Friday, 24 March 2017

சென்னையில் சூறைக் குருவிகள் ( Rosy Starling)



தூரத்தில் ஆல  மற்றும் அரச மரம்
பத்து வருடமாக இங்கு போலிஸ் வேலையில்  இருக்கிறேன் ஆனால் இது போல் ஒரு முறையும் பார்த்ததில்லை மனைவி, பிள்ளைகள் மற்றும் தெரிந்தவர்கள் என்று அனைவரையும் அழைத்து வந்து காண்பித்துவிட்டேன் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகிறார்கள் ஏன் என்னுடைய உயர் அதிகாரி இங்கு தான் நடைபயற்சி செய்வார் இவற்றை பார்த்துவிட்டு யாரும் இங்கு சத்தம் எழுப்ப கூடாது என்று சொல்லிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன் அந்த அளவுக்கு இந்த பறவைகள் இங்கு வசிக்கும் அனைவரையும் தன் பக்கம் இழுத்து கொண்டது என்றார்.

Monday, 20 March 2017

சிட்டு குருவிகள் தினம் - March 20



Chennai-Besant Nagar
மேல் இருந்து விழுந்த சிட்டு குருவியின் குஞ்சை எடுத்து மீண்டும் அதன் கூட்டில்  விடுவதற்கு பெரியவர்களை தேடிக்கொண்டிருந்தேன் கடைசியில் மாமா வந்தார் குட்டியை அதன் கூட்டில் விட்டு விடுங்கள் என்றேன் சரி என்று அதை எடுத்து கூட்டில் விடும்பொழுது பறவை குஞ்சுகள் கீழே விழுந்து விட்டால் அதன் தாய் மீண்டும் கூட்டில் சேர்க்காது அதனால் இந்த குஞ்சை கீழே தள்ளிவிடும் என்றார். அவை உண்மையா இல்லையா என்று அப்பொழுது தெரியாது மாமா சொன்னபடி மீண்டும் அவை கீழே விழுந்ததா என்றும் நினைவில் இல்லை. இது நடந்தது தொன்னூறு காலகட்டத்தில்.

Sunday, 19 March 2017

சூறைக் குருவிகளின் நடனம் (Rosy starling)


ஆயிரகணக்கான சூறைக் குருவிகள் சென்னை கிண்டியில் நடணம் ஆடும்பொழுது எடுக்கபட்ட வீடியோ.

-செழியன் 

lapwing2010@gmail.com





Tuesday, 28 February 2017

பறவை நோக்குதல்- 9 - Raptors



கருடன்-விக்கிபீடியா
இரைகொல்லிகள்(Raptors) என்றால் ? 

பறவை நோக்குதலில் இரைகொல்லிகள்(Birds of Prey) என்று அழைக்கப்படும் கழுகு, பருந்து, வல்லூறு, ராஜாளி, வைரி, பாறு கழுகுகள், ஆந்தை போன்ற பறவை வகைகளுக்கு என்று தனி பிரிவே உள்ளது. இவை அனைத்தையும் ராப்டர்ஸ் (இரைகொல்லிகள்) என்று பொது பெயரில் ஆங்கிலத்தில் அழைப்பதுண்டு. இவ்வகை பறவைகள் உணவுக்காக மற்ற விலங்குகளை கொன்று சாப்பிடும் பழக்கமுடையது (உதாரணம்: எலி, தவளை, பாம்பு, ஓணான், மீன், சிறு பறவை, பறவை குட்டிகள் போன்றவற்றை சாப்பிடும்). பறவை நோக்குதலில் இவ்வகை பறவைகளை தனித்து கவனிக்கப்படுகிறது. இரைகொல்லிகள் பறவைகளுக்கு என்றே நிறைய ஆங்கில புத்தகங்கள் தனியாக வெளிவந்துள்ளது.

இரைகொல்லிகள் பறவைகளை பார்ப்பதற்கென்றே நிறைய பறவை சங்கங்கள், தனி மனிதர்கள் உண்டு. இவ்வகை பறவைகளை தொடர்ச்சியாக பார்த்து அராய்ச்சி செய்வதற்கு உலகம் முழுவதும் நிறை அமைப்புகள் செயல்படுகிறது. பறவை நோக்குதலில் நாம் இவ்வகை பறவைகள் கண்டிப்பாக எதிர் கொள்வோம். காரணம், நாம் செல்லும் இடங்களில் பருந்து, வல்லூறு, வைரி போன்ற இரைகொல்லிகள் பறவைகளை காணமுடியம். அதனால் இவ்வகை பறவைகளை தெரிந்து கொண்டால்தான் நம்மால் சுலபமாக இனம் காண முடியும்.


