காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி இரண்டாவது மாத முடிவு
வாருங்கள் கிளியின் கூட்டிற்கு சாப்பிட போவோம் ..........
காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி இரண்டாவது மாத முடிவு
காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி முதல் மாத விவரங்கள்!
வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் தான் தமிழ்நாட்டு பத்திரிகைகளை குளிர்காலத்தில் சுறுசுறுப்பாகிவிடுகிறது.
அக்டோபர் மாதம் வந்தால் தவறாமல் நாளிதழ்களில், தொலைக்காட்சியில் வரும் செய்தி வேடந்தாங்கல் திறக்கப்பட்டது. வெளிநாட்டு பறவைகள் வர தொடங்கி உள்ளன என்று செய்தி போடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு பறவைகள் என்று நாம் நினைப்போம்.
ஆனால் உண்மை அப்படி இல்லை. அங்குள்ள பெரும்பாலான பறவைகள் உள் நாட்டு பறவைகள்.
வெளிநாட்டு பறவைகளுக்கும் வேடந்தாங்கல் திறப்பதற்கும் தொடர்பு இல்லை. ஒரு கட்டத்தில் குளிர்காலத்தில் தான் பறவைகள் இருக்கும் என்ற எண்ணமும் இந்த செய்திகள் ஏற்படுத்திவிடுகிறது. மற்ற எந்த மாதத்திலும் பறவைகளை குறித்து பத்திரிகைகள் செய்தி போடுவது இல்லை.
சரணாலயங்களில் கூடு கட்டி கொண்டு இருக்கும் பறவைகள் அனைத்தும் நம் நாட்டு பறவைகளே. வெளிநாட்டு பறவைகள் இங்கு கூடு கட்டுவதில்லை. இதை தெளிவாக புரிந்து கொண்டால் பத்திரிகை செய்திக்கும்- உண்மைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்வீர்கள்.
சரணாலயங்களில் உள்ள நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள் இரண்டும் கலந்து இருக்கும் பிரித்து பார்க்க தொடங்குவது மட்டுமே நம் வேலை.
அப்படி இந்த குளிர் மாதத்தில் சென்னை -சோழிங்கநல்லூர் சதுப்பு நிலத்தில் பறவைகள் அவதானிக்க சென்றோம். நிறைய சிறுவர்கள், பெரியவர்கள் வந்து இருந்தனர். கரையோர பறவைகள், நீரில் நீந்தும் பறவைகள், இரை கொல்லி பறவைகள் என்று கலவையாக இருந்தான.
இங்கு அனைத்து பறவைகளும் மிகுதியாக இருந்தன. புதியவர்களுக்கு இவை வெளிநாட்டு பறவைகள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது, அதனால் தொடக்கத்தில் சிறு அறிமுகம் கீழ் உள்ளது போல் கொடுத்தோம்.
பறவைகளை வீட்டு பக்கத்தில், வயல்வெளிகளில். நீர்நிலை அருகில், காடுகளில், மலைகளில், கடல் அருகில் என்று பார்க்க முடியும்.
நீர் நிலை பறவைகள் காடுகளுக்கு செல்லாது. காடுகளில் உள்ள பறவைகள் வீட்டு தோட்டத்தில் வருவதில்லை. அந்த அந்த வாழிடங்களில் அப்படியா வாழும். இங்கு நாம் நீர் நிலை பறவைகள் பார்க்க வந்து உள்ளோம். இந்த பறவைகள் மற்ற வாழிடங்களில் செல்வதில்லை.
ஏன் நீர்நிலை அருகில் பார்க்க வந்து உள்ளோம் என்றால் நிறைய பறவைகளை ஒரே இடத்தில் காண நீர்நிலை நல்ல இடம் ஆகும். மற்ற வாழிடங்களில் உள்ள பறவைகள் அதன் வாழிடங்களுக்கு சென்று பார்த்தால் இந்த அளவு ஒரே இடத்தில் காண முடியாது.
அதனால் புதியவர்கள் முதலில் நீர்நிலை அருகில் பறவைகள் பார்க்க தொடங்கினால் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும் அதனால் தான் நாம் இங்கு வந்து உள்ளோம் என்று அறிமுகத்துடன் பறவைகள் நோக்க தொடங்கினோம்.
இங்கும் உள்ள நாட்டு பறவைகள்-வெளிநாட்டு பறவைகள் கலந்து குதுகலமாக இருந்தன.
