"சூழலியலையும், சூழலியல் தரும் வாழ்வியலையும் அனுபவித்து உணர்ந்தவர்களே மகிழ்ச்சியான மனிதர்கள்!"
BIRDS SHADOW
வாருங்கள் கிளியின் கூட்டிற்கு சாப்பிட போவோம் ..........
Saturday, 21 June 2025
எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் - ஆதி வள்ளிப்பான் போட்டி கட்டுரைகள்
சூழலியல் புத்தக விமர்சன போட்டி -4 ( Aadhi Valliappan Books)
காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி நான்காவது மாத முடிவு (20 -MARCH -2025 TO 10-APRIL-2025)
Monday, 21 April 2025
பூச்சிகளின் தேசம் - கோவை சதாசிவம்
மனிதர்களின் தேசத்தில் பிறந்து மனிதர்களின் தேசத்தில் வாழ்ந்து மனிதர்களின் தேசத்தை எழுதி மனிதர்களின் தேசத்தை வாசித்து மனிதர்களின் தேசத்தை விமர்சித்துச் சலிப்பு ஏற்பட்ட நிலையில் 'பூச்சிகளின் தேசத்தை'க் கடந்து பூச்சிகளின் தேசத்தை அறிந்து வியந்து மனிதர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதம் ஒரு தொகுப்பைத் தந்துள்ளார் கோவை சதாசிவம்.
மனிதர்களைக் கவிதையாக்கியவர் பூச்சிகளைக் கட்டுரையாக்கியுள்ளார். பூமி என்பது அனைத்து உயிர்களும் வாழ்வதற்கானது. மனிதர் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே இயற்கையைச் சார்ந்து இயற்கையோடு இணைந்து இயற்கையாகவே வாழும் தன்மை உடையது. மனிதர் மற்றவைகளையும் வாழவிடுவதில்லை.
'பூச்சிகளின் தேசம் ' மூலம் பூச்சிகள் குறித்து ஆய்வு செய்து பூச்சிகள் வாழ வேண்டியவை, வாழ வேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளார்.
கரையான் குறித்து எழுதும் போது கரையான் புற்றைப் பேசியுள்ளார். ( கரையான் என்பதே சரி) புற்று என்பது புல், மரத்துகள், மண், கரையான் அமிலம் ஆகியவற்றால் உருவாக்கப் படுகிறது என்றும் பாம்புகளால் கட்டப்படுவதில்லை என்றும் மூடநம்பிக்கையை விளக்கியுள்ளார்.
Tuesday, 15 April 2025
சூழலியல் புத்தக விமர்சன போட்டி -3 ( KOVAI SADHASIVAM BOOKS)
காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி மூன்றாவது மாத முடிவு (20 -MARCH -2025 TO 10-APRIL-2025)
Saturday, 15 March 2025
புத்தக விமர்சன போட்டி -2
காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி இரண்டாவது மாத முடிவு
Tuesday, 18 February 2025
புத்தக விமர்சனப் போட்டி - 1
காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி முதல் மாத விவரங்கள்!
Friday, 31 January 2025
Birds In Winter
வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் தான் தமிழ்நாட்டு பத்திரிகைகளை குளிர்காலத்தில் சுறுசுறுப்பாகிவிடுகிறது.
அக்டோபர் மாதம் வந்தால் தவறாமல் நாளிதழ்களில், தொலைக்காட்சியில் வரும் செய்தி வேடந்தாங்கல் திறக்கப்பட்டது. வெளிநாட்டு பறவைகள் வர தொடங்கி உள்ளன என்று செய்தி போடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு பறவைகள் என்று நாம் நினைப்போம்.
ஆனால் உண்மை அப்படி இல்லை. அங்குள்ள பெரும்பாலான பறவைகள் உள் நாட்டு பறவைகள்.
வெளிநாட்டு பறவைகளுக்கும் வேடந்தாங்கல் திறப்பதற்கும் தொடர்பு இல்லை. ஒரு கட்டத்தில் குளிர்காலத்தில் தான் பறவைகள் இருக்கும் என்ற எண்ணமும் இந்த செய்திகள் ஏற்படுத்திவிடுகிறது. மற்ற எந்த மாதத்திலும் பறவைகளை குறித்து பத்திரிகைகள் செய்தி போடுவது இல்லை.
சரணாலயங்களில் கூடு கட்டி கொண்டு இருக்கும் பறவைகள் அனைத்தும் நம் நாட்டு பறவைகளே. வெளிநாட்டு பறவைகள் இங்கு கூடு கட்டுவதில்லை. இதை தெளிவாக புரிந்து கொண்டால் பத்திரிகை செய்திக்கும்- உண்மைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்வீர்கள்.
சரணாலயங்களில் உள்ள நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள் இரண்டும் கலந்து இருக்கும் பிரித்து பார்க்க தொடங்குவது மட்டுமே நம் வேலை.
