பறவைகள் தொடர்பாக
புத்தகங்கள் சிறிது சிறிதாக அதிகரித்து வரத்தொடங்கி உள்ளது. அப்படி வந்துள்ள ஒரு
புது புத்தகம் “தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்”- ஆசிரியர் ஏ.சண்முகானந்தம், முனைவர் சா.செயக்குமார். தமிழகதில்
உள்ள அணைத்து பறவை காப்பிடங்கள்(சரணாலயம்) பற்றி மிக விரிவாக தெரிந்துகொள்ள வந்திருக்கும்
முதல் புத்தகம் என்று சொல்லலாம்.
Thursday, 26 April 2018
Tuesday, 10 April 2018
Azeez உடன் சந்திப்பு
![]() |
| அணிவகுப்பு |
காலை ஆறு மணிக்கு மேல்
எப்பொழுது வேண்டுமென்றாலும் வாருங்கள் என்று சொன்னார். இன்று காலை ஏழு மணிக்கு
அவர் வீட்டின் முன்பு சென்றபொழுது வெளியே நின்று கொண்டிருந்தார். சிட்டுக்
குருவிக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி அவற்றுக்கு தேவையான தினையை ஒரு
கிண்ணத்தில் வைத்துவிட்டு அருகில் வந்தவரிடம், எவ்வளவு வருடங்களாக இங்கு சிட்டுக் குருவிகளை பார்த்து வருகிறிர்கள்
என்று கேட்டதற்கு பத்து வருடங்களாக என்ற அவரின் பதிலால், நிறைய அனுபவம் அவரிடம் இருக்கும்
என்று தோன்றியது.
பட்டினப்பாக்கம்,
கடற்கரையை ஒட்டிய அடுக்க மாடி(Housing Board) குடியிருப்பில்
முதல் மாடியில் இருக்கும் அவர் வீட்டின் வரண்டாவில் ஒரு குருவி கூண்டை
வைத்துள்ளார் அங்கு நிறைய சிட்டுக் குருவிகள் வந்து அமர்ந்து தானியங்களை
சாப்பிடுவதை பார்த்து கொண்டே பேசினோம்.
இயக்குனர் ஹிட்ச்காக்கின் படமான “THE CROW” படத்தில் எப்படி வீட்டை சுற்றி காகங்கள் இருக்குமோ அதே போல் இவர் வீட்டை சுற்றி சிட்டுக் குருவிகளே.
இயக்குனர் ஹிட்ச்காக்கின் படமான “THE CROW” படத்தில் எப்படி வீட்டை சுற்றி காகங்கள் இருக்குமோ அதே போல் இவர் வீட்டை சுற்றி சிட்டுக் குருவிகளே.
Sunday, 1 April 2018
பறவை நோக்குதல்- 14 (Famous Bird watchers)
எவ்வளவு நாள்தான் பறவைகளை பற்றியே பேசி
கொண்டிருப்பது. அதனால் இந்த கட்டுரையில் பறவையாலர்களை பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
நமக்கு பறவை பார்ப்பது ஒரு வித
பொழுதுபோக்கு என்று கற்றுகொடுத்தது ஆங்கிலேயர்களாக இருக்கலாம். ஆனால் அதற்கு
முன்பே நம் முன்னோர்கள் மிக நுணுக்கமாக பறவையை பார்த்து உள்ளனர் என்பதை முண்டக்கன்னி
அம்மன் மேல் சத்தியம் செய்யலாம்.
பார்த்தது மட்டும் அல்லாமால் ஐம்பதுக்கும்
மேற்பட்ட பறவைகளை பாடல்கள் வழியாக பதிவும் செய்து வைத்து உள்ளார்கள்.
பள்ளி பாடபுத்தகத்தில் நாம் படித்திருப்போம் ஆனால் நினைவில்இருப்பதில்லை. ஒவ்வொரு பறவைக்கும் வட்டார பெயர் என்று ஒன்று உண்டு. அந்த அந்த பகுதிகளில் செல்லும்பொழுது தெரிந்து கொள்ளாலாம்.
Saturday, 24 March 2018
சிட்டுக் குருவி
சிட்டுகுருவி அளவே உள்ள
பறவை இனங்கள் நம் நாட்டில் நிறைய உண்டு. ஆனால் சிட்டுக்குருவியை மட்டும் நாம்
அதிகம் நேசிக்க காரணம்? அவை நம் வீட்டிற்குள்ளே வந்து நம் உணவுகளை சாபிட்டது,
வீட்டின் முற்றத்தில் தன் கூட்டை கட்டியது, அதன் கீச் கீச் குரல் நம் செவியில்
கேட்டுகொண்டே இருந்தது. இதனால் சிட்டுக் குருவியை நம் வீட்டின் உறுப்பினராகவே நாம்
ஏற்று கொண்டோம் இவையே மிக முக்கிய காரணம் ஆகும்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 20ம் தேதி சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. வேறு
எந்த பறவைக்கும் இது போல் ஓர் நாளை சிறப்பு தினமாக கொண்டாடுவதில்லை. இன்று,
சிட்டுக்குருவிகள் செல்போன் கதிர்வீச்சால் அழிந்து வருகிறது அதனால் பரவலாக நம் கண்
முன் விளையாடிய அந்த பறவைகள் இன்று இல்லை என்று பேசப்படுகிறது அவை உண்மையா? சென்னை
போன்ற நகரத்தில் சிட்டுக் குருவிகளை பார்ப்பதே கடினமாகிவிட்டது ஏன் ? சிட்டு
குருவிகள் தினத்தில் என்ன செய்யலாம் ?
