Monday, 29 April 2019

Reserved Forest-பூசிமலை குப்பம்



கோடைக் காலம், பசுமையைப் போக்கி வெண்மையைக் கொண்டு வந்துவிடுகிறது. காப்புக்காடுகள் அதில் தப்பவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து உள்ள பூசிமலைக்குப்பம்  காப்புக்காட்டுக்குக்  காலை 6 மணியளவில் சென்றபொழுது  பசுமை இல்லா காட்டை பார்க்க முடிந்தது.

Blue-faced malkoha

பச்சை வாயன் (Blue-faced malkoha):

முதலில் வரவேற்ற பறவையாகும். கூச்ச சுபாவம் உடைய இந்த பறவை மிக அருகிலிருந்தபொழுதும் சிறிதும் நகராமல் ஒரு சிறு செடியில் விளையாடிக் கொண்டிருந்தது. முதன் முதலாக ராஜபாளையத்தில் இந்த பறவையைப் பார்த்தபொழுது இலைகள் அடர்ந்த மரத்தில் நமக்கு தெரியாதவாறு இருந்தது. இருந்தாலும் அங்கேயே ஒரு மணிநேரம் அமர்ந்து  முடிந்த அளவு பார்த்துவிட்ட நகர்ந்தோம். ஆனால் அப்படியே இங்கு தலைகீழ். இங்கும் நீண்ட நேரம் அதன் அருகிலிருந்தே பார்த்து நகர்ந்தோம். 

Wednesday, 10 April 2019

மயில் நமது தேசீயப் பறவை..(Indian peafowl)


    

உசிரவீரம் என்ற மலையின் கீழ் இருந்த ஆசிரமத்தில் மருத்தன் என்ற பெயர் உடைய அரசர் ஒரு சமயம் ஒரு யாகம் நடத்தினார்..  யாகத்தில் கலந்துகொள்வதற்காக ரிஷிகளும், இந்திரஉலகத்தில் இருந்து தேவர்களும் வந்துசேர்ந்தார்கள்..  யாகத்தை முறியடிப்பதற்காக இலங்கையின் அதிபதியான ராவணனும் ஆசிரமத்துக்கு வந்துசேர்ந்தான்.  

Saturday, 6 April 2019

வனச் சுற்றுலா.. (Forest Tour)


     

சமீபகாலங்களாக வனங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வனவிலங்குகளால் பாதிக்கப்படுவது  பற்றிய செய்தி அடிக்கடி வெளிவருகிறது..  வனங்கள் வனவிலங்குகளுக்கு உரிய வாழிடம் ஆகும்.  ஆனால், இதை உணராத சுற்றுலா செல்லும் பலரும் வனவிலங்குகளை பாதிக்கும்வகையில் செயல்படும்போது வனவிலங்குகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மோதல் ஏற்படுகிறது.  தேசீய அளவில் ஒவ்வொருவருடமும் 15% அளவுக்கு வளர்ச்சி அடைவதாகக் குறிப்பிடப்படும் ஒரு துறை ஆகும் சுற்றுலாத்துறை..  பொதுவாக தென்னிந்தியாவில் இந்த வளர்ச்சி விகிதம் ஏறக்குறைய 10% என்று கூறப்படுகிறது. 

Monday, 1 April 2019

வண்ண வண்ண நிறங்களுடன் ஒரு அற்புதப் பறவை (Flame-throated bulbul)



புல்புல்கள் பெரும்பாலும் வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படும் பறவைகள் ஆகும்.  உண்மையில் தென்னிந்தியாவில் சுலபமாகவும், பல இனங்களாகவும், இந்தப்  பகுதி வனங்களில் காணப்படும் ஒரு பறவை இனம்தான் இவை.  ஒவ்வொரு வனப்பகுதியிலும் ஒன்றிரண்டு ரக புல்புல்கள்  பல சிறப்பம்சங்களுடன் இருப்பதைக் காணமுடியும்.  அந்த வனத்தின் மொத்தப் பறவைகளிடையே இவை ஆதிக்கம் செலுத்துவதாகவும் சில பகுதிகளில் காணப்படுகின்றன. 

  பசுமை மாறாக் காடுகள் முதல் வறண்ட முள் காடுகள் வரை பலவிதமான காடுகளிலும், சில சிறப்பு பண்புகளுடன் காணப்படக்கூடிய புல்புல்கள் காணப்படுகின்றன.  நம் காட்டுப்பகுதிகளில் வாழ்ந்துவரும் எல்லோராலும் விரும்பக்கூடிய ஒரு பறவை இனமே புல்புல்கள் ஆகும்.  மணிகண்டன் என்ற செல்லப்பெயருடன் ஒரு இன புல்புல் பறவை கேரளாவில் அதிகமாகக் காணப்படுகிறது.  இது உண்மையில் ஒரு காட்டில் வாழும் பறவையே ஆகும்.  ஆனால், இந்த ரகப் புல்புல்கள் பசுமை மாறாப் பகுதிகளையும், சோலைகளையும் விட்டுவிட்டு இலையுதிரும் காடுகளிலும், நட்டு வளர்க்கப்பட்ட மரங்களைக் கொண்ட காட்டுப்பகுதிகளிலுமே இவை அதிகமாக வாழ விரும்புகின்றன. 