அப்படி இந்த குளிர் மாதத்தில் சென்னை -சோழிங்கநல்லூர் சதுப்பு நிலத்தில் பறவைகள் அவதானிக்க சென்றோம். நிறைய சிறுவர்கள், பெரியவர்கள் வந்து இருந்தனர். கரையோர பறவைகள், நீரில் நீந்தும் பறவைகள், இரை கொல்லி பறவைகள் என்று கலவையாக இருந்தான.
இங்கு அனைத்து பறவைகளும் மிகுதியாக இருந்தன. புதியவர்களுக்கு இவை வெளிநாட்டு பறவைகள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது, அதனால் தொடக்கத்தில் சிறு அறிமுகம் கீழ் உள்ளது போல் கொடுத்தோம்.
பறவைகளை வீட்டு பக்கத்தில், வயல்வெளிகளில். நீர்நிலை அருகில், காடுகளில், மலைகளில், கடல் அருகில் என்று பார்க்க முடியும்.
நீர் நிலை பறவைகள் காடுகளுக்கு செல்லாது. காடுகளில் உள்ள பறவைகள் வீட்டு தோட்டத்தில் வருவதில்லை. அந்த அந்த வாழிடங்களில் அப்படியா வாழும். இங்கு நாம் நீர் நிலை பறவைகள் பார்க்க வந்து உள்ளோம். இந்த பறவைகள் மற்ற வாழிடங்களில் செல்வதில்லை.
ஏன் நீர்நிலை அருகில் பார்க்க வந்து உள்ளோம் என்றால் நிறைய பறவைகளை ஒரே இடத்தில் காண நீர்நிலை நல்ல இடம் ஆகும். மற்ற வாழிடங்களில் உள்ள பறவைகள் அதன் வாழிடங்களுக்கு சென்று பார்த்தால் இந்த அளவு ஒரே இடத்தில் காண முடியாது.
அதனால் புதியவர்கள் முதலில் நீர்நிலை அருகில் பறவைகள் பார்க்க தொடங்கினால் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும் அதனால் தான் நாம் இங்கு வந்து உள்ளோம் என்று அறிமுகத்துடன் பறவைகள் நோக்க தொடங்கினோம்.
இங்கும் உள்ள நாட்டு பறவைகள்-வெளிநாட்டு பறவைகள் கலந்து குதுகலமாக இருந்தன.
முதலில் எங்களுக்கு மிக அருகில் இருந்த தாழைக்கோழி கவனத்தை ஈர்த்தது. கூடவே உண்ணிக்கொக்கு. சிறிய கொக்கு, உள்ளான், காணங்கோழி கலந்து இருந்தன.
சாம்பல் நாரை, செந்நீல நாரை அருகில் அருகில் நின்று நோட்டம் விட்டன. சட்டென்று இரண்டு அரிவாள் மூக்கன் பறந்த எங்களுக்கு டா டா காட்டி சென்றது. கரண்டி வாயன் அதை கவனிக்காமல் அலகை நீரில் நுழைத்து துழாவிக் கொண்டு இருந்தன. தகைவிலான் காலை முதல் மாலை வரை பறந்து கொண்டே இருக்கும் என்ற செய்தி புதியவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. சில நேரம் மின்சார ஒயரில் நூற்றுக்கணக்கில் அமர்ந்து இருக்கும் அதையும் உங்கள் பறவை நோக்குதலில் காணலாம் என்று சொல்லி இருந்தோம்
சங்குவளை நாரை, கூழைக்கடா, பவளக் கால் உள்ளான் பறவைகள் ஏராளமாக இரை தேடி கொண்டும், நகர்ந்து அங்கு இங்கு செல்வதும் பிசியாக காணப்பட்டது. நாம் இப்போது வெளிநாட்டு பறவைகள் பாக்கம் கவனத்தை திருப்புவோம்.
ஊசிவால் வாத்து, தட்டை வாயன், சேற்று பூனைப்பருந்து முக்கிய இடத்தை பிடித்து இருந்தது. ஒவ்வொன்றின் அடையாளம்தான் பறவையை பிரித்து அறிய எளிமையாக இருக்கும்.
ஊசி போன்ற வால் நீண்டு இருப்பதை பார்த்தவுடன் இதை ஊசி வால் வாத்து என்றும், அலகு தட்டையாக நீந்தி கொண்டு இருக்கும் பறவைதான் தட்டை வாயன் என்று தமிழில் எளிமையாக இனம் கண்டு கொள்ள முடியும்.
இத்தகையை பறவைகளை பிடித்து உன்ன இதன் பின்னாலே வரும் சேற்று பூனை பருந்தின் வழக்கம். நாங்கள் பார்க்கும் போது நீர் இல்லாத நிலத்தில் நின்று நோட்டமிட்டு கொண்டு இருந்தன.
ஏறக்குறைய 30 வகை பறவைகள் கண்டு களித்தோம். நினைவில் உள்ளவற்றை குறிப்பிடுகிறேன்!