Thursday, 1 March 2018
சென்னை நகரத்தில் ஒரு காடு
பேருந்து, விமானம்,
இரயில் இவற்றின் சத்தத்திற்கு நடுவில் ஒரு காடு தன் இயல்பு நிலையில் அதுவும்
அமைதியுடன் இருப்பது ஆச்சரியமே. கிண்டி சிறுவர் பூங்கா அனைவரும் அறிந்ததே. ஆனால் அவற்றை
ஒட்டி தொடங்கும் காடு பற்றி பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை.
மான், நரி, இரலை, அலங்கு, எண்ணற்ற உள்ளநாட்டு-வெளிநாட்டு
பறவைகள் என்று அனைத்தையும் அதன் வாழ்விடத்தில் பார்ப்பதற்கு ஏற்ற இடன் இந்த சிறு
காடு.
Monday, 26 February 2018
Sunday, 18 February 2018
பெரும்பாக்கம்- குளிர்காலத்தின் கடைசி மாதத்தில்
| சாம்பல் நாரை |
அதிக பறவைகள் பெரும்பாகத்தில் என்ற செய்தி அங்கு செல்லவேண்டும் என்ற
உந்துதலை உருவாக்கியது. இன்று அரவிந்த், மலைநாடன் மற்றும் அவர் மகன், கிஷோர், அமர்,
வினோத் குமார், நித்யானந்த் மற்றும் அவர் மாணவர்கள், லோகேஷ் பள்ளி மாணவன் என்று ஒரு
குழுவாக காலை ஏழு மணியளவில் ஏரியின் பாதையில் நின்றோம். நீர் போல் ஏரி முழுவதும்
பறவைகளால் நிரம்பியுள்ளதால் எங்கு இருந்துவேண்டுமென்றாலும் பார்க்க தொடங்கலாம்.
அதனால் நின்ற இடத்தில் இருந்தே மடையானை(Pond Heron) வரவேற்றோம்.
Tuesday, 2 January 2018
Round up-2017 : With birds and beyond.....
இந்த வருடம் என்ன
செய்தோம் என்று யோசித்ததில் ஓர் அளவுக்குதான் யோசிக்கமுடிந்தது. ஆனால் துல்லியமாக
யோசிக்க முடியுமா என்றால் சிரமமே. பறவைகள் பார்த்ததை குறிப்பதற்க்கென்று ஒரு Birding Planner வருட ஆரம்பத்தில்
வாங்கி குறித்து கொண்டு வந்தேன். அவற்றை எடுத்து பார்த்ததில் இந்த வருடம் என்ன
செய்தோம் என்பது துல்லியமாக தெரிந்துவிட்டது.
பறவைகளை பார்த்து
மட்டுமில்லமல் அவற்றை பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்துதியது,
சிட்டுகுருவி தினத்தின் கொண்டாட்டம்,
சென்னை பறவை பந்தயம்(Chennai
Bird Race), ஊர்புறத்து பறவைகள் கணக்கெடுப்பு(GBBC), இயற்கை, பறவை பற்றிய
கட்டுரைகள் எழுதியது, நிறைய புதிய பறவை மனிதர்கள் அறிமுகம், புதிய பறவைகளை(Lifer) பார்த்தது, பட்டாம்பூச்சி
பார்க்க ஒரு நடை, இயற்கை தொடர்பான புத்தகம் சேகரித்தல் என்று 2017யை
பொறுமையாக நடந்து, சில முறை ஓடி கடந்துள்ளேன்.
Monday, 25 December 2017
Thursday, 14 December 2017
புத்தகம்- வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்......
பறவை புத்தகங்கள் தமிழில்
குறைவு என்பது எப்படி உண்மையோ அதேபோல் நிறைய புதியவர்கள் எழுத வந்து கொண்டிருப்பதும்
உண்மையே. அப்படி ஒரு புதிய புத்தகத்தை சமிபத்தில் படிக்க நேர்ந்தது.
“வேட்டைக்கார ஆந்தையின்
தரிசனம்” என்ற தலைப்பு, கபாலிடா என்பது போல் உள்ளது. பறவைகளை பார்ப்பது, அவற்றை
தெரிந்து கொள்வது, விவாதிப்பது போல், பறவைகளின் வாழிட அழிப்பு அதனால் அவற்றின்
எண்ணிக்கை குறைதல் அல்லது முழுவதும் அற்று போதல் போன்றவற்றை பற்றி புத்தகத்தில் விரிவாக நா.வினோத் குமார்
எழுதி உள்ளார். இந்து தமிழ் நாளிதழில் பணிபுரியும் வினோத், உயிர்மூச்சு பகுதியில்
எழுதிய கட்டுரைகளை தொகுத்து, புத்தகமாக தந்துள்ளார்.
ஆரம்ப கட்டுரை கான மயில்
மற்றும் புத்தகத்தின் நடுவே ஒரு கானமயில்
கட்டுரை உள்ளது. இரண்டு கட்டுரையும் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று
கானமயிலை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கு முழுகாரணம் மனிதர்கள்தான் என்பது
இதில் சோகமே. பறவைகளின் வாழிடங்களை அழிக்காதிர்கள் அப்படி அழிக்காமல் இருந்தால்
பறவைகளே தன் வாழ்கையை பார்த்துகொள்ளும் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)



