில் பறவை ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைய சலீம் அலி பெருமளவில் தொண்டுகள் புரிந்தார். பறவையியல் தொடர்பாக நிதி உதவிகள் கிடைப்பதற்கு காரனகார்த்தாவாக அவர் இருந்தார். ICAR- Indian Council for Agriculture Researchல் பறவையியல் தொடர்பாக பொருளாதாரப் பிரிவு ஒன்றைத் தொடங்க காரணமாக இருந்தார்.

1980களில் சலீம் அலி இந்தியாவில் விமான தளங்களில் பறவைகள் அடிபடுவதை தடுப்பதற்காக ஒரு திட்டம் தொடங்கப்பட முக்கிய காரணமாக இருந்தார்.இந்தியப் பறவைகள் பற்றிய ஆராய்சிகள் வளர்ச்சி அடைய செய்ய சலீம் அலி பெரும்பணி ஆற்றினார். இந்தியா முழுவதும் சிதறிக் கிடந்த பரவையாளர்களை ஒருங்கிணைக்க அது பற்றி வெளியடப்படும் செய்தி இதழின் மூலம் முயற்சிகள் எடுத்தார்.

சுதந்தர இந்தியாவில் பறவைகள் பாதுகாப்பில் சலீம் அலியின் பங்கு மகத்தானது. அப்போது பிரதமர்களாக இருந்த நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் ஆதரவுடன் சலீம் அலி இந்தியாவில் பறவைகள் குறித்து ஆய்வுகளை மேம்படுத்த பணியாற்றினார். இந்திரா காந்தி அவர்களே பறவைகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டவர். 1942ல் இந்திரா காந்தி நைனிடால் சிறையில் இருக்கும்போது, டோராடுன் சிறையில் இருந்த நேரு சலீம் அலி எழுதிய ‘ இந்திய பறவைகள் ‘ (The Book of Indian Birds ) ன்ற புத்தகத்தை பரிசாக அனுப்பிவைத்தார். 

சலீம் அலி பரத்பூர் பறவைகள் சரணாலயத்தை வடிவமைப்பதிலும், அமைதிப் பள்ளத்தாக்கு தேசீயப் பூங்கா உருவாவதிலும் முத்திரைகள் பதித்தார். டூன் பள்ளிக்கு சலீம் அலி பார்வையாளராக அவ்வப்போது விஜயம் செய்வது வழக்கம்.இதனால் அவருக்கு மிக்க அரிதாக வழங்கப்படும் டூன் பள்ளியின் மாணவர் கௌரவும் வழங்கப்பட்டது. பறவைகள் பாதுகாப்பு பற்றி விழ்ப்புணர்வை அங்கிருந்த மாணவர்களிடம் ஏற்படுத்த சலீம் அலி பாடுபட்டதால் அவருக்கு இந்தப் பெருமை அளிக்கப்பட்டது.

சலீம் அலி மத நம்பிக்கைகள் அறிவியல் குறுக்கிடாக இருக்கக்கூடாது என்று கருதினார். வேடையடுதலைக் கடுமையாக எதிர்த்த சலீம் அலி அதே நேரத்தில் ஆராயிசிக்காக சில பறவைகளை நாம் தியாகம் செய்துதான் ஆகவேண்டும் என்று கருத்து கொண்டிருந்தார்.

1960களில் இந்தியாவின் தேசிய பறவையாக எந்தப் பறவையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடந்தன. சலீம் அலி ஆபத்தான நிலையில் அழிந்துகொண்டிருந்த கானமயில் (The Great Indian Bustard ) பறவையை தேசியப் பறவையாக வைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தார். ஆனால் Pea Fowl தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது.

அங்கிகாரங்களும், பட்டங்களும் தாமதமாக கிடைத்தாலும், பல பல்கலைகழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை கொடுத்து கௌவுரவித்தது. 1953ல் ‘ஜாய் கோபிந்தா லா கோல்டு மெடல் எசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கள் என்ற அமைப்பால் வழங்கப்பட்டது. இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் சார்பில் 1970ல் சுந்தர்லால் ஹோரா நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது. கௌரவ டாக்டர் பட்டங்கள் அலிகார் பல்கலைகழகம் (1958), டெல்லி பல்கலைகழகம்(1973), ஆந்திரா பல்கலைகழகம் (1978) ஆகிய பல்கலைகழகங்களால் வழங்கி பெருமை படுத்தப்பட்டார்.

1967ல் சலீம் அலி The Gold Medal of British Ornithalogist விருது பெற்ற முதல் வெளிநாட்டுக் குடிமகன் ஆவார். அதே வருடம் அவர் ஜெ.பால் கெட்டி வன உயரினங்கள் பாதுகாப்புக்கான பரிசுதொகையப் பெற்றார். இவ்வாறு கிடைத்த 100000 டாலார் பரிசை சலீம் அலி இயற்கை பாதுகாப்பு நிதியம் ஒன்றை அமைத்து வன உயிரினங்கள் மற்றும் பறவைகள் பாதுகாப்புக்காக அளித்தார்.

1969ல் ஜான்.சி.பிலிஸ அமைப்பால் வழங்கப்படும் சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு unionக்கான நினைவு மெடலை பெற்றார்.1973ல் சோவியத் union அசொசியேசன் of Medical science அமைப்பு அவருக்கு பாவ்லாவ் நினைவு மெடல் வழங்கி கௌரவித்தது. அதே வருடம் ‘ ஆர்டர் of தி கோல்டன் ஆர்க் ‘ என்ற விருது வங்கி நெதர்லாந்து அரசால் பெருமைப்படுத்தப்பட்டார். இந்த விருது நெதர்லாந்து  அரசியாக அப்போது இருந்த இளவரசர் பெர்னார்டு அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்திய அரசு சலீம் அலியை 1958ல் பத்ம பூஷன் விருது வழங்கியும், 1976ல் பத்ம விபுஷன் வழங்கியும் அலங்கரித்தது. 1985ல் ராஜ்யசபா உறுப்பினராக நியாமிக்கப்பட்டார்.

இந்திய அரசாங்கம் அவருடைய மறைவுக்குப் பின் கோவையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தை (Salim Ali Centre for Ornithology and natural history ) wiruviyathu. பாண்டிச்சேரி பல்கலைகழகம் சலீம் அலி சுற்றுசூழல் மற்றும் சூழல் அறிவியல் பள்ளி (Salim Ali School of ecology and environmental sciences ) நிறுவியுள்ளது. கோவா அரசு சலீம் அலியின் பெயரில் பறவைகள் சரணாலயம் அமைத்துள்ளது. கேரளாவில் வேம்பநாடு பகுதியில் உள்ள தட்டக்காடு பறவைகள் சரணாலயம், அவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது.

பாம்பே இயற்கை வரலாற்று நிறுவனம் மும்பையில் அமைந்துள்ள பகுதிக்கு சலீம் அலி சவுக் என்று பெயரிடப்பட்டுள்ளது.கிட்டி தொங்கலாங்யா என்பவர் பாம்பே இயற்கை வரலாறு நிறுவனத்தில் இருந்த ஒரு அபூர்வமான வௌவாலுடைய மாதிரியைக் கண்டறிந்தார். அதற்குள் அவர் Latidens Salim Ali என்ற பெயரிட்டார். இந்த அபூர்வ வௌவால் இனம் அவ்வகை ஜீன் இனத்திலேயே (Genus latidens ) தற்போது உலகில் இருக்கும் ஒரே மாதிரி வடிவம் ஆகும்.

மறங்க்கொத்திகளில் ஒரு துணை இனத்திற்கு 1972ல் சலீம் அலியின்  நினைவாக Dinopium Benghalense Tehminae என்று விசிலராலும், கின்னோர் என்ற பறவை ஆர்வலராலும் பெயரிடப்பட்டது.சலீம் அலி பாம்பே இயற்கை வரலாறு நிறுவனத்தின் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை பறவைகள் பற்றி அறிவை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியதோடு,விழிப்புணர்வையும் உண்டாகியது.அவர் எழுதிய பல படைப்புகள் இன்னும் அச்சிடப்படாமலேயே உள்ளன.

1930ல் அவர் எழுதிய ‘Stopping by the Woods on a Sunday Morning என்ற கட்டுரை 1984ல் அவருடைய பிறந்தநாளன்று ‘ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் மறுபடியும் வெளியிடப்பட்டது.
PART-7

சலீம் அலியின் படைப்புகளிலேயே மிகவும் புகழ் பெற்ற புத்தகமான ‘ The Book of Indian Birds விசிலர் எழுதிய ‘ Popular handbook of birds’ என்ற நூலின் பாணியில் எழுதப்பட்டது. 1941ல் வெளிவந்த இந்தப் புத்தகம் உடனடியாக 46000 பிரதிகள் விற்றுத் தீர்ந்ததுடன், பல இந்திய மொழிகளிலும், அயல் நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

1964ல் சலீம் அலி எழுதத்தொடங்கி 1974ல் நிறைவு செய்த பத்து தொகுதிகள் அடங்கிய, பறவைகள் பற்றி அறிவியல் உலகின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் The Hand Book of birds of india and Pakistan என்ற புத்தகத்தின் முதல் பதிப்பு இன்றும் போற்றி பாதுகாக்கப்படுகிறது. இந்த நூலின் இரண்டாம் பதிப்பு அவருடைய மறைவுக்கு மற்றவர்களால் Edit செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சலீம் அலி பல பிராந்திய பறவை ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். அவை ‘The Birds kutch’, “Indian hill birds” , ‘The birds of kerala’ , “The birds of Sikkim” , “Hand Book of Indian Birds’  போன்றவை ஆகும். இது தவிர சலீம் அலி சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் “ Commom Birds” என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்த நூல் இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நூல் ஆகும். இந்தப் புத்தகம் தேசீய புத்தக நிறுவனத்தால் National Book Trustடால் வெளியிட்டப்பட்டது. இது போன்ற விலை மலிவான பல நூல்களையும் எழுதி வெளியிடப்பட்டு உள்ளது.