Tuesday, 31 January 2017

பறவை நோக்குதல்- 8 (Birds Order - Family)

பறவை புத்தகங்களில் பறவைகள் மற்றும் அதன் தொடர் வகைகள் என்று விவரித்து எழுதியிருப்பார்கள். உதாரணம் Egret எடுத்து கொண்டால் உன்னிகொக்கு(Cattle Egret),சிறிய கொக்கு(Little Egret), நடுத்தர கொக்கு(Intermediate Egret), பெரிய கொக்கு(Large Egret) இதே போல் Heron எடுத்து கொண்டால் மடையான்(Pond Heron), இராகொக்கு(Night Heron), சாம்பல் நாரை(Grey Heron), செந்நாரை(Purple Heron) என்று அதன் தொடர்ச்சியை பார்க்க முடியும் ஆனால் பறவை நோக்குதல் என்ற இந்த தொடரில் பறவை வகைகள் தொடர்ச்சியாக இல்லமால் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் இருப்பதுபோல் காணப்படும்.

காரணம் ஒன்றும் இல்லை. தொடர் எழுதும்பொழுது அந்த தலைப்புக்கு ஏற்ற பறவைகளை சொல்வதால் பறவைகளின் தொடர்ச்சி விடுபடுகிறது. 

ஆரம்பகாலத்தில் பறவைகளை பிடித்து அல்லது கொன்று பாடம் செய்து அதன்பின் ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் வரும். ஆனால் டிஜிட்டல் மயமான இப்பொழுது பறவைகள துல்லியமாக படம் எடுத்து அவற்றை பின் தொடர்ந்து, காட்டிலேயே தங்கி  கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். பறவைகளை கொல்வது முற்றிலும் இப்பொழுது இல்லை என்றே சொல்லலாம் எந்த பறவை ஆர்வலரும் பறவைகளை கொல்வது ஏற்றுகொள்ளகூடிய செயல் என்று சொல்லமாட்டார்கள்.

Saturday, 14 January 2017

Amur Falcon Film by Shekar Dattatri


Amur falcon- wiki

ரஷ்யா மற்றும் மங்கோலியாவில் இருந்து கிளம்பி இந்தியாவில் நாகலாந்து வழியாக நம்முடைய தென்மாநிலமான ஆந்திராவை கடந்து சோமாலியா சென்று பின் தென்னாபிரிக்கா வரை வலசை செல்லும் பறவைதான் Amur Falcon. ஒருவருடத்தில் 23000 கிலோமீட்டர் வரை பறக்கிறது. 

கிளம்பும்பொழுது ஆனந்தமாக கிளம்பும் Amur Falcon இந்தியாவை கடக்கும்பொழுது அந்த ஆனந்தம் சரிபாதியாக குறைந்துவிடுகிறது.
 
காரணம் நாகலாந்து ?

ஏறக்குறைய 25 நிமிட படம் அதில் மிக சரியாக Amur Falcon படும் துன்பங்கள் அதனால் பல விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு எப்படி காப்பாற்றுபட்டுள்ளன என்று விரிவாக விவரிக்கிறது குறும்படம்.

Saturday, 31 December 2016

பறவை நோக்குதல்- 7 : Wader Birds




உயிர் வாழ்வதற்கு எங்கு வேண்டுமென்றாலும் செல்லுவோம் என்று பறவைகள் தங்கள் இடத்தை விட்டு கிளம்பிவிடுகிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாசகம் மனிதர்களுக்கு பொருந்துதோ இல்லையோ ஆனால் பறவைகளுக்கு கண்டிப்பாக பொருந்துகிறது.

Suggestion:

ஆரம்பத்தில் புதியவர்களால் பறவைகளை இனம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் ஏறக்குறைய பறவைகள் எல்லாம் ஒன்று போலவே தெரியும். புத்தகத்தை வைத்து அவற்றை சரிசெய்யலாம் என்றாலும் நாம் நேரில் பார்க்கும் பறவையின் நிறத்திற்கும் புத்தகத்தில் இருக்கும் பறவையின்  நிறத்திற்கும் பெரும்பாலும் சிறு சிறு வேறுபாடு இருக்கவே செய்யும். அதனால் புத்தகத்தின் மூலம் நம்மால் ஐம்பது சதவிகிதம் மட்டுமே கற்றுக் கொள்ளமுடியும்.