முதலில் எங்களுக்கு மிக அருகில் இருந்த தாழைக்கோழி கவனத்தை ஈர்த்தது. கூடவே உண்ணிக்கொக்கு. சிறிய கொக்கு, உள்ளான், காணங்கோழி கலந்து இருந்தன.
சாம்பல் நாரை, செந்நீல நாரை அருகில் அருகில் நின்று நோட்டம் விட்டன. சட்டென்று இரண்டு அரிவாள் மூக்கன் பறந்த எங்களுக்கு டா டா காட்டி சென்றது. கரண்டி வாயன் அதை கவனிக்காமல் அலகை நீரில் நுழைத்து துழாவிக் கொண்டு இருந்தன. தகைவிலான் காலை முதல் மாலை வரை பறந்து கொண்டே இருக்கும் என்ற செய்தி புதியவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. சில நேரம் மின்சார ஒயரில் நூற்றுக்கணக்கில் அமர்ந்து இருக்கும் அதையும் உங்கள் பறவை நோக்குதலில் காணலாம் என்று சொல்லி இருந்தோம்
சங்குவளை நாரை, கூழைக்கடா, பவளக் கால் உள்ளான் பறவைகள் ஏராளமாக இரை தேடி கொண்டும், நகர்ந்து அங்கு இங்கு செல்வதும் பிசியாக காணப்பட்டது. நாம் இப்போது வெளிநாட்டு பறவைகள் பாக்கம் கவனத்தை திருப்புவோம்.
ஊசிவால் வாத்து, தட்டை வாயன், சேற்று பூனைப்பருந்து முக்கிய இடத்தை பிடித்து இருந்தது. ஒவ்வொன்றின் அடையாளம்தான் பறவையை பிரித்து அறிய எளிமையாக இருக்கும்.
ஊசி போன்ற வால் நீண்டு இருப்பதை பார்த்தவுடன் இதை ஊசி வால் வாத்து என்றும், அலகு தட்டையாக நீந்தி கொண்டு இருக்கும் பறவைதான் தட்டை வாயன் என்று தமிழில் எளிமையாக இனம் கண்டு கொள்ள முடியும்.
இத்தகையை பறவைகளை பிடித்து உன்ன இதன் பின்னாலே வரும் சேற்று பூனை பருந்தின் வழக்கம். நாங்கள் பார்க்கும் போது நீர் இல்லாத நிலத்தில் நின்று நோட்டமிட்டு கொண்டு இருந்தன.
ஏறக்குறைய 30 வகை பறவைகள் கண்டு களித்தோம். நினைவில் உள்ளவற்றை குறிப்பிடுகிறேன்!
கதிர்குருவி
சிகப்பு மூக்கு ஆட்காட்டி
பவளக்கால் உள்ளான்
தாழைக்கோழி
அறிவாள் மூக்கன்
கரண்டிவாயன்
சாம்பல் நாரை
செந்நீல நாரை
பாம்புத்தாரா
வெண்மார்புக் கானாங்கோழி
இலைக்கோழி
கூழைக்கடா
வெண்மார்பு மீன்கொத்தி
நீலவால் பஞ்சுருட்டான்
உண்ணிக்கொக்கு
சிறிய கொக்கு
நடுத்தர கொக்கு
பெரிய கொக்கு
சங்குவளை நாரை
புள்ளி உள்ளான்
உள்ளான்
ஊசிவால் வாத்து
தட்டை வாயன்
சேற்று பூனை பருந்து
தகைவிலான்
சாம்பல் தலை ஆட்காட்டி
கரிச்சான்
மடையான்
புள்ளிமூக்கு வாத்து
ஒரே இடத்தில் இவ்வளவு பறவை வாகைகள் பார்க்க சிறந்த இடமாக நீர் நிலைகள் இருக்கிறது.
குளிர்காலம் இன்னும் இதில் சேர்ந்து கொள்வதால் பறவைகளுக்கும் கொண்டாட்டம் அதை
பார்க்கும் நமக்கும் கொண்டாட்டம்.
மீண்டும் ஒரு பறவை சந்திப்பில் சந்திப்போம் என்று கலைந்தோம். !
பல குடிசைகள் எரிந்து சாம்பலானதைப் பார்த்து இருப்போம். ஆனால் தீயை எதிர்கொள்ளத் தெரியாத, அணைக்க தெரியாது விலங்குகள் வாழிடமான காடு தீ பிடித்தால் என்ன ஆகும்? மாண்டு போவதை தவிர வேறு வழியில்லை.