கதிர்குருவி
சிகப்பு மூக்கு ஆட்காட்டி
பவளக்கால் உள்ளான்
தாழைக்கோழி
அறிவாள் மூக்கன்
கரண்டிவாயன்
சாம்பல் நாரை
செந்நீல நாரை
பாம்புத்தாரா
வெண்மார்புக் கானாங்கோழி
இலைக்கோழி
கூழைக்கடா
வெண்மார்பு மீன்கொத்தி
நீலவால் பஞ்சுருட்டான்
உண்ணிக்கொக்கு
சிறிய கொக்கு
நடுத்தர கொக்கு
பெரிய கொக்கு
சங்குவளை நாரை
புள்ளி உள்ளான்
உள்ளான்
ஊசிவால் வாத்து
தட்டை வாயன்
சேற்று பூனை பருந்து
தகைவிலான்
சாம்பல் தலை ஆட்காட்டி
கரிச்சான்
மடையான்
புள்ளிமூக்கு வாத்து
Baillon's crake
ஒரே இடத்தில் இவ்வளவு பறவை வாகைகள் பார்க்க சிறந்த இடமாக நீர் நிலைகள் இருக்கிறது.
குளிர்காலம் இன்னும் இதில் சேர்ந்து கொள்வதால் பறவைகளுக்கும் கொண்டாட்டம் அதை
பார்க்கும் நமக்கும் கொண்டாட்டம்.
மீண்டும் ஒரு பறவை சந்திப்பில் சந்திப்போம் என்று கலைந்தோம். !
Monday, 9 May 2022
Fire of Sumatra
தீயை எதிர்கொள்ள, அணைக்க தெரிந்த மனிதர்களுக்குக் கூட தன் வீடு தீப்பற்றி எரிந்தால் பதைபதைத்துப் போய்விடுவான்.
பல குடிசைகள் எரிந்து சாம்பலானதைப் பார்த்து இருப்போம். ஆனால் தீயை எதிர்கொள்ளத் தெரியாத, அணைக்க தெரியாது விலங்குகள் வாழிடமான காடு தீ பிடித்தால் என்ன ஆகும்? மாண்டு போவதை தவிர வேறு வழியில்லை.
காட்டு தீ இரண்டு விதங்களில் ஏற்படுகிறது பலத்த காற்று வீசுவதால் மரங்கள் இடையே ஏற்படும் உராய்வால் தீ உருவாகும். இவை இயற்கையான ஒன்றாகும்.
இரண்டாவது மனிதர்கள் உருவாக்கும் தீ. செயற்கையான இந்த தீ காட்டில் வாழும் உயிரினங்களுக்கு இயற்கையாக உருவாகும் தீயை விடச் அதிக உயிர்ப் பலியை ஏற்படுத்துகிறது.
இதை மையப்படுத்தி சுமத்ரா காட்டில் மனிதர்கள் ஏற்படுத்தும் தீயால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிர்ச்சேதங்களைப் புலி அதன் 3 குட்டிகள் கொண்டு விவரித்து வெளிவந்து உள்ள நாவல்தான் “Fire of Sumatra”. ஆசிரியர் ரமணா கைலாஷ்.
Thursday, 21 April 2022
கோடையில் பறவைகள் அதிகம் இருக்கிறதா?
பணங்காடை |
பறவைகள் குளிர்காலத்தில் மட்டுமே மக்களுக்கு நினைவுக்கு வரும் அளவு நிலைமை இருந்தது. அதை ஒட்டியே பல பறவைகள் கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனால் குளிர்காலத்தில் பறவைகள் நிலைமை தெரிந்தது. ஆனால் கோடையில் பறவைகள் நிலை என்ன என்று
உள்ளூர் பறவைகள் நிலை என்ன? கோடையில் நீர் நிலைகள் வற்றி விடுவதால்
தமிழகத்தில் உள்ள 37
Sunday, 17 April 2022
ஜவ்வாது மலையில் - பறவை ஆர்வலர்கள் சந்திப்பு-2022
கரிச்சான் சிறிய பறவைதான் ஆனால் பெரிய வல்லூறு போன்ற இரைகொல்லி பறவைகளைத் துரத்தும் வல்லமை உண்டு. அந்த தைரியத்தில் மனிதர்களைக் கண்டாலும் பறந்து ஒளிவதில்லை. மலையில் பார்த்த துடுப்பு வால் கரிச்சான் பறவையும் எங்களைக் கண்டு மறைந்து கொள்ளவில்லை.. பறவைகள் பார்ப்பது சிறந்த பொழுதுபோக்கு என்றாலும் பறவைகள் குறித்துப் பேசுவது, விவாதிப்பது, பகிர்ந்து கொள்வதும் பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வு ஆகும். இவ்வளவும் இரண்டு நாட்கள் முழுவதும் செய்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நடந்தது காக்கைக் கூடு ஒருங்கிணைத்த “பறவை ஆர்வலர்கள் சந்திப்பு-2022 மார்ச் 26-27”.