சிறந்த வழி என்றால் பறவை நிபுணர்களுடன் சென்று பறவைகளை பார்ப்பது தான். சுலபமாக கற்றுகொள்ள முடிவது மட்டுமில்லாமல் நிறைய தகவல்களும் தெரிந்து கொள்ளமுடியும். அதனால் புதியவர்கள் பறவை நிபுணர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, சென்று பாருங்கள். கோயில் போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லும் அமைப்புகள் போல சில அமைப்புகள் பறவை நோக்குவதற்கு என்று பிரத்தியோக ஏற்பாடு செய்கிறது அவர்களுடனும் செல்லலாம்.


Thursday, 15 December 2016

வடுவூர் பறவைகள் சரணாலயம்




Entrance Without Name Board
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பெரும்பாலான மக்கள் செல்லவில்லை என்றாலும் அந்த சரணாலயத்தை பற்றி பரவலாக மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவற்றை தவிர நம் ஊருக்கு அருகில் பறவைகள் சரணாலயம் இருந்தாலும் யாருக்கும் தெரிவதில்லை என்பதை தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் வடுவூர் பறவைகள் சரணாலயம் என்று கேட்டால் ஒருத்தர் கோடியக்கரை சரணாலயமா என்றார், பஸ் நடத்துனர் அந்த ஏரியா என்கிறார், இன்னும் சிலபேருக்கு ஊரை தெரிந்து இருக்கிறது ஆனால் சரணாலயம் தெரியவில்லை.

வடுவூர் பறவைகள் சரணாலயம், “ப” வடிவத்தில் நம்மால் சென்று பார்க்கும் வகையில் உள்ளது.அவ்வளவு தொலைவு (தஞ்சாவூர் சென்று வடுவூர்) சென்றதிற்கு பலன் இருந்தது. ஏரியில் நீர் நிறைய இல்லை என்றாலும் நிறைய பறவைகளை பார்க்க முடிந்தது.

கழுத்து மிக நீளமாக, மஞ்சள் அலகுடன் பெரிய கொக்கை எனக்கு அருகில் நிறைய இந்த

Wednesday, 30 November 2016

பறவை நோக்குதல் – 6 வலசை பறவைகள் (Migration Birds)



செங்கால் நாரை வலசை -விக்கிபீடியா
பறவைகள் எந்த அளவுக்கு மனிதர்களுக்கு முக்கியம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பவம் - சீன அதிபர் மாவோ இந்த நாட்டில் இருக்கும் குருவிகள், எலிகள், கொசுக்கள் அழித்து விடுங்கள் என்று ஒரே இரவில் உத்தரவு போட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் விவசாயிகளுக்கு தொந்தரவு தருகிறது.

சொன்னது போல் குருவிகளை சுட்டு வீழ்த்தினார்கள். அதன் விளைவு தெரியாமல் இருக்குமா? சில வருடங்கள் பிறகு நான்கு கோடி மக்கள் இறந்த பிறகே அரசுக்கு தெரியவந்தது குருவிகளை அழித்ததால் மனிதர்கள் இறந்தார்கள என்று. சலீம் அலி சொன்ன மனிதர்கள் இன்றி பறவைகள் வாழலாம் ஆனால் பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது என்ற வாசகம் நூறு சதவிகிதம் சரியாக பொருந்தியது மாவோட செயலால்.

Sunday, 20 November 2016

TAMIL BIRDERS MEET – 2016



இந்த குளத்தில் நிறைய பவளக்கால் உள்ளான், மடையான், உண்ணிக் கொக்கு இருப்பதை பார்க்க முடிந்தது. இரவிலும் பார்த்து பறவைகள் இருப்பதை உறுதி செய்துகொண்டேன் ஏன்னென்றால் இந்த குளத்தின் மேல்தான் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அமைந்து உள்ளது.

என்னுடைய வாட்சப்பில் ஒரு வாசகம் இப்படி இருந்தது - அணுகுண்டு போட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று நீங்கள் (மனிதர்கள்) பயப்படுகிறீர்கள் அதே பட்டாசு வெடித்தால் எங்கள் (பறவைகளுக்கு) உயிருக்கு ஆபத்து