காட்டு தீ இரண்டு விதங்களில் ஏற்படுகிறது பலத்த காற்று வீசுவதால் மரங்கள் இடையே ஏற்படும் உராய்வால் தீ உருவாகும். இவை இயற்கையான ஒன்றாகும்.
இரண்டாவது மனிதர்கள் உருவாக்கும் தீ. செயற்கையான இந்த தீ காட்டில் வாழும் உயிரினங்களுக்கு இயற்கையாக உருவாகும் தீயை விடச் அதிக உயிர்ப் பலியை ஏற்படுத்துகிறது.
இதை மையப்படுத்தி சுமத்ரா காட்டில் மனிதர்கள் ஏற்படுத்தும் தீயால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிர்ச்சேதங்களைப் புலி அதன் 3 குட்டிகள் கொண்டு விவரித்து வெளிவந்து உள்ள நாவல்தான் “Fire of Sumatra”. ஆசிரியர் ரமணா கைலாஷ்.
பணங்காடை |
பறவைகள் குளிர்காலத்தில் மட்டுமே மக்களுக்கு நினைவுக்கு வரும் அளவு நிலைமை இருந்தது. அதை ஒட்டியே பல பறவைகள் கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனால் குளிர்காலத்தில் பறவைகள் நிலைமை தெரிந்தது. ஆனால் கோடையில் பறவைகள் நிலை என்ன என்று
உள்ளூர் பறவைகள் நிலை என்ன? கோடையில் நீர் நிலைகள் வற்றி விடுவதால்
தமிழகத்தில் உள்ள 37
கரிச்சான் சிறிய பறவைதான் ஆனால் பெரிய வல்லூறு போன்ற இரைகொல்லி பறவைகளைத் துரத்தும் வல்லமை உண்டு. அந்த தைரியத்தில் மனிதர்களைக் கண்டாலும் பறந்து ஒளிவதில்லை. மலையில் பார்த்த துடுப்பு வால் கரிச்சான் பறவையும் எங்களைக் கண்டு மறைந்து கொள்ளவில்லை.. பறவைகள் பார்ப்பது சிறந்த பொழுதுபோக்கு என்றாலும் பறவைகள் குறித்துப் பேசுவது, விவாதிப்பது, பகிர்ந்து கொள்வதும் பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வு ஆகும். இவ்வளவும் இரண்டு நாட்கள் முழுவதும் செய்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நடந்தது காக்கைக் கூடு ஒருங்கிணைத்த “பறவை ஆர்வலர்கள் சந்திப்பு-2022 மார்ச் 26-27”.
![]() |
Cedar Waxwing |
ஒவ்வொரு வருடமும் குளிரைப் பொருட்படுத்தாமல் இந்த அழகிய பறவையைக் காணச் செல்ல நான் தயங்குவதில்லை.
![]() |
White-crowned sparrow |
வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாநிலத்தையும் தென் கனடாப் பகுதியையும் பிறப்பிடமாகக் கொண்டுள்ள இந்தச் சிட்டுகள், குளிர்காலம் நெருங்கும் போது தெற்கு நோக்கி வலசை வருகின்றன.
இவற்றை செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கலிபோர்னியாவில் பூங்காவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் புதர்க் காடுகளிலும் புல் வெளிகளிலும் காணமுடியும். இந்தப் பறவைகள் பெரும் பான்மையான நேரம் நிலத்தை அல்லது இலை,சருகுகளைக் கிளறி விதைகளை உண்கின்றன. தளிர் இலைகளையும் பூக்களையும் விருப்பமாக உண்கின்றன. சிறிது ஆரவாரம் கேட்டாலும் ஒன்றாகப் பறந்தோ அல்லது புதருக்குள் மறைந்தோ போய் விடுகின்றன.
கோடைக்காலத்தில் புழு, பூச்சிகளை உண்கின்றன.
பொதுவாக White-crowned Sparrowவும் Golden-crowned Sparrowவும் கூட்டாகச் சேர்ந்து இரை தேடுவதைக் காணலாம்.
இந்தச் சிட்டுகளை எளிதாக இனம் கண்டு கொள்ள
முடியும்.
ஹெர்மிட் த்ரஷ், வட அமெரிக்காவில் காணப்படும் பாடும்
பறவைகளின் இனத்தைச் சார்ந்தது. கோடைக்காலத்தில், ஊசிஇலைக்காடுகளிலும் (Coniferous forests) மரங்கள் நிரம்பிய காடுகளிலும் வாழ்கிறது.