   
Photo-wikipidea

Sunday, 31 March 2019

செல்போன் கோபுரங்கள் அழிக்காத சென்னை சிட்டுக்குருவிகள்


இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை வகைகள் இருந்தாலும், சில ஆண்டுகளாக சிட்டுக்குருவியைப் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக செல்போன் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி அழிந்து வருகின்றன என்ற ஆதாரமற்ற தகவல் வேகமாகப் பரவிவருகிறது. உண்மையில் சிட்டுக்குருவியைவிட உருவில் பெரிய பல பறவை வகைகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றன.
சென்னை போன்ற மாநகரங்களில்கூட அந்த பறவைகளைப் பார்க்கலாம். அவை எல்லாம் வாழும்போது சிட்டுக்குருவி மட்டும் அழிந்து வருகிறது என்று கூறப்படுவது உண்மையா என்பதை ஆய்வு நடத்தித் தெரிந்துகொள்ள முற்பட்டோம். அந்த ஆய்வின் முடிவில் சென்னையிலிருந்து சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன அல்லது வெளியேறிவிட்டன என்ற தகவலில் உண்மை இல்லை என்று தெரிந்துகொண்டோம்.

Thursday, 10 January 2019

கெட்டுஅள்ளி-தருமபுரி (Dharmapuri)


தென்னை மரத்திலிருந்த இரைகொல்லி பறவையான வல்லூறு, நீண்ட நேரம் அமர்ந்து இருந்ததைப் பள்ளி மாணவ-மாணவிகளும் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு மாணவர், தினமும் பள்ளி விட்டுச் செல்லும்பொழுது இந்த பறவையைப் பார்ப்பதாகவும் ஆனால் பெயர் தெரியாது என்று சொன்னார். அவர்களுக்கு அவைதான்  முதல் பறவை பார்த்தால் ஆகும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுஅள்ளி ஊரில் இருக்கும் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுடன் பறவைகள் பார்த்தபொழுது பேசப்பட்ட வார்த்தைகள் ஆகும்.

Saturday, 20 October 2018

நாமக் கோழியும், குஞ்சுகளும்


Photo by Marianne Taylor, UK,
இருபது வருடங்களுக்கு முன்பு வெளி வந்த “The Life of Birds” by Sir. David Attenborough-வின் ஆவணப் படத்தில் நாமக் கோழி தன் குஞ்சுகளைக் கொல்லுவதைப் பலர் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். "உணவு பற்றாத காலத்தில் வளருவதற்குச் சக்தியற்ற  குஞ்சுகளைப் பெற்றோர் நாமக்கோழிகள் கொன்று விடுகின்றன" என்று அப்போது நம்பப்பட்டது. "நாமக் கோழி உண்மையாகத் தன் குஞ்சுகளைக் கொல்லுமா?" என்ற கேள்விக்கு விடையை அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்ப்போமா?

Saturday, 1 September 2018

செஞ்சிக்கு வாங்க... சின்னானைப் பாருங்க..

மஞ்சள் தொண்டை சின்னான் (Yellow-throated bulbul), தென் இந்தியாவில் மட்டுமே காணப்படக்கூடிய பறவை. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, செஞ்சி மலை, வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் பார்க்க முடியும்.

‘இங்கெல்லாம் சென்றால், பார்க்க முடிகிற பறவையா மஞ்சள் தொண்டை சின்னான்?’ என்றால், சிறிது சிரமமே! காரணம் மலை அடிவாரத்தில் பறவையைப் பார்க்க முடிவதில்லை. மலைகளின் மேல் காணப்படக்கூடிய பறவை என்பதால், மலை மேல் சென்று அமைதியாக அமர்ந்துகொண்டால், சிறிது நேரத்தில் பார்க்க முடிகிறது. செஞ்சியில் இதுபோலவே செய்தோம்.

Friday, 24 August 2018

உயிர் இதழ் அறிமுகம் - சூழியலாளர் நக்கீரன்

உயிர் இதழ் வெளியீடு 

உயிர் இதழ் தொடர்ந்து தனது அறிமுகத்தை பரவலாக்கி கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று சூழியல் எழுத்தாளர் திரு.நக்கீரன், உயிர் இதழை புத்ககக் கண்காட்சியில் வெளியிட்டார் இதழை மேடையில் பெற்றுக்கொண்டேன்.

வெள்ளிக்கிழமை மாலைபொழுது, புத்தகக்கண்காட்சியில் சூழியலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். பேச்சாளர்களாக திரு.நக்கீரன், திரு.நரசிம்மன், திரு.முருகவேல், திரு பகத்சிங் இவர்களுடன் திரு.சண்முகானந்தம், திரு.வள்ளியப்பன், திரு.வினோத்குமார் மற்றும் அடியேனும். என் அழைப்பை ஏற்று வந்திருந்த திரு.மாசிலாமணி, திரு.அரவிந்த்  இன்னும் நிறைய பேர்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது.