Thursday, 21 May 2020

என்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள்- ஆதி வள்ளியப்பன்




விலங்குபறவை அடுத்து பூச்சிகள் நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினம் ஆகும். உண்மையில் உலகில் மிக அதிகமாக இருக்கும் உயிரினமும் பூச்சிகள் தான்.  நாம் விரும்பாத உயிரினமும் பூச்சிகள் என்று சொல்லலாம்.

பூச்சிகள் குறித்து புத்தகங்கள் தமிழில் மிக மிகக் குறைவாக வருகிறது. சமீபத்தில் வந்துள்ள  புத்தகம்தான் “என்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள்” -ஆசிரியர் ஆதி வள்ளியப்பன். எதிர் வெளியீடு 

பறவைகள் பார்க்க நாம் எங்கும் செல்லவேண்டாம் நம் வீட்டிற்கு வெளியே  இருந்து தொடங்கலாம். ஆனால் பூச்சிகள் பார்க்க  இன்னும் சுருக்கி நம் வீட்டிற்குள் இருந்தே தொடங்கலாம். 

ஆசிரியர் தன் வீட்டிற்கு உள்ளே-வெளியே பார்த்த பூச்சிகளை மிக எளிமையாக, சரியான தமிழ்ப் பெயர்கள் மற்றும்  அறிவியல் பெயர்களையும் கொண்டு எழுதிச் செல்கிறார்..

Sunday, 3 May 2020

Lockdown



கடைசியாகப் பறவைகளுக்கும் 20 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இவை அமுலுக்கு வருகிறது. பறவைகள் மரத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. மரத்தில் இருக்கும் பழங்கள், அங்கு வரும் பூச்சிகள் போன்றவற்றை உண்ணவேண்டும். உங்கள் மரத்தில் வேறு பறவைகள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை எப்படி அனைத்து பறவைகளாகும் தெரிவிப்பது என்ற விவாதம் தொடங்கியது. மக்களிடம் இந்த பணியைக் கொடுத்துவிடுவோம் அவர்கள் அவங்க இடத்தில் இருக்கும் மரத்தில் சிறு தாளில் எழுதி ஒட்டிவிடவேண்டும். மரத்தில் இருக்கும் ஒரு மூத்த பறவையை மரத்தின் தலைவனாகக் கொண்டு அந்த பறவையிடம் சொல்லிவிடவேண்டும்.

அனைத்தும் தொலைக்காட்சியிலும் Breaking Newsஆக ஓடிக் கொண்டிருந்தது.

Tuesday, 14 April 2020

Therthangal Bird Sanctuary



“L” வடிவில் தேர்த்தங்கல் சரணாலயம் அமைந்துள்ளது. நாம் சென்று சேரும் இடம் இரண்டு கோடு சந்திக்கும் இடத்தில், ஒரு மத்தியபொழுது அந்த  சந்திப்பில் சென்று இறங்கினோம். சரணாலயம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளதால் நீர்ப் பறவைகள்-கரையோர பறவைகள் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தது.

நண்பர் மாசிலாமணியுடன் தேர்தங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றிவந்ததில் வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் இங்கு வந்தபிறகு அப்படித் தெரியவில்லை. நீர் சூழ்ந்த பகுதியில் பறவைகள் கொண்டாடமாக உள்ளது.

சத்தம் எழுப்பாத நத்தைகொத்தி நாரைகள் ஒரு மரத்தில் குவியலாக அமர்ந்து இருந்தது. பறவைகள் எப்பொழுதும்  தங்கள் இருப்பிடங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொள்கின்றன. இங்கேயும் அப்படியே பிரித்து எல்லைக்கோடுகளை அமைத்து இருந்தது. அனைத்து பறவைகளுக்கும் இந்த நீரில்தான் உணவு என்றாலும் ஒன்றுக்கு ஒன்று சண்டை இடுவதில்லை.

Saturday, 14 March 2020

Asian Openbill Stork (Uyir Magazine)


Openbill Stork
அலகு நீண்ட பறவை வகைகளில் நத்தைக்கொத்தி நாரை தனித்துவம்மிக்கது ஆகும்.  சில நேரம் இப்பறவையை பார்க்கும்பொழுது செங்கால் நாரை(white stork) ஒத்து காணப்படும்.  செங்கால் நாரையின் பிளவு இல்லாத அலகின் சிகப்பு நிறம்  வேறுபடுத்தி காட்டுகிறது. நீர் நிலைப் பறவையான நத்தை குத்திநத்தைக்கொத்தி நாரை, பெயருக்கு ஏற்றாற்போல் நத்தையை முதன்மை உணவாக உண்டு வாழ்கிறது.

இந்தியாவில் வாழக்கூடிய பறவையாகும். நத்தைக்கொத்தி நாரை பொதுவாக இடப்பெயர்ச்சி செய்யாது. தேவைப்படும்பொழுது மட்டும் வலசை செல்லும். நன்கு வளர்ந்த நாரையின் அலகு நடுவில் பிளவு இருப்பதை பார்க்கலாம். வளர்ந்து வரும் இளம்பறவைகளுக்கு இந்த பிளவு இருக்காது.  ஆண்-பெண் இரண்டும் ஒன்று போலவே இருக்கும்.  இனப்பெருக்க காலத்தில் நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்க்க முடியும்.

