வாழிட அழிப்பால், எந்த அளவுக்கு பறவைகளை
பாதிக்கிறது என்பதை நிறைய கட்டுரைகளில் படித்துள்ளேன். ஆனால் அந்த அவல நிலையை நேரடியாக பார்த்தபிறகு, பறவைகளை பிச்சை எடுக்க
விட்டுள்ளார்கள் இன்றய நாகரீக மனிதர்கள்.
ஒரு காலைப்பொழுது, நீர்நிலைகளை தவிர்த்து, கட்டடங்கள் நிறைந்து
இருக்கும் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் ஒரு செயலுக்காக விஜயகுமார் சார், உமேஷ் சார், சுடர் மற்றும் புவன்யா, யுவன் மற்றும் அடியேனும்
சென்றபொழுது, வண்டியை அங்கிருந்த
காலிமனை முன்பு நிறுத்திவிட்டு நடக்க
தொடங்கியத்தில், சிறிது தூரத்தில் கோழி
ஒன்று, வீட்டின் முன்பு மேய்வது போல் இருந்தது. உற்று நோக்கியத்தில் அவை
தாழைக்கோழி(Moorhen) என்று தெரியவந்தது.