குளிர்காலம் தொடங்கும் போது உணவிற்காகவும் கடுமையான குளிரைத் தவிர்க்கவும் தெற்கு நோக்கி
வலசை செல்லும். அப்போது தனக்குச் சாதகமான அமெரிக்க மாநிலங்களில் தங்கி விட்டு, கோடையில்
அதன் இருப்பிடம் சென்று இனப் பெருக்கம் செய்யும்.
இந்தச் சிட்டு, உருவத்தில் அமெரிக்கன் ராபின் பறவையை
விடச் சற்றுச் சிறியது. ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போல் காணப்படுகின்றன.
ஹெர்மிட் த்ரஷின் தலை, முதுகு, சிறகுகள் வெளிறிய
பழுப்பு நிறத்திலும் வெண்மையான கழுத்து, மார்புப் பகுதிகள் கறுப்பு நிறப் பொட்டுகளுடனும்,
அதன் நீண்ட வால் துறுசிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. அந்தப் பறவையின் கருப்புக்
கோலிக் குண்டு போன்ற கண்களைச் சுற்றியுள்ள வெண் நிற வட்டம், அதற்குக் களங்க மற்ற தோற்றத்தைக்
கொடுக்கிறது.
இனப் பெருக்கக் காலத்தில் ஆண் பறவை, மரங்கள் அடர்ந்த அமைதியான காட்டிலிருந்து அதிகாலையிலும் அந்தி நேரத்திலும்
பெட்டையைக் கவரவும் தன் எல்லையைப் பாதுகாக்கவும் எதிரிகளை எச்சரிக்கவும் பாடுகிறது.
அதன் பாடல், புல்லாங்குழல் இசை போன்று இனிமையாகத் தொனிக்கிறதென்றும் மனித இசையை ஒத்திருக்கிறதென்றும்
பறவையியலாளர்களும் இயற்கையியலாளர்களும் இசைப்பிரியர்களும்
நம்பினர். ஆகையால் ஒரு சமயத்தில் இதனை “வட
அமெரிக்காவின் நைட்டிங்கேல்” என்று அழைத்தனர்.
இந்தப் பறவையின் குரல் இனிமைக்காகவே வெர்மான்ட் (Vermont) மாநிலம், இந்தப் பறவையைத் தங்கள் மாநிலப்
பறவையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
வட அமெரிக்காவில் மூன்று வகைத் த்ரஷ் பறவைகள் காணப்பட்டாலும் ஹெர்மிட்
த்ரஷ் பறவையின் பாடல்கள்தான் உயர்ந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். 2014ஆம் ஆண்டு, Emily Doolittleலும் (a composer at Cornish College of the Arts, in Seattle,USA) அவருடைய சக ஊழியர் Tecumseh Fitchஉம்(a biologist at the University of Vienna) ஆண் ஹெர்மிட் பறவைகளின் பாடல்களைப் பதிவு
செய்து ஒலிப்பதிவுக்கருவி (Spectrogram) மூலம்
ஆராய்ந்த போது இவற்றால் ஏழு முதல் பதின்மூன்று பாடல்கள் வரை பாட முடியும், ஒரு முறை
பாடும் பாடலை மறுபடியும் உடனடியாகப் பாடுவதில்லை, ஒரு பறவை பாடும் பாடலை இன்னொரு பறவை
பாடுவதில்லை என்றும் இந்தப் பறவைகள் பாடும்போது, குரலை உயர்த்தி, தாழ்த்தி தாளம் தவறாமல்
பாடுகின்றன என்றும் பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் “The melodies of the hermit thrush follow the
same mathematical principles that underlie many musical scales. The males favor
harmonic chords similar to those in human music” என்றும் பதிவிட்டுள்ளனர்.
வலசை வரும் போது இந்த Super singer, பாடாவிட்டாலும் எங்கள் தோட்டத்திற்கு வருகை தருவதைப் பெருமையாகக் கருதுகிறேன்!!
- சற்குணா பாக்கியராஜ்
References
Emily L. Doolittle, Bruno Gingras, Dominik M. Endres, and W. Tecumseh Fitch: Overtone-based pitch selection in hermit thrush song: Unexpected convergence with scale construction in human music PNAS November 18, 2014 111 (46) 16616-16621
Helen Thompson: This
Bird’s Songs Share Mathematical Hallmarks with Human Music
The
hermit thrush prefers to sing in harmonic series, a fundamental component of
human music, SMITHSONIANMAG.COM, NOVEMBER 3, 2014.
Susan Shea: The Twilight Singer: The Hermit Thrush, May29th
2017.