விலங்கு, பறவை
அடுத்து பூச்சிகள் நம்மைச் சுற்றி இருக்கும்
உயிரினம் ஆகும். உண்மையில் உலகில் மிக அதிகமாக இருக்கும் உயிரினமும் பூச்சிகள்
தான். நாம்
விரும்பாத உயிரினமும் பூச்சிகள் என்று சொல்லலாம்.
பூச்சிகள்
குறித்து புத்தகங்கள் தமிழில் மிக மிகக் குறைவாக வருகிறது. சமீபத்தில் வந்துள்ள புத்தகம்தான் “என்னைத் தேடி வந்த
சிற்றுயிர்கள்” -ஆசிரியர் ஆதி வள்ளியப்பன். எதிர் வெளியீடு
பறவைகள்
பார்க்க நாம் எங்கும் செல்லவேண்டாம் நம் வீட்டிற்கு வெளியே இருந்து
தொடங்கலாம். ஆனால் பூச்சிகள் பார்க்க இன்னும்
சுருக்கி நம் வீட்டிற்குள் இருந்தே தொடங்கலாம்.
ஆசிரியர்
தன் வீட்டிற்கு உள்ளே-வெளியே பார்த்த பூச்சிகளை மிக எளிமையாக, சரியான தமிழ்ப் பெயர்கள் மற்றும் அறிவியல்
பெயர்களையும் கொண்டு எழுதிச் செல்கிறார்..