1985ல் சலீம் அவருடைய தன் வாழ்கை வரலாறு நூலான The Fall of Sparrow நூலை எழுதினர். இந்தப் புத்தகத்திற்கு அலி இவ்வாறு பெயர் வைத்தது அவருடைய வாழ்வின் திசையையே மாற்றிவிட்ட காட்டுக்குருவி என்ற மஞ்சள் நிற தொண்டைப்பகுதியுள்ள குருவி ( Yellow Throted Sparrow ) நினைவாக இருக்கலாம்.

பாம்பே இயற்கை வரலாறு நிறுவனத்தின் நெடுநோக்கு பார்வையைப் பற்றியும் அவர் எழுதியுள்ளார்.அதில் அவர் பறவைகளை வேட்டையாடிக் கொன்ற காலம் சிறுது சிறிதாக மாறி பறவைகளையும் பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு வருவதைப் பற்றி 1986ல் அந்த நிறுவனத்தின் வெளியிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

சலீம் அலி எழுதிய எழுத்துக்கள் மற்றும் கடிதங்களின் தொகுப்பு அவருடைய கடைசி மாணவர்களில் ஒருவரான தாரா காந்தி என்பவரால் தொகுத்து 2007ல் வெளியிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அரசு சலீம் அலியை தனது நாட்டின் ‘சுற்றுச்சூழல் காவலனாக’மதித்துப் போற்றியது. Feburary 19, 1976 உலக ஐம்பது வருடகால உழைப்பாலும்,பனியாலும் இந்திய மக்களிடையே இயற்கை வளங்களைப் போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பி இந்தியாவின் எல்லையற்ற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மனப்பக்குவத்தை தோற்றுவித்துள்ளிர்கள்.

பூக்களையும், சரனாளையங்களையும் இந்தியாவின் குறுக்கும், நெடுக்கும் அமைக்க பெருமுயற்சி எடுத்துள்ளிர்கள். அரசாங்கத்தின் உயர்மட்டம் முதல் இந்தியாவின் குக்கிராமத்தின் சாதாரண பாமரன்வரை இந்த உணர்வை ஏற்படுத்தியது உங்களின் பெரும் சாதனையாகும். உங்களுடைய “The Book of Indian Birds” என்ற புத்தகமே ஒரு இயற்கை வரலாற்றுப் பெட்டகம் ஆகும். உங்கள் இந்தியாவின் நீள, அகலங்களில் எல்லாம் நன்கு அறியப்படும் ஒரு பெயர் ஆகும்.

பறவை ஆராய்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த சலீம் அலி என்ற மனிதகுலத்தின் மகத்தான உயிர்ப்பறவை 1987 ஜுன் 20ம் நாள் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பூமிக்கூட்டை நிரந்தரமாகப் பறந்துபோனது. பறவைகள் ஆராய்ச்சியில் உலகத்தின் முன்னால் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்கவைத்த அந்த மாமனிதன் “இந்தியாவின் பறவை மனிதன் “ என்று போற்றப்படுவது பொருத்தமானதே.

ஒரு சிறிய காட்டுக் குருவியின் கண்களில் வீசிய கடைசி நிமிஷ ஒளிபட்டு தன் வாழ்க்கையே அந்தப் பறவைகளின் உலகத்திற்காக ஒளி உமிழும் மெழுகாக மாற்றிக்கொண்ட அந்த மனிதனை இந்தியர்களாகிய நாம் விடிகாலையில் நம்மை எழுப்பும் காக்கை குருவிகளில் இருந்த இரவின் தனிமையில் இருக்கும்போதும் வானில் குரல் எழுப்பிச் செல்லும் ராத்திரி பறவைகள் வரை ஒவ்வொரு பறவையைப் பார்க்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு நவம்பர் 12ம் வாழ்வின் முக்கிய நாள் ஆகும். அன்றுதானே சலீம் அலி என்ற மனிதப் பறவை சிறகுகள் விரித்து வலசை வரும் பறவை போல விண்ணுலகில் இருந்து பூமிக்கு இறங்கி வந்தது.
 
                                         - பறவை பறந்து விட்டது.



No comments:

Post a Comment