Tuesday, 9 July 2019

Bird Watching - பறவை நோக்குதல்


குளிர்கால மாதங்களில் சென்னையை சுற்றி பறவைகள் பார்க்கப்பட்ட இடங்கள் மற்றும் பறவை வகைகள் பற்றிய  இந்து தமிழ் நாளிதழில் சென்னையும் ஒரு வேடந்தாங்கள்தான் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை 

இணைப்பு :

https://tamil.thehindu.com/general/environment/article27244351.ece



Sunday, 16 June 2019

கணந்துள்--ஆள்காட்டி (Lapwing)


தமிழ் நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், “ஆள்காட்டிப் பறவை  என்றால், பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன் வரக்கூடும்.  ஏனென்றால்,  இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக் கொடுக்கும் இயல்புடையது. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலே வரும்போது இனம் கண்டு கொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காக்கக் கடுங்குரல் எழுப்புகின்றன. இவைகளின் அபயக் குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகி விடுகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களும் புகைப்படம் எடுக்க விரும்புவர்களும் இந்தப் பறவைகளை விரும்புவதில்லை.

சங்க இலக்கியத்தில், கணந்துள் பறவையைப் பற்றிய வர்ணனைகள், முக்கியமாகப் பறவையின் கால்கள், குரலின் தன்மைப் பற்றி இரண்டு பாடல்களில் காணலாம். இந்தக் கணந்துள் பறவைதான், “ஆள்காட்டிப் பறவைஎன்று P. L. சாமி, எழுதியுள்ளசங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்(p.147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

Sunday, 2 June 2019

Tiger census 2019 - புலிகள்: 2019


நிறையப் புள்ளி விவரங்கள் இந்தியாவில் எடுக்கப்படுகிறது அதில் அதிகம் மக்கள் கவனத்திற்கு வருவது இரண்டு மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புலிகள் கணக்கெடுப்பு ஆகும். மக்கள் தொகை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், புலிகள் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறுகிறது.

2006ஆம் வருடத்தில் இருந்து புலிகள் கணக்கெடுப்பு  நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்று இன்னும் அதன் முடிவுகள் வெளியிடவில்லைஅதற்குச் சொல்லப்படும் காரணங்கள், நிறையத் தகவல்கள் சேகரித்து உள்ளதால் அதனைச் சரிபார்ப்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும், புதிதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ள சில மாநிலங்களிடம் இருந்து புள்ளிவிவரம் கிடைப்பதற்குத் தாமதமானது அதனால் புதிய அரசாங்கம் அமைந்த பிறகே(ஜூன்2019) வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

இந்த முறை புலிகள்  சரணாலயங்கள் இருக்கும் 18 மாநிலங்களுடன், புதிதாகக்  குஜராத், நாகாலாந்து, மணிப்பூர்  மூன்று மாநிலங்களைச் சேர்த்து புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது மற்றும் ராயல் பெங்கால் புலி ஒரிசா மாநிலத்தில் நடமாடுவதைப் பதிவு செய்து உள்ளனர். இதற்கு முன்பு இங்கு பார்க்கப்பட்டதற்காகான் பதிவுகள் இல்லை.
Photo-Kalyanvarma

Monday, 27 May 2019

Bird Watching-Interview The Hindu



இந்து தமிழ் நாளிதழில் சிறுவர்கள் தங்கள் விடுமுறையை பயன் உள்ள வகையில் கழிப்பதற்கு பறவை நோக்குதல் மிக சிறந்த முறையாகும்.

பறவை நோக்குதல் பற்றி இந்து தமிழ் நாளிதழுக்கு கொடுத்த சிறு பேட்டி 





Monday, 20 May 2019

அந்த ஏழு நாட்கள்.....


தோட்டத்தில் 

கூகை(Barn Owl) இரவு பத்து மணியளவில் வீட்டு மாடியில் வந்து அமர்ந்ததுதான்  வீட்டு அருகில் எனக்கு முதல்  தரிசனம் ஆகும். பலமுறை வெளிநாட்டுப் பறவை என்றே பத்திரிக்கையில் படித்ததால் அவை வேறு நினைவுக்கு வந்து சென்றது.  பல வருடங்கள் முன்பு புள்ளி ஆந்தை, வீட்டிற்கு முன்பு இருக்கும் மின்கம்பியில் வந்து அமர்வதைப் பார்த்து உள்ளேன். வீட்டில் உள்ளவர்கள் சில நாட்கள் முன்பு கூகை வீட்டு முன் சுவரில் எட்டு மணியளவில் வந்து அமர்ந்து சில நிமிடங்கள் நகரவே இல்லை என்று தெரிவித்தார்கள். இப்பொழுதும்  வீட்டு அருகில் ஊர்வலம் சென்றவர்கள் வெடி வெடித்தார்கள் அதற்குக் கூட அசையாமல் மாடியில் அப்படியே இருந்தது. கிண்டி சிறுவர் பூங்காவில் இருக்கும் கூகை அமைதியே உருவாக இருக்கும். ஆனால் இங்குச் சுறுசுறுப்பாக இருப்பதற்கு அதன் வாழிடத்தில் இருப்பது அதிமுக்கிய காரணமாகும்.