Showing posts with label சரோபாஜி மன்னர். Show all posts
Showing posts with label சரோபாஜி மன்னர். Show all posts

Wednesday, 26 April 2017

பட்டாம்பூச்சிகள்- (Butterflies)




இன்றைய நாட்களில் எந்த பறவை, பூச்சிகளை வேண்டுமென்றாலும் கேமராவில் படம் எடுத்து சேகரிக்கலாம். ஐம்பது, நூறு வருடங்கள் முன்பு நிலைமை அப்படி இல்லை என்று அனைவரும் அறிவோம். அதே 200 வருடம் முன்பு? அப்பொழுது வாழ்ந்த தஞ்சை மன்னர், தன் நூலகத்தில் வரையப்பட்ட பட்டாம்பூச்சி படங்களை  வைத்திருந்தார். தஞ்சை சரோபாஜி மன்னர் பார்த்த பட்டாம்பூச்சி புத்தகம் இன்று சென்னை அருங்காட்சியத்தில் இருக்கிறது.

மிக தெளிவாக வரையப்பட்ட படங்கள். பொக்கிஷம் என்று சொல்வோமே அது போல் பாதுகாகப்படுகிறது. இரண்டு முறை பட்டாம்பூச்சி பார்பதற்கு சென்றிருந்தாலும், பட்டாம்பூச்சி பற்றி அதிகம் தெரியாது, இருந்தாலும் சேகரித்து வைத்துகொண்டால் தெரிந்த பிறகு பயன்படும் என்று மொபைலில படம் எடுத்துவிட்டேன்.